டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்சியில் அமர வைத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரச் செய்ய வேண்டும்.
இது ஆம் ஆம்தி கட்சியின் திறமையை பரிசோதனை செய்வதற்கும், மக்களின் தீர்ப்பை தாங்கள் ஏற்றுக் கொண்டதை மக்களுக்கு காட்டவும் இது உதவும்.
அதேவேளையில் அவர்கள் தவறு செய்யும்போது கண்டிக்கவும் வாய்ப்புள்ளது.
அல்லது
கேஜ்ரிவாலுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து, அமைச்சரவையிலும் அவரது கட்சியினருக்கு பதவிகள் கொடுத்து ஆட்சியை பகிர்ந்துகொள்ளலாம். இதுவும் மக்களின் தீர்ப்பை ஏற்றதாகவே பொருள் தரும்.
அதேவேளையில் கொள்கைகளை இருதரப்பினரும் விட்டு கொடுத்து அல்லது பாதிக்கப்படாமல் ஒப்பந்தம் செய்துகொண்டு இதனைச் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment