இன்று (20-01-2018) அதிகாலை தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள சின்னப் பொட்டிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக நடத்ததப்பபடும் மணல் குவாரிகளுக்கு எதிராக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக ஆர்ப்பட்டம் செய்யப்பட்டது.
நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் விஷயத்தில் பெயர்பெற்ற அதே பொட்டிபுரத்தில் அரசு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுடன் இந்த சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேனிமாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் போடி இரா. காசிராஜன் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் இது பற்றி தேனி மாவட்ட புவியியல் மற்றும் கனிமவள அதிகாரி சாம்பசிவத்திடம் இதுபற்றி புகார் செய்யப்பட்டது.
ஆனால் எந்தவித நடவடிக்கைகயும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை 6 மணியளவில் போடி இரா. காசிராஜன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொண்டர்கள் குவாரியை முற்றுகையிட்டனர். அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் தொலைபேசியில் தொடர்புகொண்ட சாம்பசிவம் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
விசாரணைக்குப் பின்னர் சட்டவிரோத குவாரிகளை மூட தான் நடவடிக்கை எடுப்பதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாக்குறுதி அளித்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment