தன் மொழியை இழந்த ஒருவன் மாற்றான் மொழியை பழிப்பான், அழிப்பான்
என்பதில் ஆச்சரியமில்லை. இந்தியத்தில் திராவிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்
தமிழ் மொழியை, தமிழரை இழித்தும் பழித்தும் பேசுவதில் ஆச்சரியமில்லை.
இந்தியாவில் பின்னோக்கி சென்று பார்த்தால் இந்தியாவுக்கான
மொழி என்னவென்று தெரியும். ஜைன மதத்தை பிரச்சாரம் செய்த மகாவீரர் பேசிய மொழி
பிராகிருதம். பௌத்தத்தை போதித்த புத்தர் பேசிய மொழி பாலி. இந்து மதக் கடவுளான
கிருஷ்ணர் என்ன மொழியில் பேசினார் என்று தெரியாது.
இவர்கள் இருவருமே வாழ்ந்தது வட இந்தியாவில். குறிப்பாக
இன்று இந்தி பேசும் மாநிலங்களில். தமிழ்,
தெலுங்கு,
கன்னடம் தென்னாட்டில் இருப்பது போல அங்கு பிராகிருதமும், பாலியும்
இருக்க வேண்டும். ஆனால் தொடர்ச்சியான அந்நிய படையெடுப்புக்கள், அந்நிய
கலப்பு காரணமாக இந்த மொழிகள் அழிந்து விட்டன.
கடந்த 40 ஆண்டுகளில் வட இந்தியாவில் 70-க்கும் மேலான வட்டார மொழிகள் அழிந்து விட்டதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இன்றும்
சிறு சிறு கூட்டத்தினர் தங்கள் மொழிகளை கைவிட்டு வருவதாக அந்த ஆய்வு
தெரிவிக்கிறது. இவ்வாறு தங்கள் மொழியை இழந்த வட இந்தியர் இந்தியை தொடர்பு
மொழியாகவும், மற்ற மொழிகளுக்கு இணையான ஒரு தொன்மையான மொழி என்ற கணக்கில் சமஸ்கிருதத்தையும்
முன்னெடுக்கிறார்கள்.
உண்மையில் சமஸ்கிருதத்திற்கு உரிமை கொண்டாடவேண்டியவர்கள்
தமிழர்களே. எப்படி?
சமஸ்கிருதம் என்ற மொழி ஒருபோ தும் மக்களால் பேசப்பட்ட மொழி
அல்ல. அது அறிஞர்களால் உருவாக்கப்பட்ட மொழி. அதனால்தான் அது நேர்த்தியான மொழியாக
உள்ளது.
எதற்காக இந்த மொழி உருவாக்கப்பட்டது? வட
நாடு மற்றும் தென்னாட்டில் உள்ள அறிஞர்கள் தங்கள் படைப்புகளை பகிர்ந்துகொள்ள
உருவாக்கப்பட்டது. எனவே அது அறிஞர்களின் மொழி என்று கருதப்பட்டதில் மாற்றுக்
கருத்து இல்லை. தமிழ் அறிஞர்களும் சேர்ந்து உருவாக்கியது என்பதால் சமஸ்கிருதத்தில்
ஏராளமான தமிழ் வார்த்தைகள் உள்ளன.
தற்போது மொழியை இழந்து விட்ட வட நாட்டவர் அதை முழுவதுமாக
தங்கள் மொழி என உரிமை கொண்டாட முயல்கின்றனர். உண்மையில் மொழியை இன்றும்
உயிர்ப்புடன் வைத்துள்ள தமிழர்களே அதற்கு உரிமை கொண்ட வேண்டியவர்கள் ஆவர்.
இது ஒரு நிறுவனத்தை இருவர் கூட்டாக தொடங்குவதையும், ஒருவர்
அந்த உரிமைக்கான ஆதாரங்களை தொலைத்து விட்டதையும், மற்றவர் அந்த ஆதாரங்களுடன்
இருப்பதற்கு உவமையாகச் சொல்லலாம்.
ஆனால் நமக்கு இந்தி மொழியோடு, இந்து மத எதிர்ப்போடு, பிராமண
எதிர்ப்போடு சமஸ்கிருத எதிர்ப்பும் நமக்குள்ளே திணிக்கப்பட்டது. அதனால் காரணமே
இல்லாமல் நாம் சமஸ்கிருதத்தை வெறுத்து வருகிறோம். இந்தி எதிர்ப்பு நிலைப்பாடே ஏதோ
தமிழர்கள் அந்நிய மொழிகளையே அறியாதவர்கள் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம்
ஏற்படுத்தப்பட்டுள்ளளது. எல்லாம் பகுத்தறிவாளிகளின் கைங்கர்யம்.
பண்டை தமிழக துறைமுகங்களில் கிழக்காசிய நாடுகளின் மொழி
பேசக்கூடியவர்களை கொண்ட தனிச் சந்தையும்,
மேற்கு உலக நாடுகளின் மொழிகளை பேசக் கூடியவர்களை கொண்ட
தனிச் சந்தைகள் இருந்திருக்கின்றன. இன்றும் உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள்
அந்த பகுதிகளின் மொழிகளை சிறப்பாக பேசி வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே தமிழர்கள் தங்கள் மீது திணிக்கப்படும் மொழிக்
கருத்துக்களையும்,
கடிவாளத்தோடு மொழிகளை அணுகுவதையும் கைவிட வேண்டும். மொழி
அரசியலை தெளிவாக உணர்ந்துகொண்டு செயல்பட வேண்டும்.
http://perumalthevan.blogspot.in/2016/09/blog-post.html
No comments:
Post a Comment