சாதி, இல்லை மதம் இல்லை என்று போலிச் சமத்துவம், போலி மதச்சார்பின்மையை பீற்றிக் கொள்ளும் அரசியல் கட்சிகள்தான் சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்கின்றன என்பது ஊரறிந்த ரகசியம்.
ஆனால் அரசியல் கட்சிகளின் கொள்கையை உண்மை என்று நம்பும் நகரவாசிகள் சாதி மதம் இல்லாத நிலையே முற்போக்கு நிலை என்று நம்புகின்றனர். ஆனால் கிராமங்களின் நிலை வேறு.
அரசியல் கட்சிகள் நியமிக்கும் சாதி, மத பிரதிநிதிகள் கட்சிகளுக்கு விசுவாசிகளாகவும் அவர்கள் சார்ந்த சாதி, மதத்தினருக்கு போலியாகவும் இருந்து வருகிறார்கள் என்பதே வரலாறு.
எனவே இந்த போலித்தன்மையை களைய அரசியல் கட்சிகள் வெளிப்படையாக சாதிகளுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்து வேட்பாளர்களை நியமிக்க வேண்டும்.
அந்த வேட்பாளர்களை சாதிகளின் அங்கீகாரத்தோடு நியமிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
No comments:
Post a Comment