Wednesday, December 3, 2014

யாழ்ப்பானத்தில் ராணுவமும் சாதியும் - பாகம் 4

பாகம் 4 - யாழ்ப்பானத்தில் ராணுவமும் சாதியும்

(தமிழ் ராணுவம் பற்றி, 1992-ல் டி.பி. சிவராம் எழுதிய 11 பகுதி கட்டுரையின் ஒரு பகுதி)

தமிழ்ப் பிரிவினைவாதம் மற்றும் தமிழ் ராணுவம் ஆகிய இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகும். இரண்டுமே 19-ம் நூற்றாண்டில் தமிழர்களின் ராணுவ பலத்தைக் குறைக்க ஆங்கிலேயர்கள் செய்த முயற்சியின் பலனாக ஏற்பட்டவை. தமிழ் ராணுவமயமாகுதலின் எழுச்சி  தமிழ்ப் போர்க்குடிகள் தங்கள் உரிமையை இழந்த காரணத்தால் ஏற்பட்டதாகும். ராணுவ பலத்தை குறைத்ததன் காரணமாக கிடைத்த பலன்களை உறுதிப்படுத்த ஆங்கிலேயர்களால் முன்னெடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் அபிலாஷைகள் காரணமாக ஏற்பட்டதுதான் தமிழ் பிரிவினைவாதம். எனவே பாரம்பரிய அதிகாரத்தை பறிக்கும் காலனி யுக்திகள் மற்றும் தமிழ்ச் சமுதாயத்தில் தமிழ்ப் போர்க்குடிகளின் நிலையை  புரிந்துகொள்வது முக்கியமானது.

இந்தியாவில் ராணுவப்பணிக்காக அல்லது வன்முறைக்காக தங்கள் பாரம்பரிய தொழில்களை கைவிட விரும்பாத மற்ற சாதியினர் வாழும் பகுதிகளில் ராணுவச் சேவை என்பது குறிப்பிட்ட சாதிகளுக்கு உட்பட்டதாக மட்டுமே ருந்தது. வன்முறை செய்யும் திறன் சாதி சார்ந்ததாக இருந்த காரணத்தால், ஒரு பகுதியின் ராணுவச் சாதியை உரிமையிழக்கச் செய்ல் அல்லது நீக்குதல் அதனுடைய வன்முறை மற்றும் கிளர்ச்சி செய்யும் திறனை இழக்கச் செய்வதாக அமையும். இவ்வாறு தமிழ் சமுதாயத்தின் ராணுவத் திறனை அகற்றுவதற்கான துவக்க முயற்சி யாழ்ப்பாணத்தில் போர்த்துகீசியர்களால் செய்யப்பட்டது. அவர்களின் முயற்சி மற்றும் அதனுடைய தாக்கம், அதைத் தொடர்ந்து யாழ்ப்பானத்தில் ஏற்பட்ட சமுதாய பரிணாமத்தை சுருக்கமாக ஆய்வு செய்வது, இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ராணுவத் தன்மையை அகற்றியதன் சமூக மற்றும் அரசியல் விளைவுகளை சிறப்பாக அறிந்துகொள்ள உதவும்.

போர்த்துக்கீசியர்கள் வந்தபோது யாழ்ப்பானத்தில் மறவர்கள் போர்க்குடி சாதியாக  இருந்தனர். அவர்கள் அப்பகுதியை கைப்பற்றியதும் தீபகற்பப் பகுதியில் பிரபுத்துவ ராணுவத்தை அகற்றும் முறையை துவக்கி வைத்தனர். ராணுவ பதவிகளான ராயர், அதிராயர் போன்றவற்றை பயன்படுத்த தடை விதித்தனர். பாரம்பரிய போர்க்குடி சாதிகள் போர்த்துக்கீசியரின் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தன. 1627-ல் யாழ்ப்பானத்தின் கேப்டன் மேஜர் லான்கரோட் டி சீக்ஸாஸ், யாழ்ப்பானத்தில் விவசாயிகளைத் தவிர யாரும் அங்கு இல்லாவிட்டாலே அது பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்ற கருத்தை முன் வைத்தார். இவ்வாறு யாழ்ப்பானத்தில்  வேளாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியது. போர்த்துக்கீசியர்கள் மடப்பள்ளி என்ற மற்றொரு சாதியினருக்கும் ஆதரவு காட்டினர். வேளாளர்கள் விவசாயிகளாக மட்டுமல்லாமல், அவர்களில் ஒரு பிரிவினர் உள்ளூர் நிர்வாகிகள், மொழிபெயர்ப்பாளர்கள், எழுத்துத் திறமை பெற்ற கர்ணம்களாகவும் (கணக்காளர்) இருந்தனர். தொடர்ச்சியாக உருவான காலணி ஆட்சியாளர்கள்  பிராமணர்கள் இல்லாத இடங்களில் வேளாள எழுத்தாளர்களை பயன்படுத்தலாம் என்பதை கண்டனர். யாழ்ப்பானத்தின் வரலாறு எழுதப்பட்டு போர்த்துக்கீசியர்களுக்கு கொடுக்கப்பட்டது. அதில் வேளாளர் மற்றும் மடப்பள்ளி சாதிகள் அந்த தீபகற்பத்தின் பூர்வகுடி மற்றும் ஆதிக்க குடிகள் என்பதை காட்டின.

