Friday, March 30, 2012

ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க முயலும் அமெரிக்கா..

துணைபோன இந்தியா..!
ஒரு சர்வதேச அரசியல் அலசல்


உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீதே நிலைத்திருந்த நேரம் அது .ஆம் ; ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமேரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த பிரேரணையை ஆதரிக்க உலக நாடுகள் தயாராக இருந்த வேளை இன்னுமொரே நாடு அந்த பிரேரணையை ஆதரித்தால் போதும் ...பிரேரணை வெற்றி பெற்று விடமுடியும் என்றநிலை அது.! இதில் வெற்றி பெற என்ன செய்வது ? என்று அமேரிக்கா தலையை பிசைந்து கொண்டிருந்த நேரம் அது..
***
ஆசிய ...மத்திய கிழக்கு ...பிராந்தியத்த்ல் இந்தியாவை மடக்கி விட்டால் இன்னும் சில நாடுகளை இந்த பிரேரணைக்கு எதிராய் திருப்பி விடுவதுடன் வேறு சில நாடுகளை நடுநிலை வகிக்கவும் செய்து விடலாம் என்று ..கூட்டி கழித்து கணக்குப் போட்டது அமெரிக்கா...உலக வல்லரசுகளும் எண்ணெய் வளம் வாய்ந்த சில நாடுகளும் எப்போதும் தமது பூகோள வர்த்தக ராணுவ நலனுக்கு ஏற்பவே சிந்தித்து செயல்படும் கால கட்டத்துக்கு உலகம் வந்துவிட்ட வேளை இது..ஆகவே இதில் இருந்து இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ..விலக்கு கிடைப்பது என்பதுமுயல் கொம்புதான்..இப்படித்தான் ஒரு காலத்தில் அமேரிக்கா வாய்பார்த்துக் கொண்டிருந்த வேளை 'பெர்ள்' துறைமுகத்தில் கொண்டுவந்து அணுகுண்டை கொட்டிவிட்டு சென்றது ஜப்பான்..அந்த அனுபவத்தை இலகுவில் மறந்து விட அமெரிக்காவால் ஒருபோதும் முடியாது..ஏன் தெரியுமா ? இன்றைய உலக ஒழுங்கில் பலமும் வளமும் நிறைந்த முதல் நாடு என்ற கௌரவம் அமெரிக்காவுக்கு இன்று உண்டு.. அதை இழக்க அது ஒருபோதும் தயாரில்லை..
***
இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் ஏற்பட்ட உலக ஒழுங்கில் வந்ததுதான் அமெரிக்க _ சொவியதுனியன் என்னும் இரு அணிகளுக்கு இடையிலான உலக ஒழுங்கு..அதாவது இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின் ஏற்பட்ட நிலை இது..அதில் இந்தியாவின் நிலை எப்போதும் சோவியத்தின் பக்கமே பெரும்பாலும் இருந்து வந்துள்ளது..ஆனால் அது படிப்படியாக குறைந்து இன்று மறைமுகமாக மட்டுமன்றி நேரடியாகவே அது அமெரிக்க பக்கம் நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டு உள்ளது.ஜப்பான் ஜெர்மனி போன்ற வெறிக்குட்டி நாடுகளின் முதுகு எலும்பு முறிக்கப் பட்டபின்..மேற்ப்படி இரு நாடுகளும் ராணுவ பிராந்திய விஸ்தரிப்புகளையும் ..ராணுவ மயமாக்கல்களையும் முக்கியப் படுத்துவதற்கு பதிலாக பொருளாதார முன்னடைவுகளுக்கு வளாச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நகர தொடங்கிய அதேவேளை..அமெரிக்கா சோவியத் யூனியன் போன்ற நாடுகள் தொடர்ந்தும் ராணுவ பிராந்திய பலத்தை பல வழிகளிலும் நிலை நாட்ட முயன்று வந்தன..ஆனால் காலப்போக்கில் சொவியத்த் யூனியனின் உடைவாலும் பொருளாதார நசிவாலும் அதுவும் பலம் வாய்ந்த உலக ஒழுங்கிலிருந்து சிறிது சிறிதாக பின் வாங்கி கொண்டிருக்கும் போது அந்த இடத்தை நிரப்புவதுபோல் படிப்படியாக நுழைந்ததுதான் சீனா ஆகும்..சீனா என்னும் நாட்டின் அமைப்பை எடுத்து பார்த்தால் அது ஒரு அத்தி பழத்தைபோல் அழகாகவே தோற்றம் அளிக்கிறது..வெளித்தோற்றத்தில் மற்ற நாடுகளில் அக்கறை உள்ள நாடுபோல் நடந்து கொள்வதாக காட்டி கொண்டாலும்..அத்திப் பழத்துக்குள் இருக்கும் அசிங்கம்போலவே அதன் எண்ணம் எப்போதும் இருந்து வருகிறது..அதாவது மற்றைய நாடுகளின் அழிவில்தான் அதன் ஆக்கம் உண்டு என்ற கொள்கை அது..
