Monday, March 27, 2017

இதுதான் சீமானின் தமிழ்த் தேசியம்

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்காக சீமானிடம் பேசிய ஒரு நாம் தமிழர் தொண்டர் இதே தகவலை கூறினார். அதாவது அந்தத் தொண்டர் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரை ஒரு தலித் என்று நினைத்துக் கொண்ட சீமான் முக்குலத்தோரின் ஆட்டம் அதிகமாகி விட்டது. அவர்களை ஒழித்துக் கட்ட அனைத்து தொகுதிகளிலும் பட்டியல் சாதி மக்களை வேட்பாளராக நிறுத்தப் போகிறேன் என்று சொன்னார்.

அன்றே அந்தத் தொண்டர் அக்கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். நாம் தமிழரில் தலைமையிடம் நெருங்கினால் அவரின் சாதி என்னவென்று கண்டறியப்படும். அதற்குத் தகுந்தார் போன்று அவர் நடத்தப்படுவார். மேற்படி தொண்டர் வெளிநாட்டில் வேலை செய்தவர் சீமானின் தம்பிமார்கள் விசாரித்தபோது தான் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லி இருக்கிறார். இதுவே சீமானுக்கு தெரிவிக்கப்பட சீமான் அவரை ஒரு குறவர் என்று நம்பியே மேற்படி தகவலை பேசியுள்ளார்.

இவரைத்தான் தமிழ்த் தேசியத்தின் எழுச்சி ஞாயிறு என்று ஒருசிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கிஷோர் சாமியின் கீழ்க்கண்ட பதிவு சீமானின் வேட்பாளர் பற்றிய உண்மையை நிரூபிப்பதாக உள்ளது.


#Kishore K Swamy
24 March at 07:09 ·
நாம் தமிழர் கட்சியுடன் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு ... இருந்தும் ஒரு விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுவேன் ... கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியலில் ....
பறையர் இனத்தைச் சேர்ந்த 13 வேட்பாளர்கள்
பள்ளர் இனத்தைச் சேர்ந்த 7 வேட்பாளர்கள்

பொதுத் தொகுதிகளில் நிறுத்தப் பட்டிருக்கிறார்கள்
நாடார் சமுதாயம் அதிகம் கொண்ட தொகுதிகளில் பறையர் இனத்தைச் சேர்ந்த 4 வேட்பாளர்களும் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த 3 வேட்பாளர்களும் மறவர் 2 வேட்பாளர்களும் நிறுத்தப் பட்டுள்ளனர் .
30 முதலியார் பிள்ளைமார் சமுதாய வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டு அந்தச் சமூகத்திற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது

36 வன்னியர் வேட்பாளர்கள் வன்னியர் சமூகம் அதிகமில்லாத தொகுதிகளில் நிறுத்தப் பட்டுள்ளனர் ....

இது போன்ற துணிச்சல் தமிழக அரசியல் வரலாற்றில் அ இ அ தி மு க வுக்கு மட்டுமே இருந்து வந்துள்ளது ...... இது போன்ற கட்சியை எதிர்த்து அரசியல் செய்யணும்னு தான் எங்களுக்கும் ஆசை ... ஆனா என்ன செய்யுறது..... எங்களுக்கு வாய்ச்சதெல்லாம் சுடலை மாதிரி சப்பாணி தானே

https://www.facebook.com/kishore.kswamy?fref=ts

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...