ஜெயலலிதா
சிறை சென்றது ஒருபுறம் இருக்க முக்குலத்தைச் சேர்ந்த ஓ. பன்னீர் செல்வம்
முதல்வராகிவிட்டார். அதை நாம் பாராட்ட வேண்டும். அப்படி பாராட்டா விட்டால் நீ
முக்குலத்தைச் சேர்ந்தவனே இல்லை என்ற ரீதியில் பலரும் பல பதிவுகளை போடுவதைக் காண
முடிகிறது.
தேனி
மாவட்டம் பெரியகுளம் ஓட்டக்காரத் தேவரின் மகன் பன்னீர் செல்வம் முக்குலத்து
மைந்தன் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் அதிமுக கட்சி என்ற நிலையில் அவர்
எந்த நிலையில் இருக்கிறார். அவருக்குள்ள சுதந்திரம் என்ன? அவர்
கடந்த காலத்தில் எந்ததெந்த நிலைகளில்,
அவசியப்படும் நிலைகளில் முக்குலத்திற்காக குரல்
கொடுத்துள்ளார் அல்லது குரல் கொடுக்க முடிந்தது என்பதையெல்லாம் சீர்தூக்கிப்
பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த
காலத்தில் அவ்வாறு முக்குலத்துக்கு குரல் கொடுத்தது யார் என்று பார்த்தால் சாதி, மதம்
கடந்த தேசிய கட்சியான பார்வர்டு பிளாக் மட்டுமே. அதையும் நாம் சீர் தூக்கிப்
பார்க்க வேண்டியுள்ளது.
அப்படிப்
பார்க்காவிட்டால் முக்குலத்து மக்கள் வெறும் உணர்ச்சி கூட்டமாகவே விளங்குவர்.
எந்த
ஒரு மனிதனாக இருந்தாலும்,
அவர் எந்த அமைப்பில் இருந்தாலும், எந்தப்
பதவியில் இருந்தாலும் தான் சார்ந்த சாதிக்கு,
பிரிவுக்கு,
மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தவறுவதில்லை.
ஆனால்
தமிழகத்தில் மண்ணின் மைந்தர்கள் மட்டும் தங்கள் உணர்வுகளைக் காட்டக் கூடாது என்ற
ஒரு மூளைச் சலவைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதற்கு பெரும்பான்மை மண்ணின் மைந்தர்கள்
ஆட்பட்டிருப்பதுதான் உண்மை. அதற்கு தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகளின்
ஆதிக்கமும் ஒரு காரணமாக இருக்கிறது.
முதல்வர்
ஓ. பன்னீர் செல்வத்திற்கு கிடைத்த வாய்ப்பு தேவர்களுக்கு கிடைத்த அடையாள
அங்கீகாரம் என்று மட்டுமே பார்க்க முடியுமே தவிர, அவரை தேவர்களின் பிரதிநிதி
என்றோ, அவரால் முக்குலத்து மக்களுக்கு பெரும் அரசியல் செல்வாக்கு ஏற்படும் என்றோ கூற
முடியாது.
உணர்ச்சிகர
நிலையிலிருந்து விலகி சிந்திக்காதவரை முக்குலத்து மக்கள் தங்கள் அரசியல் உரிமையை
தொடர்ந்து இழப்பார்கள்.
1 comment:
சரியாகச் சொன்னீர்கள்.. இது தமிழ்நாட்டின் சாபம்.. ஆனால், மாயை விலகத் துவங்கியுள்ளது..
Post a Comment