Monday, December 9, 2013

நாங்கள் யாருக்கு எதிரி?


நண்பர்களே, சொந்தங்களே,

அவ்வப்போது நான் போடும் தகவல்களைப் பார்த்து பலரும் குழம்பிவிடுகிறார்கள்.

1. பட்டியல் சாதியினரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் பட்டியல் சாதியினருக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

2. இஸ்லாமியரின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் இஸ்லாத்திற்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

3. நாத்திக பகுத்தறிவாளர்களின் போலித்தனத்தைப் பற்றி தகவல் போட்டால், நான் நாத்திக பகுத்தறிவாளர்களுக்கு எதிரானவன் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.


அவர்களுக்காகத்தான் இந்த விளக்கம்.

1. பட்டியல் சாதியினர் -
பட்டியல்சாதியினர் தங்கள் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். அல்லது அழித்து விடலாம். ஆனால் இவர்கள், மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துவிட வேண்டும் என்று சொல்வதுதான் ஏற்கத் தக்கதல்ல.

இதில் என்னச் சிக்கல் என்றால் மற்றவர்கள் அனைவரும் தங்கள் அடையாளத்தை இழந்து நிற்கும்போது பட்டியல்சாதியினர் மட்டும் அடையாளத்துடன் இருப்பர். இது அவர்கள் ஒற்றுமை, வலிமை, ஆதிக்கம் பெற்றவர்களாகவும் மற்றவர்கள் தங்கள் ஒற்றுமையை, வலிமையை, ஆதிக்கத்தை இழக்கச் செய்வதாகவும் அமையும்.

எனவே இது சமூக விரோத நிலை ஆகும். அதனால்தான் நாங்கள் அடையாள ஒழிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். பட்டியல்சாதியினருக்கு அல்ல.

பட்டியல்சாதியினருக்கு அரசாங்கம் சலுகை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இந்தச் சலுகைக்கான வரையறை என்ன? இந்தச் சலுகை எவ்வளவு காலம் கொடுக்கப்பட வேண்டும்? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த சலுகைகளுக்கான வரையறை இல்லாத காரணத்தால் மேலும் மேலும் பல்வேறு சலுகைகள் கோரப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தச் சலுகைகளுக்கு கால வரையறையும் இல்லை.

இதனால் என்ன பிரச்சனை ஏற்படும் என்றால், சலுகை பெறுவோர் வெறும் சலுகை காரணமாகவே சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையை அடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் சலுகையே ஒரு சமநிலையற்ற நிலைக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. சலுகைகளுக்கு காலவரையறை இல்லை என்பதால், ஒரு காலகட்டத்தில் இதுவும் சலுகை பெறாதோரை தாழ்ந்த நிலைக்குத் தள்ளும்.

தாங்கள் சலுகை மூலம் மட்டுமே சமநிலையை, முன்னேற்றம் அடைய முடியும்,  ஆதிக்கசாதியினரின் பெண்களை மணப்பதன் மூலம் மட்டுமே சமநிலை அடைய முடியும் என்பது போன்ற கற்பனையான, நடைமுறைக்கொவ்வாத கருத்துக்களை கொண்டிருக்கின்றனர். இது மேலும் அவர்களை ஆதிக்க சாதியினரிடமிருந்து பிரித்து வைக்கவே செய்யும். பெண்களை திருமணம் செய்து சமநிலை அடைவது என்பது வரதட்சணை வாங்குவதை விட கேவலமானதாகும்.  

நிலங்களை பிரித்துக் கொடுத்தால் தாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து விடுவோம் என்று சொல்கிறார்கள். இதுவும் ஏற்க  இயலாத கருத்தே. அரசாங்கம் கொடுக்கும் இலவச வீடுகளையே விற்பனை செய்து விடும் இவர்கள் நிலங்களை மட்டும் எப்படி வைத்திருப்பார்கள்?

பட்டியல்சாதியினருக்காக பேசுகிறேன் என்று பேசும் பிரதிநிதிகள்தான் இதுபோன்ற கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். எனவே அப்பாவி பட்டியல்சாதியினருக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை. நமக்கும் அவர்களுடன் எந்தப் பிரச்சனையுமில்லை.