***
ஆசிய பிராந்தியத்தில் ஜப்பானுக்குப்பின் பொருளாதார வளத்தில் மட்டுமன்றி ராணுவ ..வளத்திலும் நவீன ராணுவ உற்பத்திகளை ராணுவ துறையில் மேம்படுத்துவதிலும் மட்டுமன்றி ஏற்றுமதி செய்வதிலும் மிகக் குறைந்த செலவில் சந்தை பொருளாதாரத்தை உலகமெங்கும் பரப்பி சீனாவினை ஒரு முடிசூடா நாடாக உலகில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அது முயல்கிறது..அன்று எதை செய்ய தவறவிட்டு ஜப்பான் என்னும் நாடு அதல பாதாளத்துக்கு சென்று மீண்டும் இன்று படிப்படியாக பொருளாதாரத்தில் மட்டும் பலம்பெற்று வருகிறதோ..அதே பாணியில் இல்லாமல் பொருளாதார_ ராணுவ பெரும்பலத்துடன் தனது நிலையை உலகில் முதன்மைப் படுத்தவே சீனா முயன்று வருகிறது .அதற்காக என்ன விலை கொடுக்கவும் அது தயாராகவே உள்ளது..சீனாவுக்கு அதன் போக்கில் மனித உரிமை பற்றியோ மனித நேயம் பற்றியோ ஒருபோதும் கவலை இல்லை..
அதன் ஒரு அங்கம்தான் இலங்கையுடன் அது இணைந்து கொண்டது..
***
சிலர் நினைக்கலாம் இலங்கையில் எண்ணை வளம் போன்ற வளங்கள் நிறைந்து கிடப்பதால்தான் சீனா இலங்கையை கைக்குள் போட்டு கொள்ள நினைக்கிறது என்று..அது ஏற்றுகொள்ள முடியாத ஒன்று..வடமேற்கு இலங்கையில் இருப்பதாக சொல்லபட்ட எண்ணெய்வளம் என்பது வர்த்தக ரீதியாக சீனாவுக்கு தூசிக்கு சமனானது..அதுமட்டுமன்றி..அந்த எண்ணெய் வளத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் அளவுக்கு அது போதுமானது அல்ல என்பது சீனாவுக்கு தெரியும்..அதாவது 'சுண்டங்காய் கால்பணம் சுமை கூலி முக்கால் பணம் 'என்பதுபோன்றது அது ...அதை விட்டால் வேறு என்ன வளம் இலங்கையில் சீனாவை கவர்ந்து இருக்க வேண்டும்...?மாணிக்கமா...? இரத்தினமா? தேயிலையா..? ரப்பரா? இல்லை உல்லாசபிரயாணத் துறையா.? இல்லை இவைகளில் எதுவுமே சீனாவை திருப்திப் படுத்த முடியாது ..திருப்திப் படுத்தவும் போவதில்லை..சீனாவின் முத்துமாலைக் கனவு என்பது வெறும் பொருளாதார அடிப்படையிலோ ராணுவ மேம்பாட்டிலோ ஆசியப் பிராந்திய வல்லாதிக்கத்தில் அடங்கியது மட்டும் அல்ல..அதன் உண்மை காரணம் என்ன என்பதுபற்றி சீனாவுக்கு மட்டும்தான் வெளிப்படை .....ஆனால். தோன்றும் புறக் காரணிகளை வைத்துப் பார்க்கும்போது..சீனாவுக்கு
மிக முக்கிய தேவையாக இன்று இருப்பது அதன் ராணுவ உற்பத்திக்கும் ஏற்று மதிக்கும் ..சந்தை பொருளாதார உற்பத்திகளுக்கும் தேவையான அளவு கடந்த மூலப் பொருள் தேவை ஆகும்..
