இனம்
என்றால் சிங்கள இனமும் தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை. மொழி
என்றால் சிங்கள மொழியும் தமிழ் மொழியும் என்று இருந்தால் சிக்கலே கிடையாது. இது பண்டார
நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.
ஆயினும்
அத் நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார். தம்மைப் பதவியல் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம்.
சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும் சிங்களவர்களைப் பாதுகாக்கவுமே தம்மை அவர்கள் தெரிவு
செய்தார்களாம். அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும் செய்ய முடியாது என்று கையை
விரிக்கிறார். பாவம்! பதவி போய்விடுமே என்ற பயம்!! பதவி என்ன அவ்வளவு பெரிதா? சர்வாதிகாரம்
சாசுவதமானதா? அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.
சிங்களவர்களுக்குச்
சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கு தமிழ் உள்ளது! சிங்களவர்களுக்குத் தமது
மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில்
உண்டு. ஆகவே, நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள்
இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழத் தேவையில்லை! அடிமைகளாய், உரிமை அற்றவர்களாய்
வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய், மானம் உள்ள தமிழர்களாய்
மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
- தேவர்
4.5.1958
No comments:
Post a Comment