2. இஸ்லாமியர் -

இஸ்லாமியரின் பிரதிநியாக காட்டிக் கொள்பவர்கள், இந்துவாக, சாதிகளில் இருப்பதே தவறு என்று கருதுகின்றனர். இந்து மதம் சாதிகளை ஊக்குவித்ததாகவும், சாதிகளில் இருப்போர் சாதிக் கொடுமைகள் செய்வதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இவர்கள் இஸ்லாம் மதத்தில் இருக்கும் பிரிவுகளை இவர்கள் ஏற்கத் தயாராக இருப்பதில்லை. சாதிக் கொடுமை பற்றி பேசும் இவர்கள் இஸ்லாமிய பிரிவினர் ஒரு பிரிவினர் மீது மற்ற பிரிவினர் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவதைக் கண்டுகொள்வதில்லை.

தங்கள் மதம் மட்டுமே சிறந்த மதம் என்ற முன்முடிவைக் கொண்ட இவர்கள் மற்ற மதங்களை கொள்கையளவில் கூட ஏற்கத் தயாராக இல்லை.

இஸ்லாம் சமத்துவத்தை அளிப்பதாக கூறும் இவர்கள் மற்ற மதத்தினரை சமமாக நடத்தத் தயாராக இருப்பதில்லை. இஸ்லாமியராக இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவர்களின் மதத்தைக் கூட நாம் தடுக்கவோ அழிக்கவோ விரும்பவில்லை. ஆனால் இந்துக்களாக இருப்பதே இவர்களுக்கு பிரச்சனை என்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள குறைபாடுகளை தங்கள் மதப் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொள்ள இவர்கள் விரும்புகிறார்கள். இந்து மதத்தின் மதம், அரசியல் என எல்லா கூறுகளையும் பேசும் இவர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடத் தயாராக இல்லை. குறிப்பாக இஸ்லாம் மதத்தின் பெயரால் பிரிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் பகுதிகளான பாகிஸ்தான், பங்களாதேஷ் பற்றி எதையும் பேசத் தயாராக இல்லை என்பதுதான் இவர்களின் போலித் தனத்தின் உச்சம்.

ஆனால், சாதாரண இஸ்லாமியர் மற்ற இந்துக்களோடு கலந்து சாதாரண தமிழர்களாகவே வாழ்ந்து வருகிறோம். அவர்களின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் இஸ்லாமியரின் போலித்தனத்தையே நாம் கண்டிக்கிறோம்.

3. நாத்திக பகுத்தறிவாளர்கள் -
உலகில் எந்த மதமும் ஏற்காத நாத்திகத்தை ஏற்றிருப்பது இந்து மதம் மட்டுமே. இந்து மதம் அத்தனை சுதந்திரமான மதம்.

ஆனால் தங்களை மட்டுமே பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நாத்திகர்கள், இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கையை மட்டுமே கேலி கிண்டல் செய்வது வினோதமானது.

நாத்திகர்கள் தங்கள் கருத்தில் இருப்பதில் நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்களின் ஒரே குறிக்கோள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பது என்பதுதான் நமக்கு அவர்களின் நிலை மீது ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது. இந்து மதத்தையும், சாதிகளையும் ஒழிப்போம் என்று கூறும் இவர்கள் மற்ற மதங்களையும் மதப் பிரிவுகளையும் ஒழிக்கத் தயாராக இருப்பதில்லை.

மேலும் இவர்கள் தீவிர இறை நம்பிக்கையாளர்களான இஸ்லாமியர், கிறிஸ்தவரிடம் வைத்திருக்கும் கூட்டு, மேலும் ஐயப்பாட்டை அதிகரிப்பதாகவே உள்ளது. எனவே நாத்திகத்திற்கு நாம் எதிரியல்ல. ஆனால் நாத்திகம் என்ற பெயரில் காட்டப்படும் போலித்தனத்திற்கு நாம் நிச்சயமான எதிரிகளாக இருப்போம்.

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...