Tuesday, March 6, 2012
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் நீதிக்கான பயணம்
மும்பை, மார்ச் 6,
தமிழர் நலம் பேரியக்கத்தின் சார்பில் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.
ஐநாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி இன்று (திங்கள்) மும்பையில் மாட்டுங்கா பகுதியில் உள்ள அரோரா திரையரங்கிலிருந்து மாட்டுங்கா தபால் நிலையம் வரை நீதிக்கான பயணம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான மு. களஞ்சியம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழர் நலம் பேரியக்கத்தின் மாராட்டிய மாநிலத் தலைவர் நா. காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த நடை பயணத்திற்கு தமிழர் நலம் பேரியக்கத்தின் நிர்வாகிகளான சி. ராஜேந்திரன், கன்னிவெடி கந்தசாமி, ஜி. செல்வராஜ், ரமேஷ் நாயுடு, பழனி கே. தேவேந்திரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் வட மாநிலத்தவர் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்யில் தமிழ் இலெமுரியா பத்திரிகையின் தலைமை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை மாநரக பாஜ செயலாளர் ராஜா எம். உடையார், இந்திய ஜனநாயக கட்சியின் மராட்டிய மாநில தலைவர் எம். கோவிந்த சாமி, பொதுச் செயலாளர் பெருமாள் அ. தேவன் தம்பி செல்வம், அ. கணேசன், விழித்தெழு இளைஞர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிருபர்களிடம் பேரிய மு. களஞ்சியம், குமணராசன், ராஜா எம். உடையார் ஆகியோர் இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று பேசினர். நடை பயணத்தின் முடிவில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கமிஷனர் நவநீதம் பிள்ளைக்கு கோரிக்கையை முன் வைத்து அஞ்சலட்டை அனுப்பப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment