Tuesday, January 10, 2012
சொல்லுக்கு முன் செயலாக தொண்டாற்றும் தமிழர் நலம் பேரியக்கம் உதவி .!
தமிழீழப் பெண்ணின் கால்களில் அறுவைச் சிகிச்சை செய்ய தமிழர் நலம் பேரியக்கம் உதவிசெய்துள்ளது.
கடந்த மார்கழி மாதம் 4 ம் தேதி மாவீரர் நினைவெழுச்சி நாளில் இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தலைமையில் சென்னையில் தமிழர் நலம் பேரியக்கம் தொடங்கப்பபட்டது.அரசியல் நோக்கம் இல்லாமல்,தமிழர்களுக்கு சேவை செய்வதை மட்டுமே நோக்கமாக கொண்டது தமிழர் நலம் பேரியக்கம்.
இந்த நிகழ்வில் பேசிய மு.களஞ்சியம் எங்கள் தமிழர் நலம் பேரியக்கம் மேடை ஏரி சும்மா அரசியல் பேசிக்கொண்டிருக்காமல் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் ‘ சொல்லுக்கு முன் செயல் “
என்ற கருத்தின் அடிப்படையில் தமிழர் நலம் பேரியக்கத்தின் முதல் பதிவாக இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் தோழி சசிகலாவுக்கு இடது காலில் அறுவைச் சிகிச்சை செய்ய நிதியுதவி செய்வது என முடிவு செய்யப்பட்டது.
அதன் பின் தமிழர் நலம் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் அந்த ஈழப்பெண்ணை சந்தித்தார். அவருக்கு தேவையான உதவியை தனது இயக்கம் செய்யும் என்று வாக்குறுதி அளித்து வந்தார்.
அதன் அடிப்படையில் தோழி சசிகலாவை சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து அவரது கால்களில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவைச் சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில் நேற்று(07.01.2012)மருத்துவமனையிலிருந்து இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் தானே நேரில் சென்று அந்த பெண்ணை அழைத்து கொண்டு பத்திரமாக அவர் தங்கியுள்ள வீட்டுக்கு கொண்டுபோய்சேர்த்தார்.
அவருடன் தமிழர் நலம் பேரியக்கத்தை சேர்ந்த மும்பை ராஜேந்திரன்,கவிஞர் இகன் ஆகியோர் இருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - ஈழம்வெப்சைட்
http://www.eelamwebsite.com/?p=20230
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment