Saturday, December 2, 2017

எது துரோகம்?




அதிமுகவில் ஏற்படும் நிகழ்வுகளை பற்றி பேசும் தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி, பன்னீர் செல்வத்தை துரோகிகள் என்று பேசுகின்றனர். பதிலுக்கு மேற்படி இருவரின் ஆதரவாளர்கள் தினகரன், சசி குடும்பத்தினரை மோசடி கும்பல் என்று பேசுகிறார்கள். அவர்களை மஃபியா கும்பல் என்கிறார்கள். ஆனால் இவர்களை போன்றோரை, இது போல நீண்ட காலம் அதிகாரத்துடன் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் சொல்வதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பது புரிந்து விடும்.

உண்மையில் மோதி போல இந்திய பிரதமராக உள்ள ஒருவர் எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்களை அழைத்து உங்கள் அரசியல் வாழ்வை இல்லாமல் பண்ணுவேன், வருமான வரிச் சோதனை நடத்தி வழக்குகளைப் போட்டு அலைக்கழிப்பேன். நான்  சொல்வதைக் கேட்டுக் கொண்டு பதவியில் இருப்பீர்களா? இல்லை, வழக்குகளைச் சந்தித்து அரசியல் முகவரி இல்லாமல் அலைகிறீர்களா என்ற அன்பு அறிவுறுத்தலை முன் வைத்திருந்தால் அவர்கள் எந்த வாய்ப்பை தேர்வு செய்திருப்பார்கள்? எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்கள் அதையே தேர்வு செய்திருப்பார்கள்.

உண்மையில் ஜெயலிதாவின் தலைமையில் செயல்பட்ட காலம் வரை எடப்பாடி பன்னீர் செல்வம் போன்றோரின் நிலையில் இருப்பவர்கள் சுயமாக பேட்டியளிக்கக் கூட துணிவு இல்லாதவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். முதல்வர் பதவி வகித்து வந்த பன்னீர் செல்வம் போன்றோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்தது என்பது எல்லாரும் அறிந்ததே.

அப்படியே இருந்து பழக்கப்பட்டவர்களிடம் எதை எதிர்பார்க்க முடியும்? அதிமுகவிற்காக தியாகம் செய்வதையா அல்லது தங்கள் பதவியை காப்பாற்றுவதையா?

உண்மையில் சசி குடும்பத்தினர் போன்றோர் ஜெவின் மறைவுக்குப் பின்னர் இதுபோன்ற ஒரு எதிர்ப்பலையை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். இல்லாவிட்டால் அவர்கள் பன்னீர் செல்வம் போன்றோரை வெளியேற்ற அவசரம் காட்டியிருக்க மாட்டார்கள். தற்போது இந்த அக்னி பிரவேசத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.


······························

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...