தீரன் திருமுருகனுடன் ஒரு தெலுங்குப் பெண் உரையாடிய செவ்வியை அனுப்பியிருந்தனர். தமிழ் நாட்டில் வாழும் அனைவரும் தமிழர்கள் என்ற தவறான கருத்தியலை திராவிட இயக்கங்கள் பரப்பியுள்ளன. அதை தெலுங்கர்களும் நம்புகிறார்கள். அவர்கள் தெலுங்கர்கள் என்று சுட்டிக்காட்டும்போது அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது தேவையில்லாதது. தங்களை தெலுங்கர்கள் என்று அடையாளப்படுத்தினால் நாளை தமிழகத்தை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்ற அச்சமே அவர்களை இவ்வாறு பேச வைக்கிறது. எனவேதான் அறிவுதளம், அரசியல் தளம் என அனைத்து தளங்களிலும் உள்ள தெலுங்கர்கள் இதையே எதிர்வினையாகக் காட்டுகிறார்கள். இது எந்த விதத்திலும் அவர்களுக்கு உதவப் போவதில்லை. அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் உண்மையை ஏற்கும் நேர்மையைப் பின்பற்ற வேண்டும். படித்த, அறிவுசார்ந்த தெலுங்கர்கள் குடியுரிமைக்கும் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெலுங்கர் மத்தியில் எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும். அதை விடுத்த தாங்களும் தமிழர்தான் என்று கூறி பிடிவாதம் பிடிப்பது தமிழக அரசியல் கருத்தியல் களத்தில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை உணராத தன்மையையே காட்டும். அது அவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது. தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள், தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற முழு ஆதரவை தரவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
நேதாஜி இளைஞரணி
கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...

-
- மனிதர்கள் எவ்வாறு இந்த உலகத்தில் உருவானார்கள் என்பது மர்மம் நிறைந்த கேள்வி ...
-
சிவகங்கையில் இருந்து கிழக்குபக்கமாக , சிவகங்கை மாவட்டம் , ராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவி காணப்படும் கள்ளர...
-
புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கிய தொண்டைமான் மன்னர்கள் கிபி 1639 முதல் 1948 வரை ஆட்சி செய்தார்கள். சர்தார் வல்லபாய் படேலின் வேண்டுகோளை...
No comments:
Post a Comment