Tuesday, January 15, 2019

தமிழ் இனக்குழுக்களின் பாதுகாப்பே தமிழினப் பாதுகாப்பு!


சாப்பிட்டு கை கழுவி
சந்தைக்கு போய் வரேனுன்னு
சொல்லிப்புட்டு போனியேடி
ஞான தங்கமே!
போனவள வரக் காணோமே
ரத்தினமே கண்ணம்மா!

இந்தப் பாடல் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும். இது இம்மானுவேல் சேகரன் கொலையை குறிப்பிட்டுச் சொல்வதாக உள்ளது என்று சொல்கிறார்கள். இம்மானுவேல் சேகரன் சாதி வெறியால் கொல்லப்படவில்லை. அவர் காங்கிரஸின் அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார். இதை நாம் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் எடுபடுமா என்று தெரியவில்லை. ஆனால் உண்மை அதுதான்.

ஏனெனில், திராவிடத்திற்கும், திராவிடத்தின் புட்டிப்பால் புகட்டப்பட்ட தலித்திய அறிவாளிகளுக்கும் தமிழக இனக்குழு மோதல் தொடர வேண்டுமே ஒழிய நிற்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தமிழினம் வீரத்தோடு காதலைப் போற்றி வந்தாலும் அதுவே தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக அமையவில்லை. தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படையாக இனக்குழு என்ற சாதிகள் மட்டுமே அடிப்படையாக உள்ளன. அந்தக் கட்டமைப்பை அந்தந்த இனக் குழுக்கள் பாதுகாத்தால் மட்டுமே தமிழினம் பாதுகாக்கப்படும்.

அதைவிடுத்து தீண்டாமையை ஒழிக்க எந்தவித வலுவான நடவடிக்கையும் எடுக்காமல் பெண்களை கவர்ந்து அவர்களின் கருப்பை மூலமாக சமநிலையை அடைய வேண்டும் என்று தமிழ் இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருகிறது. பெண்களை கவருதல் என்பது போரில் தோற்ற நாட்டில் வெற்றி பெற்றவர்கள் செய்யும் அட்டூழியம் ஆகும். அதைத்தான் இன்று திராவிடமும் தலித்தியமும் தமிழகத்தில் அரங்கேற்றி வருகின்றன. இதையே தலித் மயக்கத்தில் உள்ள தமிழ் இனக்குழுக்களும் நம்பி பரப்பி வருகின்றன. அவர்களுக்கு ஊடகம் பெரும் ஆதரவாக உள்ளது. ஆனால் இதன் காரணமாகவே இன்று தமிழ்ச் சமுதாயம் ஆணவக் கொலை என்ற எதிர்வினையை ஆற்றி வருகிறது. தமிழினத்தின் மீது தீராப் பற்றும் பாசமும் வைத்துள்ள தலைவர்களால்தான் இது போன்ற நிலையை மாற்ற முடியும்.
இன்னமும் கடுமையான தீண்டாமை உள்ள வட மாநிலங்களில் இனக் குழுக்களுக்கிடையே எந்தவித பகையும் இல்லை. ஆனால் திராவிடம் தமிழகத்தில் இனக் குழுக்களுக்கிடையே கடும் பகையை ஏற்படுத்தி வைத்துள்ளது. திராவிடமும் திராவிட மூளைச் சலவைகளும் அழியும் காலம் நெருங்கி வருகிறது.

ஒவ்வொரு தமிழ் இனக் குழுவிற்கும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. தமிழினம் மீட்சி பெறும்! தமிழினம் வெல்லும்!



No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...