பல வகையிலும் மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துள்ள மோதி அரசு அடையாளத்திற்காக நேதாஜியை தூக்கிப் பிடிப்பதாக காட்ட முயல்கிறது. குடியரசு அணிவகுப்பில் ஐஎன்ஏ வீரர்களை அமர்த்தி ராணுவ வாகனங்களை இயக்கியுள்ளது. முன்னதாக அந்தமானில் ரோஸ் தீவிற்கு நேதாஜியின் பெயரைச் சூட்டியுள்ளது. நேதாஜியின் மறைவு பற்றிய ஆவணங்களை வெளியிட்டது (அதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை). காங்கிரஸ், முந்தைய ஜனதாதள அரசுகளுடன் ஒப்பிடுகையில் இது பாராட்டத் தக்கதுதான் என்றாலும் உண்மையிலேயே நேதாஜிக்கு மரியாதை செலுத்துவது என்பது வேறு. குறைந்தபட்சம் இந்திய ராணுவத்திற்கு "இந்திய தேசிய ராணுவம்" என்ற பெயரைச் சூட்டி ராணுவத்தினருக்கு அளிக்கும் உயர் விருதுகளை நேதாஜியின் பெயரில் அறிவிக்க வேண்டும். படேலுக்கு சிலை அமைத்தது போல அல்லது அதற்கும் பெரிதாக சிலை அமைக்க வேண்டும். அதைவிட நாட்டை சோசலிச பாதையை நோக்கி நகர்த்த அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும். அதற்கு டெல்லியில் குவிந்திருக்கும் அதிகாரங்களை பரவலாக்க வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும். மொத்தத்தில் நேதாஜியை தூக்கிப் பிடிப்பது போல நடிப்பது கூடச் சிக்கல்தான். அவர் மிகவும் ஆபத்தான நபர் எதிரிகளுக்கு மட்டுமல்ல துரோகிகளுக்கும்தான். அவரது பெயரை தூக்கிப் பிடிப்பது இந்தத் துணைக்கண்டத்தில் பெரும் அரசியல் மாற்றங்களைச் செய்யும்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment