Tuesday, September 20, 2016

கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று (20.09.2016) காலை பதினோறு மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக மத்திய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்காமல் நதிகளை தேசிய மயமாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திருப்பி பெற வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பி.சி.ஆர். எனும் வன்கொடுமை வழக்குகளை தொடர்ந்து சாதிக்கலவரத்தை ஏற்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தேவாரம் பொட்டிபுரத்தில் இயங்கவுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ரா. செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலாளரும், தேனி தெற்கு மாவட்ட பொதுச் செயலாளருமான ஆர். காசிராஜன் ஆகியோர் தலைமை வகித்து உரையாற்றினர், மாநில மகளிரணி அமைப்பாளரான திருமதி எம். லட்சுமி மாயாண்டி மற்றும் மாயாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் தேசிய துணைத் தலைவரும் மாநில பொதுச் செயலாளருமான திரு பி.வி. கதிரவன் கண்டன உரையாற்றினார்.

பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் என்ற முறையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன்.


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...