யாழ்ப்பானம் காலணி ஆதிக்கத்தின் கீழ் வந்த துவக்க காலத்தில் உருவான கைலாய மலை மற்றும் வைய பாடல் ஆகியவைதான் அதுபோன்ற வரலாறுகளாகும். அவற்றில் யாழ்ப்பானத்தில் குடியேற்றங்களை உருவாக்கிய தமிழக பிரபுக்களின் பெயர்கள் குறிப்பிடுகின்றன. அவர்கள் அனைவரும் வேளாளர் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவர்களில் பதினோறு பேர் கள்ளர், மறவர் என்ற சாதிப் பெயர்களைக் கொண்டுள்ளனர். யாழ்ப்பான பிரபுத்துவ ராணுவத்தில் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்பி வந்த மறவர்களை போர்த்துக்கீசியர்கள் அழிக்க முயன்றனர். ஆனால் டச்சுக்காரர்களின் காலத்தில் மறவர்கள் தங்கள் சாதிப் பெயர்களை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர். 1697-ம் இலங்கையின் டச்சு ஆளுனர் மற்றும் இயக்குனரான தாமஸ் வான் ரீ, தனக்குப் பின் வந்த கெர்ரிட் டி ஹீரேயிடம், “மறவர்கள், நிறுவனத்திற்கு உதவக்கூடிய பூர்வீக போர்க்குடிகள், அவர்களுக்கு வேறெதுவும் இல்லாமல் ஆண்டுக்கு இரண்டு பணம் கொடுங்கள்என்று தெரிவித்துள்ளார். ஆனால் 93 ஆண்டுகளுக்கு பின்னர் 1790-ல் டச்சுக் காரர்கள் எடுத்த கணக்கெடுப்பில் யாழ்ப்பானத்தில் 16-70 வயதுக்குட்பட்ட ஆண்களில் 1570 பேர் வேளாளர்களாகவும் வெறும் 49 பேர் மட்டுமே மறவர்களாகவும் இருந்தனர். இது தமிழ்ச் சமுதாயத்தில் ராணுவ சாதிகளில் பரவலாக காணப்பட்ட ராணுவத் தன்மையை இழக்கும் செயல்முறையின் காரணமாக ஏற்பட்டது. அவர்கள், டச்சுக்காரர்கள் நடத்திய கணக்கெடுப்பின்போது வெறுமனே வேளாளர்கள் என்ற சாதிப் பெயரை பயன்படுத்தி அமைதியான வேளாண்மை தொழிலைச் செய்பவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டனர். இவ்வாறு அவர்கள் தங்களை அந்தச் சாதியின் துணைப் பிரிவாக காட்டிக் கொண்டனர்.

1834-ல் சிலோன் கெஜட்டியரில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் பள்ளி (வன்னியர்) வேளாள சாதியின் துணைப் பிரிவுகளாக இருந்தன என்று பதிவு செய்துள்ளார். காலனி ஆதிக்கத்தின்போது தங்களுக்கு எதிரான சூழல் நிலவியதால் தமிழ் ராணுவ சாதிகள் தங்களை வேளாள சாதியின் பிரிவுகளாக காட்டிக் கொண்டன என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இதுவே ஆங்கிலேயரின் ஆட்சியில் தமிழகத்தில் நடைபெற்றது. இதுவே, தீபகற்பத்தில், “கள்ளர், மறவர், அகம்படியார் மெள்ள மெள்ள வேளாளர் ஆனார்கள்என்ற சொல் வழக்கு ஏற்பட காரணமாயிற்று. ஆனால் தமிழகத்தைப் போலல்லாமல் யாழ்ப்பானத்தில் வேளாளர்கள் தங்கள் ராணுவப் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை. “முந்தைய காலங்களில் வேளாளர்களுக்கு ராயன், தேவன், கிழான் மற்றும் மழவன் போன்ற துணைப் பெயர்களும் இருந்தன”.