இன்று சீனாவை பல பக்கங்களிலும் திரும்பி பார்க்க வைத்து இருப்பது அதுதான் அளவு கடந்த அதன் உற்பத்திகளையும் சந்தை வாய்ப்புகளையும் அது இலகுவில் உலக நாடுகளை கவர்ந்து வரும் அளவுக்கு அதற்கு இன்று மிக மிக தேவையானது அதற்கு உரிய இரும்பு நிலக்கரி செப்பு எரிவாயு எண்ணெய்வளம் போன்ற வை இவற்றை இலகுவில் தொடர்ச்சியாக வெகுகாலம் வரை அது பெறமுடியுமென்றால் உலகில் உள்ள பெரும்பாலான சந்தை வாய்ப்புகள் இனி சீனாவின் கைகளில்தான்..அதன் பெரும்பகுதியை சீனா ஏற்கனவே அடைந்து விட்டது மிகுதியை அடையத்தான் இன்று அது போராடி கொண்டு இருக்கிறது..இந்தியாவை பொறுத்தவரை இந்த துறையில் அது இன்று போட்டி போடும் நிலையில் இல்லை..அப்படி போட்டி போடுவது என்றால் இந்தியாவுக்கு உள்ள ஒரே பயம் சீனா இந்தியாவின் வட பகுதிகளில் சிலவற்றை மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பை நடாத்தி சீனா பிடித்தி விடலாம் என்பதுதான்..அது...
***
சீனா இன்று உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களை இலகுவில் பெறும் நாடுகளை தன வசம் வளைத்துக் கொண்டு வருகின்றது என்பது உண்மைதான்..ஆப்கானிஸ்தானில் கொட்டி கிடக்கும் நிலக்கரி..எரிவாயு , எண்ணெய்வளம் என்பவற்றுடன் செப்பு, இரும்பு போன்றவையும் மியான்மரின் செப்பு நிலகரி இரும்பு போன்றவையும் இன்று சீனாவுக்கு மிக இலகுவில் கிடைக்கும் மூலப் பொருள்களாகும் ..இவற்றை . இலகுவில் கொண்டுவரும் பாதைகளை சீரமைக்கும்பணியில் கணிசமான வெற்றியையும் சீனா அடைந்து விட்டது..மற்றும் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பெறக்கூடிய மூல பொருட்களும் சீனாவுக்கே என்னும் நிலைக்கு இன்று வந்து விட்டன..அதுமட்டுமன்றி மேற்படி நாடுகளின் சந்தை வாய்ப்புகளையும் சீனாவே முன்னின்று செய்து கொடுத்து உள்ளது..உதாரணமாக பங்களாதேசின் அதிகளவான சணல்..உற்பத்திக்கு உலக சந்தையில் சீனா குறிப்பிட்ட அளவுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது அதுபோல்..அங்கிருந்து உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் ஆடைகளை அளவில் உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்துகொடுத்து உள்ளது..அதற்கு பிராய சித்தமாக தனக்கு வேண்டிய மூல பொருட்களை பெற்று கொள்வதுடன் பங்களாதேசின் 'சிட்டகாங் ' துறைமுகத்தையும் அது பிரபலப்படுத்தியுள்ளது..
