Tuesday, March 13, 2018

தீயை தீயால் அணைத்தல்

தீயை தீயால் அணைத்தல் என்பது ஒரு பண்டைக் கால தீயணைப்பு முறையாகும். பரந்த காட்டு வெளிகளில், குறிப்பாக கோடைகாலங்களில் பயணிக்கும்போது இவ்வாறு காட்டுத் தீக்குள் மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படலாம். காட்டுத் தீக்குள் ஓடித் தப்பிப்பதோ அல்லது அதனை அணைப்பது என்பதோ முடியாத காரியம்.



இது போன்ற சூழல்களில் தீயிலிருந்து தப்பிக்கும் முறைதான் இந்த தீயை தீயால் அனணக்கும் முறை. தொலைவில் தீப்பற்றி எரிந்து நம்மை நோக்கி வருகிறது என்று அறிந்தால் நம்மைச் சுற்றியுள்ள புற்கள், புதர்களை அப்புறப்படுத்தி விட்டு ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த வட்டத்தின் நாலாபுறமும் தீ வைத்து விட்டு அதன் நடுவில் நின்று கொள்ள வேண்டும். இந்த வட்டம் என்பது ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 25 முதல்  50 அடிகள் விட்டம் கொண்டதாக இருந்தால் நலம்.

இந்தத் தீயானது எரிந்து சென்று எரிந்து வரும் காட்டுத் தீயை பாதுகாப்பான தொலைவில் காட்டுத்தீயை அணைத்து விடும். 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...