இன்றும், யாழ்ப்பான வேளாள சமூகத்தில் இந்த போர்க்குடி சாதிகளின் துணைப்பிரிவுகளில் ஒன்று, கள்ளர் சாதிப்  பெயரான மழவராயர் என்ற பெயருடன் நிலங்களை கொண்ட ஆதிக்கம் செலுத்தும் சாதியாக உள்ளதுமழவராயர் பிரிவினர் கிழக்கு மாகாணத்தின் தம்பிலுவில் வராலாற்றுடன் தொடர்புகொண்டவர்கள் ஆவர். மட்டக்களப்பு குடியேற்றங்களை விவரிக்கும் மட்டக்களப்பு மாண்மியம் கிழக்கு மாகாண மக்களில் ஒரு குழுவினராக   மழவராயரை அடிக்கடி குறிப்பிடுகிறது. தமிழ்ப் போர்க்குடிகள் தங்களைவேளாளர்களாக”  காட்டிக்கொள்ளும் செயல்முறை தென்னிந்தியாவுக்கு  முந்தையதாக நடைபெற்றாலும், யாழ்ப்பானத்தில் வேளாளர்களின் ஆதிக்கம் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்திலேயே ஏற்பட்டது. இதற்கு துணைப்பிரிவின் அடையாளங்கள் தொடர்ந்ததும் ஒரு காரணமாகும்.

யாழ்ப்பானத்தில் கலாச்சாரம் மற்றும் மதத்தை வேளாளர் தன்மை கொண்டதாக மாற்றும் முயற்சி ஆறுமுக நாவலரால் துவங்கப்பட்டது. அவர் யாழ்ப்பான மக்களின் மதத்தை, தமிழ் ராணுவ சாதிகளின் தலைவர்கள் மற்றும் கடவுள்களின் மதமாக மாற்ற முயன்றார். யாழ்ப்பான கடற்கரையின் முக்கிய பகுதிகளின் கரையார் சாதியின் கிராமங்களான வெல்வெட்டித்துறை மற்றும் மயிலிடி தொடர்பான குறிப்புகளிலும் போர்க்குடி சாதியினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை கரவா (கரையார்) சாதியினர் தங்களை சத்திரியர் என்றும் குரு பரம்பரையிலிருந்து வந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். இது மயிலிடி கரையார்களின் குறிப்புகளில் காணப்படுகிறது. இது மூன்று மறவர் தலைவர்கள் தங்கள் சாதியினருடன் தமிழகத்திலிருந்து வந்து கரையார்களிடையே திருமணம் செய்து அந்த கிராமத்தை உருவாக்கினர் என்று கூறுகிறது. அதில் ஆதிக்கப் பிரிவு துரையார் பிரிவாகும் - மற்ற பிரிவு பனிவர் ஆகும். இவர்கள் அண்மைக் காலம் வரை மறவர்களின் தாய்நாடான ராமநாதபுரத்துடன் திருமண உறவு கொண்டிருந்தனர்.

மறவர் இளைஞர்கள் புதிய ராணுவ முறைகளை கையிலெடுக்கும் (அதாவது 1980கள்) வரை மயிலிடி துரையார்களிடம் மறவர்களின் ராணுவ நடவடிக்கைகளே பிரபலமாக இருந்தன. ஒரு நாட்டுப்புற பாடலின்படி யாழ்ப்பானத்தில் தமிழர்களின் அரசை நிறுவிய வெள்ளையத் தேவன் என்ற ஆட்சியாளன் கொடுத்த நிலத்திலேயே அந்த கிராமம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் யாழ்ப்பானத்தின் கடைசி மன்னனான சங்கிலியின் ராணுவத்தின் பகுதியாக இருந்து போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்ட வெல்வெட்டித்துறை கரையார்களிடம் ஒரு வலுவான பாரம்பரியம் காணப்படுகிறது. இந்த பாரம்பரியத்தை பயன்படுத்தியே டியூஎல்எஃப் யாழ்ப்பான பகுதிகளில் ஆட்சேர்ப்பு நடத்தியது. இந்தப் பாரம்பரியம்  துவக்ககால காலனி ஆட்சியாளர்களுக்கும் ராமநாதபுரம் மறவர் மன்னர்களுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தக போர்கள் தொடர்பானவையாகவே தோன்றுகின்றன.

போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள், பர்மா, பெங்கால் மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வந்த அரிசி மற்றும் சங்கு வியாபாரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பினார்கள். இது பாக் ஜலசந்தியின் இருபுறமும் தேவர்கள் (ராமநாதபுர மன்னர்களின் துணைப்பெயர்) மற்றும் அவர்களின் முஸ்லீம்கள் மற்றும் தமிழ் வர்த்தகர்களிடம் இருந்து வந்தது. இவர்களில் பலர் வெல்வெட்டித்துறை, பருத்தித் துறை, மற்றும் தொண்டமனாறுவைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர்களான கரையார்களாகவும் இருந்தனர்ஆங்கிலேயர்கள் யாழ்ப்பானத்தில் தேவர்களின் நம்பிக்கையைப் பெற்ற வைத்தியநாதன் என்பவரை கண்டறிந்தனர். அந்த தேவர்களே கொல்கத்தாவில் அவரின் சங்கு வர்த்தகத்தை கவனித்து வந்தனர். ஆங்கிலேயர்கள் ராமநாதபுரத்தை மறவர் அரசர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னரும் கூட கரையார் குடும்பத்தினர் தென்னிந்திய கடற்கரையில் ராமநாதபுரம் முதல் தஞ்சாவூர் வரை முஸ்லீம்கள், செட்டியார்கள் மற்றும் ராணுவ சாதி குடும்பங்களுடன் இணைந்து அரிசி மற்றும் சங்கு வியாபாரத்தைச் செய்து வந்தனர்.

வெல்வெட்டித்துறை, பருத்தித் துறையைச் சேர்ந்த ஏராளமான தண்டயல்கள் (பாராம்பரிய மாலுமிகள் - கப்பல் கேப்டன்கள்தேவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடல் வியாபாரத்தில் பணிபுரிந்தனர். இதுவே 1948-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையேயான பரவலானகடத்தல் வேலைகளுக்கு’  அடிப்படையாக அமைந்தது. 1983 வரை தஞ்சாவூரின் சக்திவாய்ந்த வாண்டையார் (மறவர்) குடும்பத்தினர் வெல்வெட்டித்துறையின் முன்னணி தொழில் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்தனர். சிலசமயங்களில் தென் தமிழக கடற்கரை ராணுவ சாதியினருக்கும் யாழ்ப்பான கரையார்களுக்கும் இடையே திருமண உறவும் ஏற்பட்டுள்ளது. தமிழ் ராணுவ சாதிகள் முழுவதும் வேளாளர் அடையாளத்தை ஏற்றிருந்த  யாழ்ப்பான பகுதி தமிழ்ச் சமூகம் முன்கூட்டியே ராணுவத் தன்மை போக்கப்பட்டு, அவை தென்னிந்திய தமிழ் பகுதியின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தாலும் தற்போதைய காலங்களில் கடுமையான ராணுவ எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இது எவ்வாறு சாத்தியமானது? மூன்று காரணங்களை சொல்லலாம்.

) தமிழ் ராணுவ சாதிகள் முன்கூட்டியே வேளாளர் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் யாழ்ப்பான வேளாளர்களின் காலனி ஆட்சிக்கான ஆதரவு அரசியல் பாரம்பரிய ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக அமையவில்லை. போர்த்துக்கீசியர்களின் காலத்திற்குப் பிறகு இது தீபகற்பத்தில் காலனி ஆட்சிக்கு அச்சுறுத்தும் சமூக அபாயமாகவும் ருக்கவில்லை. மேலும்யாழ்ப்பானத்தில் உள்ள வேளாள சாதியின் கட்டமைப்பின் தன்மை,   தமிழகத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்த உண்மையான வேளாளர்களின் எழுத்து-வேளாண்மை பணிகளுடன் ஒத்ததாக இருக்கவில்லை. யாழ்ப்பானத்தில் வேளாளர் பெயர் தாங்கியவர்கள் பெருமளவு இருந்தனர். தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பானத்தில் உள்ள வேளாளர்கள் இடையே காணப்படும் இந்த அடிப்படை வேறுபாடு இந்தக் கருத்தை விவரிப்பதாக அமையும்.
ஆறுமுக நாவலர் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ராமநாதபுர மறவர் தலைவரான பொன்னுச்சாமித் தேவர் அவரது முயற்சிகளுக்கு ஆதரவளித்தார். முந்தைய காலங்களில் மறவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளை கொலை செய்து கிறிஸ்தவ மத  பரவலை எதிர்த்தார்கள். ஆனால் அதேவேளையில் ஆறுமுக நாவலரைப் போல தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த முன்னணி வேளாள பிரமுகரான ஜே.எம். நல்லசாமி பிள்ளை சைவ சித்தாந்தத்தை தமிழர்களிடையே முன்னெடுத்தார். அவரது பிரச்சாரத்திற்கு ஆங்கில மிஷனரிகள் ஆதரவளித்தன.