இந்த துறைமுகம் சீனாவை பொறுத்தவரை அதன் வர்த்தக ராணுவ உற்பத்திகளுக்கு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது..இதன் மூலம் சீனாவும் பயன் பெறுகிறது பங்களாதேசும் பெரும் பொருள் குவிக்கிறது..இந்தியா இதைபற்றி கவலை படாமல் வாயை பார்த்து கொண்டு இருக்கிறது.
***
அடுத்து ஆபிரிக்க ..மத்திய கிழக்கு போன்ற இடங்களில் இருக்கும் மூலப்பொருட்களையும் சீனாவே அள்ளிக்கொள்கிறது பெரும்பாலும்..கட்டார் சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து பெறப்படும் எண்ணெய்வளம் இன்று சீனாவுக்கு தங்கு தடையின்றி கிடைப்பதால் அதன் உற்பத்திகளுக்கு அதன்மூலம் எந்த இடையூறு களும் வந்துவிட வாய்ப்பில்லை வந்துவிடாது இந்த வர்த்தக ராணுவ விஸ்தரிப்புக்கு ஏதுவாகவே அது தனது கால்களை இலங்கையிலும் ஊன்ற வேண்டிய முக்கிய தேவை உள்ளது ..ஏன் தெரியுமா...? இலங்கையில் கொட்டி கிடக்கும் பொருளாதார வளத்துக்காக அல்ல..அப்படி ஒரு வளமும் குறிப்பிடும்படி இலங்கையிலும் இல்லை ஆனால்..இலங்கையில் ஒரு முக்கிய இடத்தில்..குறிப்பாக மிக பிரபலம் அடையாத ஒரு துறைமுகத்தை ஆக்கிரமித்து விட்டால் அதன்மூலம் இந்திய பிராந்திய பகுதியில் காலூன்றி விட்டால்..ஆபிரிக்க மத்திய கிழக்கு முதல் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ...இலங்கையின் ஊடாக அதன் மூல பொருள்களை இலகுவில் கொண்டுசெல்லும் நோக்கத்துக்கு இது உறுதுணையாக இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை அதுமட்டுமன்றி காலப்போக்கில் மிக பெரிய ராணுவ வளத்துடன் கூடிய ஒரு வலயத்தையும் இதன் மூலம் நிறுவி இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்க முடியும்..அந்த அச்சுறுத்தல் அமெரிக்காவை அந்த பிராந்தியத்தில் காலூன்ற விடாமல் தடுக்க உதவகூடும்..என்று சீனா கருதுகிறது..உண்மையும் அதுதான்..அதற்கு தெரிந்தும் இடமளித்த நாடு இலங்கை..எப்படி இந்தியாவால் இதை பொறுத்து கொள்ள முடியும்?
***
இதன் மூலம் சீனா ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க முயல்கிறது அதில் சிறிது சிறிதாக வெற்றியும் பெற்று வருகிறது..உலக வரை படத்தை எடுத்து பாருங்கள் சீனாவின் வழங்கல் பாதையின் ரகசியம் அப்போதுதான் உங்களுக்கு புரியும் ஆபிரிக்காவில் இருந்து சவூதி அரேபியா..கட்டார். பாக்கிஸ்தான் பங்களாதேஷ், இலங்கை என்று தங்கு தடையின்றி ஒரு வழங்கல் பாதையை அது நிறுவியுள்ளது..ஆப்கானிஸ்தான் மியான்மர் போன்ற இடங்களின் மிக முக்கிய மூல பொருட்கள் அதற்கு தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.. இலங்கையின் அம்பாந்தோட்டை துறை முகத்தை
அது ஆக்கிரமித்து கொண்ட விதம் இந்தியாவுக்கு அப்போது புரியவில்லை ஆனால் படிப்படியாக அது புரிய ஆரமபித்தபோதுதான் இந்தியாவுக்கு உறைத்தது..பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் இல்னகையின் செப்படி வித்தையை புரிந்து கொண்டதன் விளைவை இலங்கை ஜெனீவாவில்அனுபவித்துவிட்டது..உண்மையிலே யே இந்தியா திடீர் என்று இலங்கைக்கு எதிராக முடிவு எடுக்க வில்லை திட்டமிட்டே எடுத்து உள்ளது ஆனால் கடைசி நேரம் வரை இலங்கை யை பழிவாங்கியது என்பதுதான் உண்மை..
