Tuesday, July 12, 2016

ஒரு தெய்வீகக் காதல் கதை



ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்லுவதெல்லாம் உண்மைநிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான காதல் கதையின் தொடர்ச்சி இன்று (12.07.2016) ஒளிபரப்பானது.

காதலனின் பெயர் ஆசிக்’ (இந்தியில் ஆசிக் என்றால் காதலன் என்றுதான் பொருள்). பீகாரை சேர்ந்தவரா இவர் சென்னையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். நன்றாக தமிழ் பேசக் கூடியவரான இவர் சுனிதா என்ற பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். அவரை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றார்.

ஆசிக்கின் பேச்சில் உண்மை இல்லை என்பதை உணர்ந்த அவரது பெற்றோர் இந்தப் பிரச்சனையை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு கொண்டு வருகிறார்கள். விசாரணையின்போது ஆசிக் ஒரு பேச்சிலர் அறையில் தங்கி இருப்பதாகவும். தனது தங்கைக்கு திருமணம் நடக்க இருப்பதால் இரண்டு மாதம் கழித்து சுனிதாவை திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். மேலும் அவர் சென்னைக்கு வந்த ஆண்டு, படிப்பு, வயது பற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசி மாட்டிக் கொள்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர், அவரது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் அதற்கு ஆசிக் மறுக்கிறார். ஏன் என்று கேட்கும்போது பிரச்சனை என்று கூறுகிறார். ஆஷிக் வேறு எதுவும் திருமணம் செய்திருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆஷிக்கின் மனைவியின் தொலைபேசி எண்ணை கண்டறிந்து அவரை தொலைபேசியில் அழைக்கிறார்.

தன் கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய வந்திருப்பதாக சொன்னதும் அதிர்ந்த அந்தப் பெண் உடனே தொலைக்காட்சி அரங்கிற்கு வருகிறார். ஆஷிக் அந்தப் பெண்ணையும் காதலித்துதான் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளன. 3 பெண் குழந்தைகளையும் ஆஷிக்கின் மாமியாரே வளர்த்து வருகிறார். ஆண் குழந்தை மட்டும் அவர்களிடம் வளர்கிறது. ஆஷிக் தினமும் குடித்து விட்டு தன் மனைவியை அடிப்பார்.

ஆஷிக், உடன் பணிபுரிந்த பெண்ணைத்தான் காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதலிக்கும்போதே தன் மனைவியை அழைத்துச் சென்று லாட்ஜில் தங்கியுள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமடைந்து விட்டார். அதன் பின்தான் அவர்களின் திருமணம் நடக்கிறது. ஆஷிக் வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்ததால் அவருக்கு தன் மகளை திருமணம் செய்து தர அவரது மாமியார் தயங்கியுள்ளார். இருந்தாலும் மகள் வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்கும்போது வேறு வழியில்லாமல் திருமணம் செய்து வைக்கிறார். திருமணமான நான்கு மாதங்களில் குழந்தை பிறந்து விடுகிறது. தற்போது மூத்த குழந்தைக்கு 10 வயது ஆகிறது.

இந்த நிலையில்தான் அவர் சுனிதாவை காதலித்து திருமணம் செய்ய திட்டமிட்டார். சுனிதாவின் தந்தை ஆஷிக்கை பார்த்ததுமே இவன் ஒரு பொய்யன் என்பதை கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும் தன் மகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்ற காரணத்தால் இந்தப் பிரச்சனையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தார்.

ஆஷிக்கின் மனைவி தன் கணவனை விட்டுவிடு என்று சுனிதாவிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். மீறி இருவரும் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால் தான் தன் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சொன்னார். ஆஷிக்கை திருமணம் செய்து கொண்டால் குழந்தைகளை கொடுப்பான். தினமும் குடித்து விட்டு வந்து அடி உதை கொடுப்பான் என்று சொன்னார். ஆஷிக்கின் 3 சகோதரர்களும் அதே நிறுவனத்தில் வேலை செய்வதாகவும், இவர்கள் காதலித்த காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்பதையும் சொன்னார். வேறு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த சுனிதாவை ஆஷிக் பைக்கில் ஏற்றிச் சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஆஷிக்கிற்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது, அவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றன என்று தெரிந்தும் சுனிதா அவரை காதலித்ததுதான். செலவிற்காக சுனிதா ஆஷிக்கிற்கு பணமும் மோதிரமும் கொடுத்துள்ளார். தான் குளிக்கும்போது புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்அப்பில் ஆஷிக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதை கண்டறிந்த அவரது தந்தையே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னார். ஒருமுறை இணையத்தில் ஏற்றப்படும் படம் எங்காவது ஒரு இடத்தில் பதிவாகி இருக்கும் என்பதை நிகழ்ச்சித் தொகுப்பாளர் விவரித்தார்.

இறுதியில், ஆஷிக் தன் மனைவி மக்களுடன் பிழைக்கச் செல்வதாக சொல்லிச் சென்று விட்டார். ஆனால் சுனிதா தன் வீட்டிற்கு செல்ல மறுத்தார். ஏதாவது விடுதிக்குச் சென்று தங்குவதாக சொன்னார். செய்த குற்றம் அவரை குறுகுறுக்கக் செய்தது. இத்தனைக்கும் அவரது தாய் தந்தையர் அவரை ஒன்றும் சொல்ல மாட்டோம் என்று மன்றாடினர். அதன் பின்னர், தனிமையில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பெற்றோர் இல்லமே அவருக்கு பாதுகாப்பான இடம் என்பதை புரிய வைத்தார். அதன் பின்னரே சுனிதா தன் பெற்றோருடன் செல்ல சம்மதித்தார்.

நம்ம முற்போக்குவாதிகள் வயது வந்த பெண்ணுக்கு தன் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கத் தெரியாதா என்று புத்திசாலித்தனமாக கேள்வி எழுப்புவார்கள். காதல் கண்ணை மறைக்கும்போது வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியாது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
------------------




No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...