நாம் இனி பார்க்கப்போவதைப் போல, நல்லசாமி பிள்ளை தமிழ்க் கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ராணுவ தன்மையை  வெளிக்காட்டிக் கொள்ளாமல், அது அமைதியான வேளாளர்களால் ஆனது என்பதை நிரூபிக்க முயன்றார். ஆனால் அதேவேளையில், யாழ்ப்பானத்தில் அவரைப் போல செயல்பட்ட முத்துத்தம்பி பிள்ளை தீபகற்பத்தில் ராணுவ பாரம்பரியம் குறைந்து வருகிறது என்று குறைகூறினார். அவர் 1912-ல், “யாழ்ப்பானத்தின் கடைசி மன்னனான சங்கிலி  போர்த்துக்கீசியர்களுடன் சண்டையிட்டபோது, அவரது போர்வீரர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பானத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களின் வீரத்தை போர்த்துக்கீசியர்களும் புகழ்ந்தனர். போர்த்துக்கீசியர்களின் வெற்றி அவர்களின் வீரத்தால் பெறப்பட்டதல்ல, காக்கை வன்னியனின் துரோகத்தால் பெறப்பட்டது. யாழ்ப்பான போர்வீரர்கள் இலங்கை முழுவதையும் வெல்லவில்லையா? அந்த வீரர்களின் வாரிசுகளான (யாழ்ப்பான) மக்கள் தங்கள் ராணுவ திறன்களை இழந்து ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆகிவிட்டனர். நீண்டகாலம் வரை போர்த்துக்கீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்களிடம் அடிமைகளாக இருந்த அவர்கள் பலவீனமாகி தங்கள் அடையாளத்தை இழந்தவர்களாகி விட்டனர்என்று எழுதுகிறார்.

முத்துத்தம்பி பிள்ளை, (நாவலருக்கு உதவிய பிரமுகரின் மகனும்) மறவர் பிரமுகருமான பாண்டித்துரைத் தேவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தெரிவிக்கப்பட்ட பண்டைய மற்றும் ஒப்பற்ற ராணுவ பாரம்பரியத்தின் சீரழிவே தமிழ் தேசம் அழிவதற்கு காரணமானது என்ற கருத்தையே பிரதிபலித்தார்.

பி) வேளாளர்களின் முன்னேற்றம் மற்றும் பாரம்பரியம்  முடிவுக்கு வந்தது மற்றும் இலங்கையில் தொடர்ச்சியாக  ஏற்பட்ட சிங்கள அரசாங்கங்கள். காலனி அரசாங்கங்கள் வேளாளர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தமிழ் பிரபுத்துவ ராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக பயன்படுத்தினர். பல்கலைக் கழக சேர்க்கை மற்றும் அரசாங்க பணிகளில் செய்யப்பட்ட கட்டுப்பாடு வேளாளர்களின் காலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், அதன் அஹிம்சை மற்றும் விட்டுக்கொடுக்கும் அரசியலை மிகவும் பாதித்தது. காலனி ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்குப் பின் தமிழ் அடையாளம்-தமிழ் ராணுவத்தன்மை ஆகியவை அவர்கள் கட்டியமைத்த பாதுகாப்பை உறுதிப்படுத்த துவங்கியது.

சி) தீபகற்பத்தில் உள்ள வேளாளர் அல்லாத பகுதிகளில் வேளாளர்களின் பாரம்பரியத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படவில்லை.

(தமிழில் - பெருமாள் தேவன்)

http://www.sangam.org/articles/view2/?uid=1013


No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...