***
இந்து சமுத்திர ஆசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கண்டுகொண்ட அமெரிக்கா ..அதை தடுப்பது எப்படி என்று இரவு பகலாக சிந்தித்து கொண்டிருந்தபோது அதற்கு கிடைத்த துருப்பு சீட்டுத்தான் இலங்கை விவகாரம்..நன்கு அதை பயன்ப்டுத்திக் கொண்டது..இந்தியாவை அது அந்த வலைக்குள் இழுத்தது ...சீனாவின் ஆக்கிரமிப்பை சுட்டிகாட்டியே என்பது இப்போது வெளிப்படையாக புரிகிறது எனவே இந்து சமுத்திர ஆசிய பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் வலுவாகக்காலூன்றிவிட்டால் அமெரிக்காவின் 'சோலிக்கு' அங்கே இடமில்லை என்பதற்காக அமெரிக்கா நகர்த்திய காய் நகர்த்தலின் ஒரு பகுதியில் விழுந்தது இந்தியா..என்பதுதான் உண்மையேதவிர ஈழத்தமிழரில் இரக்கபட்டு அல்ல..இலங்கை என்னும் அந்த நாடு குப்புற விழுந்தது உண்மை அதாவது இந்தியாவை நம்பி.. சீனாவின்..முத்துமாலை கனவுகளும் கூடத்தான்..அதில் அடங்கும்..இனி இந்தியாவுடன் சேர்ந்து அமெரிக்கா எப்படியான நெருக்கடிகளை சீனாவுக்கும் அதன்மூலம் இலங்கைக்கும் கொடுக்க போகிறது ? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..சுண்டைக்காய் இலங்கை இதில் இருந்து மீழுமா ? இல்லை இந்தியப் பெருங்கடலில் மூழ்குமா,..? என்பதை பாக்கலாம் ..எது எப்படி இந்தபோதும் ,,ஈழத்த் தமிழர்களின் வாழ்வில் இந்த வல்லரசுகளின் காய் நகர்வுகள் ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தலாம் சிலவேளை மேலும் முன்பைவிட அழிவுகளையும் கூட ஏற்படுத்தலாம் 'wait and see' இந்த வல்லரசுகளின் தூண்டிலில் சில் மீன்கள் தறி கேட்டு ஓடி தமது உலக ஒழுங்கு என்னும் வலையில் இருந்து பித்துகொண்டு வெளியேறின என்பது மறுக்க முடியாத உண்மை..அதில் ஒன்றுதான் எப்போதும் அமெரிக்கா அணியில் சேரும் சவூதி அரேபியா,கட்டார்,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற அணிகள் அணிமாறி சீனாவுக்கு சார்பாக இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது ஆகும்.அதுபோல் சீன அணியில் இருந்த சில நாடுகள் இடம் மாறி இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சார்பாக இலங்கைக்கு எதிராக வாக்களித்ததும் ஆகும் ..மொத்தத்தில் சொல்வதென்றால் கடந்து சென்ற மாபெரும் உலக நிகழ்வு உலக அரங்கில் புதிய உலக ஒழுங்கு ஒன்றை விரைவில் ஏற்படுத்தபோகிறது என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. எது எப்படி இருந்த போதும் இலங்கை தமிழர் வாழ்வு என்பது இந்த வல்லரசுகளின் காய் நகர்த்தல்களிலும் சுற்று மாற்றிலும்தான் இனி அடங்கி உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது.

நன்றி - முகநூலில் மு.வே.யோகேஸ்வரன்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...