சில குடிகள் உயிரை பாதுகாப்பதையும் உடலை பாதுகாப்பதையுமே அடிப்படை தந்திரமாக, நோ க்கமாக கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் போர்க்குடிகளின் அடிப்படை கொள்கையே இனத்திற்காக, நாட்டிற்காக உயிரையும் உடலையும் துறக்கத் தயாராக இருப்பதாகும். அந்த நிலையின் அடிப்படையில் பிறப்பதே வீரமாகும்.
இந்த நெறிகளின் அடிப்படையில் வந்தவர்களே சிறந்த ஆட்சியாளர்களாக இருக்க முடியும். இல்லாவிட்டால், உடலை, உயிரை, உடைமையை பாதுகாப்பதற்காக ஆட்சியாளர்கள் நாட்டையும் இனத்தையும் காட்டிக் கொடுப்பார்கள். அதையே நாம் கடந்த காலங்களில் கண்டோம்.
அதற்காக போர்க்குடிகள் அத்தனைபேரும் உத்தம புத்திரர்கள் என்று நான் சொல்லவில்லை. அங்கயும் எல்லாவித மனிதர்களும் இருக்கவே செய்வார்கள். அவர்களில் சிறப்பானவர்களை கண்டறிந்து ஆட்சியில் அமர்த்துவதே நாட்டிற்கு நல்லது.
சிறந்த ஆட்சியாளர்களாக இல்லாதபட்சத்தில் அவர்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அவர்களால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.
No comments:
Post a Comment