Wednesday, July 4, 2012

சாதி ஒழிப்பு போராளிகளுக்கான தகுதிகள்




1.        சாதி ஒழிப்பு என்பது என்ன? அதற்கான சாத்தியக் கூறுகள் என்ன? அது மத ஒழிப்புடன் தொடர்பு கொண்டதுதானா? அதற்கான காலக்கெடு என்னஅதில் யாருக்கு என்ன பங்கு உண்டு? போன்றவற்றை தெளிவாக வரையறுத்து ஒரு வெள்ளை காகிதத்தில் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிரதியை இணையத்தில் போட வேண்டும்.
 
2.        தனது சான்றிதழில் சாதி பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால், ஒரு 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் தான், சாதி - மதங்களிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்து நோட்டரி செய்து அதை ஸ்கேன் செய்து இணையத்தில் போட வேண்டும்.


3.        சாதியில் இருந்து வெளியேற முடியாதவர்களை இழிவாக பேசுவதால் முதலில் இவர்கள் தங்களிடம் என்னென்ன தீய பழக்கங்கள் இருந்தன/ இருக்கின்றன. அவற்றை எப்படி/ எத்தனை காலத்திற்குள் விட்டார்கள்/ விட திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிவித்து அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும்.

4.        இவர்கள் தங்கள் உறவினர்கள்/ நண்பர்களிடம் சாதி ஒழிப்புக் கருத்துக்களை கூறி அதற்கு என்ன விதமான பதில் கிடைத்தது? அவர்கள் எத்தனை காலத்திற்குள் மாறத் தயார்/ எத்தனை பேர் மாறியுள்ளனர் என்று அறிவிக்க வேண்டும்.


5.        தங்களது சொந்த ஊரில், தாங்கள் குடியிருக்கும் தெருவில் சாதி ஒழிப்பு பிரச்சார கூட்டத்தை நடத்த வேண்டும். அந்த கூட்டத்திற்கு யார் யார் வந்தார்கள்? அவர்களது கருத்து என்ன என்று தெரிவிக்க வேண்டும். இதுபோல ஒரு வருடத்தில் எத்தனை கூட்டங்களை நடத்தினார்கள் என்றும் அவற்றின் பலன் என்னவென்றும் தெரிவிக்க வேண்டும்.

6.        அவ்வாறு சாதியிலிருந்து வெளியேறும் நபர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுகிறதா? அந்த பிரச்சனைகளை இவர்கள் எவ்வாறு தீர்த்து வைத்தார்கள் என்று தெரிவிக்க வேண்டும்.


7.        தனது ஊரில் தனது பகுதியில் சாதியின் பெயரால் என்னென்ன அவலங்கள் நடக்கின்றன? அவற்றை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுத்தார், அதற்காக அங்குள்ள மக்களை சந்தித்து பேசினாரா? அதற்கு என்ன பலன் கிடைத்ததா என்று தெரிவிக்க வேண்டும்.

8.        தனது உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஏதாவது சாதிக் கொடுமைக்கு ஆளாகுகிறார்களா? இல்லை ஆளாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிந்து அவருக்கு உதவி செய்கிறாரா என்பது பற்றி விவரிக்க வேண்டும்.


9.        ஒரு அமைப்பு - கட்சியில் உள்ளவர்கள், தனது - கட்சியின் தலைவர் சாதி பற்றி என்ன கருத்துக் கொண்டுள்ளார், அதனை சரியாக கடைப்பிடிக்கிறாரா? என்று பார்த்து அதை தெரிவிக்க வேண்டும். தனது அமைப்பு - தலைவர் அவ்வாறு இல்லாத போது என்ன செய்தார் என்பதை விவரிக்க வேண்டும்.

10.     சாதி பற்றிய அரசின் கொள்கை என்ன? அரசாங்கம் சாதியை ஒழிக்க விரும்புகிறதா? அப்படியானால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது அரசாங்கத்திற்கு கடிதமாக எழுதி அனுப்ப வேண்டும். அதற்கான பிரதிகளை இணையத்தில் போட வேண்டும்.


11.     இந்தியாவில் இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் சாதியை ஒழித்து விடலாமா, அதற்கு இந்திய சட்டங்கள் தடையாக இருந்தால் என்ன செய்வார் அல்லது வடமாநிலங்களில் சாதி ஒழிப்பை எவ்வாறு பரப்புவார் என்று விளக்க வேண்டும்.

வேறு ஏதாவது தகுதிகள் இருக்க வேண்டும் என்று கருதினால் நண்பர்கள் அவற்றை சேர்க்கவும்.

இதில் ஒன்றைக் கூட செய்ய முடியாதவர்கள் தயவு செய்து சாதி ஒழிப்பு பற்றி பேசாதீர்கள்.

6 comments:

Dr.SHANMUGARAJ THEVAR said...

கண்டிப்பாக..எவனும்..மூச்சு..விடமாட்டான்..ஏனென்றால்..சாதி..ஒவ்வொருவருக்கும்...பல்வேறு..கட்டத்திலும்.....தேவைப்படுகிறது..சாதி..அழிப்பு..என்பது.ஒரு..மாயா..வாதம்.

Anonymous said...

தேவன் சூப்பரா சொன்னீங்க...இத முகனூலுல copy paste பொடுங்க...லிங்க் போடவேண்டாம்..stanleyabrahamgp

vimaladhasan said...

இதுக்குப்போயி ஏன் இவ்வளவு முக்கி முக்கி பேசனும். சாதியை தன் "கோட்பாடாகவே" வைத்திருக்கும் இந்து மதத்தை பூண்டோடு ஒழிச்சிட்டாலே சாதியையும் இருக்காது. சாதியை தூக்கிப் பிடிக்கறவனுங்களும் இருக்கமாட்டானுங்க. அப்புறம் சாதி ஒழிப்பு போராளிகளுக்கும் வெட்டிவேலை இல்லாமல் போய்விடும்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

அறிவுப் பூர்வமான கருத்து. எவனோ சொன்னதை எவனோ கேட்டுவிட்டு எவனோ சொன்னானாம், இந்து மதம் சாதியை கோட்பாடாக வைத்திருக்கிறது என்று.

இந்து மதம் சொல்லும் வர்ணாசிரமம் பற்றி சமூகவிரோதிகள் ஒன்றை திரிக்க அதை உங்களைப் போன்றவர்கள் அதைப் பிடித்துக் கொண்டு இந்து மதத்தை பூண்டோடு அழிக்கிறோம் என்று சொல்லித் திரிகிறார்கள்.

ஆனானப்பட்ட ஔரங்சீபே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டான். திராவிட சிகாமணிகள் எந்த மூளைக்கு?

ராஜசேகர் உச்சிராக்கு said...

Seper perumal thevan anna.

ராஜசேகர் உச்சிராக்கு said...

அறுமையான கேள்விகள் பெருமாள் தேவன் அண்ணா

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...