திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி அருகேயுள்ள வேல்
நகரில் காருண்யா டிரஸ்ட் இடத்தில் வைத்து சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் சார்பாக செவ்வாய்
கிழமை முதல் 18 நாள் அன்னதான துவக்க விழா நடைபெற்றது.
தேனி வேதபுரி ஆசிரமத்தைச் சேர்ந்த சுவாமி அத்யாத்மானந்தா மகராஜ் விழாவில்
கலந்துகொண்டு ஆசியுரை வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார். விழாவில் பேசிய சுவாமிகள்
அன்னதானத்தின் மகிமைகள் குறித்து விவரித்துப் பேசினார். விழாவில் தலைமையுரை ஆற்றிய
சமாஜத்தின் மாநில இணை செயலாளர் பி. கணேசன், சபரிமலையில் ஸ்ட்ரெச்சர் சேவையில் சமாஜத்தின்
தேனி மாவட்ட தொண்டர்கள் ஈடுபட்டு வருவதாகவும், அது மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும்
கூறினார்.
விழாவில் கோட்டச் செயலாளர் பி.வி. உதயக்குமார், மாவட்ட பொருளாளர் அ.
பெருமாள் தேவன், செயலாளர் எஸ். கிருஷ்ணன், பெரியகுளம் நகர தலைவர் காமராஜ் பாண்டியன்
ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட இணை செயலாளர் ஏ. விஸ்வம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment