Thursday, March 8, 2012
மும்பையில் பாரிவேந்தருக்கு பாராட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது
பிப்ரவரி 26 அன்று காலை 10.30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் நிறுவனர் டா. பாரிவேந்தர், மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜன், பார்கவ குல முன்னேற்ற சங்க (பாகுமுச) உயர்மட்டக் குழு தலைவர் வாசுதேவன், பார்கவ குல முன்னேற்ற சங்கத் தலைவர் மா. சுந்தரராஜ, பொருளாளர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் சத்தியநாதன், இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) கொள்கை பரப்புச் செயலாளர் சிவ சங்கரன், ஐஜேகேயின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் செந்தில், கதிரவன், சேலம் லக்ஷ்மண், கே. தெய்வராஜ், எம்.ஆர். சிவானந்தம், ஆர். செந்தில் ஆகியோருக்கு மராட்டிய மாநில ஐஜேகே, பாரி நற்பணி மன்றம், பாகுமுச மற்றும் மும்பையில் உள்ள பொது அமைப்புகளின் சார்பில் ராஜா உடையார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மராட்டிய மாநில பார்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவரான ராஜா உடையார் தலைமையிலான குழுவில் மராட்டிய மாநில ஐஜேகேவின் தலைவர் எம். கோவிந்தசாமி, பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன், மும்பை மாநகர தலைவர் எஸ். ஜான் கென்னடி, பாரி நற்பணிமன்ற தலைவர் உதயம் எம்.ஏ. சுவாமி, டி. கிருஷ்ணன் மற்றும் பாகுமுசவின் நிர்வாகிகள் எஸ்.கே. சுந்தர், துரை தங்கமணி, செல்லப்பன் உடையார், ராஜகோபால், அறிவழகன், அண்ணாதுரை, டி.ஆர். முருகன், ரஜினி, ஆர். முருகன், டி. கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர், செந்தில் குமார், பொன்னம்பலம், மணிமங்கலம் முதலானோர் இருந்தனர்.
அங்கிருந்து தாராவி சென்ற பாரி வேந்தர், ஜி.ராஜன், மற்றும் தயாகத்திலிருந்து வந்த தலைவர்கள் தராவி 90 அடிச் சாலையில் உள்ள காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி மற்றும் இளநிலை கல்லூரிக்கு சென்றனர். அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரி வேந்தர் வந்தது அறிந்ததும் அப்பகுதியில் இருந்த தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு பாரி வேந்தர், ஜி.ராஜன், மற்றும் தயாகத்திலிருந்து வந்த தலைவர்கள் ஆளுயர மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பள்ளி நிர்வாகிகள் மற்றும் தெக்ஷிண மாறநாடார் சங்க நிர்வாகிகள், செயலாளர் எம்.எஸ். காசிலிங்கம் நாடார் பாரிவேந்தரை அலுவலகத்தில் வைத்து வரவேற்பு அளித்து சால்வைகள் அணிவித்து கௌரவித்தனர். அவர்கள் வேந்தர், ஜி. ராஜன் மற்றும் இதர தலைவர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மேற்படி இளநிலை கல்லூரியில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் தரப்பில் தலா 1 பவுன் தங்க நாணயம் வழங்கப்படும் என்று பாரிவேந்தர் அறிவித்தார்.
மாலை 4 மணியளவில் மும்பை சயான் பகுதி பாவுதாஜி ரோட்டில் உள்ள டாக்டர் பாரத ரத்னா எம்எஸ் சுப்புலக்ஷ்மி அரங்கில் பாரிவேந்தருக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தின் சார்பில் செயற்கை கோள் அனுப்பிய சாதனை படைத்ததற்காக மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றம், பாகுமுச, ஐஜேகே தரப்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது.
முன்னதாக அரங்கிற்கு வந்த பாரி வேந்தருக்கு மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றம், பாகுமுச, ஐஜேகேவின் மகளிரணி சார்பாக ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கத்தில் வருவாய்த் துறை கமிஷனர் கவிதா நாகராஜன், மும்பை கல்யாண மாலை ராஜஸ்ரீ நாகராஜன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
விழாவில் பாரிவேந்தர் சத்ரபதி சிவாஜி, டாக்டர் அம்பேத்கர், என்.பி.வி. ராமசாமி உடையார், சௌந்திரராஜ மூப்பனார், அருணாச்சலம் உடையார், பி.டி. பன்னீர் செல்வம் ஆகிய தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். விழாவிற்கு வந்த அனைவரையும் உதயம் எம்.ஏ. சுவாமி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்களாகிய கேப்டன் ஆர். தமிழ்ச் செல்வன் பா.ஜ.க, லலிதா அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பேசிய அவர்கள் பாரி வேந்தரின் உழைப்பு, முன்னேற்றம், சாதனை குறித்து பாராட்டி பேசினர். விழாவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தின் பாராட்டைப் பெற்ற நேஷனல் எஜூகேஷன் சொசைட்டியின் நிறுவனர், தலைவரான டாக்டர் ஆர். வரதராஜன் கலந்து கொண்டு பாரிவேந்தரை பாராட்டி பேசினார். பி.ஏ.ஐ.எஸ் பள்ளியின் தலைவரான கே.வி.அசோக்குமார், காமராஜர் நினைவு ஆங்கில பள்ளி, இளநிலை கல்லூரியின் நிர்வாகியான எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், காந்தி நினைவு உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகியான எஸ்.ஜே.எஸ். செல்லத்துரை மற்றும் மும்பை மாநக செயலாளர் அனில் டாக்கூர் ஆகியோர் கலந்துகொண்டு பாரிவேந்தரை பாராட்டிப் பேசினர்.
வாழ்த்துரை வழங்கிய தமிழ் லெமுரியா பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சு. குமணராசன், உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர், இதில் பாரி வேந்தரின் சாதனை ஒரு தமிழரின் தலையாய சாதனையாக இருப்பதாகவும், இது தமிழருக்கு கிடைத்த வெற்றியாகவும் பாராட்டி பேசினார். மராட்டிய மாநில முன்னாள் செயலாளரான ரங்கநாதன் ஐஏஎஸ், பாரிவேந்தர் உழைப்பில் காட்டிய ஈடுபாடே அவரது சாதனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று பேசினார். வருவாய்த் துறை கமிஷனர் வி. மகாலிங்கம் விழாவில் கலந்துகொண்டு பாரிவேந்தரை பாரட்டினார்.
சிறப்புரையாற்றிய மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜன் பேசும்போது பாரிவேந்தர் ஒரு ஓயாத உழைப்பாளி என்றும் அவர் எவ்வாறு ஒவ்வொரு கட்டத்தில் எவ்வாறு உழைத்து முன்னேறினார் என்பது குறித்து பேசினார். சிவசங்கரன் பேசுகையில் பாரிவேந்தரின் இலவசம் வேண்டாம், படித்தோர் அனைவரும் பகுதி நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது போன்ற கொள்கைகளின் சிறப்புக்களை குறித்து பேசினார். மேலும் விழாவில் தாயகத்திலிருந்து வந்திருந்த சேலம் லக்ஷ்மண், சத்தியநாதன், வெங்கடேசன் ஆகியோர் வேந்தரை பாராட்டிப் பேசினர்.
விழாவில் ஏற்புரை வழங்கிய பாரிவேந்தர், விழாவிற்கு மும்பை வாழ் தமிழ் மக்கள் குடும்பத்தினருடன் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மும்பை தமிழர்கள் எந்த வித வேறுபாடும் இல்லாமல் ஒற்றுமையுடன் இருந்து அரசியல் உரிமையை பெற வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், தான் ஒரு பேராசியராக, தொழில் முனைவோனாக இருந்தாலும் தன்னை ஒரு அரசியல்வாதி என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்வதாக பேசினார். மேலும், அரசியலில் உள்ள குறைபாடுகளை களைய படித்தவர்கள், அனைத்து பணிகளிலும் உள்ளவர்கள் பகுதி நேர அரசியலில் ஈடுபட வேண்டும், அரசியல் ஒரு சாக்கடை, அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள் என்று கூறிக்கொண்டு இருந்தால் அரசியலை மேம்படுத்த முடியாது. எனவே ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு அரசியலில் ஈடுபட வேண்டும். அறிவுத்திறன் அற்றவர்கள் ஒருநாள் முழுவதும் செய்யும் வேலையை அறிவு படைத்தோர் ஒரு சில மணிநேரங்களில் செய்து முடியும் என்பதைப் போல படித்தோர் பகுதி நேரத்தில் முழுமையான அரசியலை செய்ய முடியும் என்று பேசினார்.
விழாவிற்கு வந்திருந்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு பாரிவேந்தர் பெயர் சூட்டும் நிழச்சி நடைபெற்றது. பின்னர் விழாவிற்கு வந்திருந்தவர்கள் பாரிவேந்தரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
விழாவின் இறுதியில் மராட்டிய மாநில பாரி நற்பணி மன்றத்தின் பொருளாளரான துரை தங்கமணி நன்றி தெரிவித்தார். விழா சிறப்பாக நடைபெற மூன்று அமைப்புகளின் நிர்வாகிகளான பிரின்ஸ் தாமஸ், மணிகண்டன், ஆர். ஆனந்த், வி. ராமதாஸ், சி. குமார், வெங்கடேசன், கே. பிரகாஷ், என். பாலசுப்பிரமணியம், எம். தண்டபானி, டி.பி. அங்கமுத்து உடையார், கே. முருகன், எஸ். செல்வராஜ் சாமி, ஆர். சுரேஷ்குமார், ஏழுமலை, பி. ஆறுமுகம், அலங்காரம், வி. முருகவேல், ஆ. ரமேஷ், ராஜேந்திரன், ஜி. ஆறுமுகம், கே. சுகுமார், சி. முத்து ஆகியோர் பாடுபட்டனர்.
நான் என் குடும்பத்தாருடன் பாரி வேந்தருடன்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment