Wednesday, January 23, 2019

ஒரு தமிழர் எவ்வாறு தமிழரல்லாதவர் ஆகிறார்?


ஒரு தமிழர் எவ்வாறு தமிழரல்லாதவர் ஆகிறார் என்பதற்குச் சான்றுதான் இந்த காணொளி. ஒரு தெலுங்குப் பெண்ணை காதலித்து திருமணம் செய்வதில் தவறில்லை. அந்தப் பெண்ணைத் தமிழ் பேச வைக்காமல் இவர் தெலுங்கில் பேசுகிறார் பாருங்கள் அதுதான் முக்கியமான விஷயம். இவரே தெலுங்கு இப்படி பேசும்போது சிம்பு எப்படிப் பேசுவார் என்று பார்த்துக் கொள்ளுங்கள். சிம்புவிற்கு திராவிடர்கள் விருது கொடுத்த ரகசியம் இதுதான்.

இங்கே இன்னொரு விஷயமும் ஞாபகம் வருகிறது. 2010 வாக்கில் டி. ராஜேந்தர் தனது கடைசி படத்தை இந்தியில் விற்பனை செய்ய முயற்சியில் மும்பை வந்திருந்தார். அப்போது மும்பையில் உள்ள அவர் சார்ந்த உடையார் சாதியினர் அவரை ஹோட்டலில் சென்று சந்த்தினர். பின்னர், அவரை சந்தித்த உடையர் நண்பர்கள், அவர் தன்னை உடையார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று சொன்னார்கள். மேலும், அவர் திரையுலகில் பெரும் சாதனையாளரான தான் சர்வதேச அளவில் பயணித்துக் கொண்டிருப்பதாகும், தன்னை உடையார் என்று சொல்லி ஒரு கூட்டிற்குள் அடைக்க முயலாதீர்கள் என்று சொன்னதாக தெரிவித்தார்கள். இவரை எவ்வாறு தமிழர் என்று ஏற்பது?


https://www.youtube.com/watch?v=GtMsKEHcpsY&feature=youtu.be&fbclid=IwAR2z6v5twdN7YhS8IF7DvaOmg7-MW0STLzKIVnIzk7l6sgt41wjMV-Gnthc

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...