தேவதானப்பட்டி :- மாணவர் சேர்க்கையை முன்னிட்டு தேனி மாவட்டம்
தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் அமைந்துள்ள அரசினர் கள்ளர் தொடக்கப் பள்ளியின்
ஆண்டுவிழா சிறப்பாக நடந்தேறியது.
3.5.2017 அன்று தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் திடலில்
வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் ஆடல்பாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு
விருந்தினராக பெருமாள்கோவில்பட்டி சத்யாகிரஹ சேவாஸ்ரமத்தின் நிர்வாக அறங்காவலர்
சுவாமி காசியானந்தா கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசு வழங்கி ஆசியுரை வழங்கினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இண்டியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் செயலாளர் துரை,
தேவதானப்பட்டி கள்ளர் விடுதி
காப்பாளர் மோகன் குமாரமங்கலம்,
கெங்குவார்பட்டி சிவில்
ஒப்பந்ததாரர் பொன்ராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியை
மகாலட்சுமி, விழாவில் பள்ளி மேலாண்மைக்
குழுவின் தலைவர் அ. பெருமாள் தேவன், உறுப்பினர்கள் சுபாஷ்,
பார்த்திபன்,
செல்லப்பாண்டி முதலானோர்
கலந்து கொண்டனர்.
(5.3.2017
அன்று மாலை மலர், 6.3.2017 அன்று தினகரன் பத்திரிகையில் வந்த செய்தி)
No comments:
Post a Comment