சிறு குறிஞ்சா என்ற இந்த மூலிகை (படம் பார்க்க) கொடி வகையைச் சேர்ந்தது.
இதனை பறிக்கும்போது பால் வரும். இதன் இலையின் அடியில் அரும்பு இருக்கும்.
இதை வைத்து இந்த மூலிகையை அடையாளம் காணலாம்.
அதேபோல இதில் இரண்டு மூன்று இலைகளை பறித்து வாயில் போட்டு மென்றால்
மழுமழுவென்ற உணர்வையும் பின்னர் கசப்பு சுவையையும் ஏற்படுத்தும்.
அதன் பின் சிறிது சர்க்கரையை வாயில் போட்டால் சுத்தமாக இனிக்காது. அதன்
பின் குறைந்தது அரை மணிநேரத்திற்கு இனிப்புச் சுவை தெரியாது.
இந்த மூலிகை உடனடியாக உடம்பில் உள்ள சர்க்கரை நோயை குறைக்கக் கூடியது.
இந்த மூலிகையை காய வைத்து அரைத்து அதில் பாதி அளவு திப்பிலியை அரைத்து
கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் ஒரு மாத்திரை அளவு உட்கொண்டு வரவேண்டும்.
இதனை உட்கொண்ட பின்னர் பால் அருந்த வேண்டும். இது மூலிகையின் சக்தியை
அதிகரிக்கும்.
இது சர்க்கரையை குறைக்கும்போது உடல் பலவீனம் ஏற்படும். அதனைப் போக்க
ஆட்டுக்கால் சூப் வைத்துக் குடிக்கலாம். கொடிய நோய்க்கு மிக எளிய
மருந்து. நம் முன்னோர் கண்டது.
(இன்று எனது காட்டில் உள்ள புதர்களை அகற்றச் சென்றபோது என் தம்பி இதனை
அடையாளம் கண்டு பறித்து வந்தார். என் தம்பி ஒரு ஜோசியரும் மருத்துவரும்
ஆவார்.)
No comments:
Post a Comment