மேரிக் க்யூரியின் மனதில் நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு கேள்வி ஒன்று இருந்து வந்தது. அந்த அந்த கேள்வியை தீர்ப்பதற்கு அவ்வப்போது முயன்று வந்தார்.
ஒருநாள் இரவு அவர் தான் எழுதிய கணித தீர்வுகளை பாதியிலேயே வைத்து விட்டு தூங்கிவிட்டார்.
என்ன ஆச்சரியம் காலையில் எழுந்து பார்க்கும்போது அந்த புதிர் தீர்க்கப்பட்டு இருந்தது. அதை யார் முடித்திருப்பார்கள் என்று மேரிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
வீட்டு வேலையாட்களோ, உறவினர்களோ அந்த புதிரை தீர்த்துவைக்கும் அறிவாற்றல் பெற்றவர்கள் இல்லை. அப்படி அவர்கள் தீர்த்து வைத்திருந்தாலும் மேரியால் தீர்க்க முடியாத அந்த புதிரை அவர்கள் தீர்த்து வைத்திருப்பது பெரிய ஆச்சரியமே.
கையெழுத்தை ஆராய்ந்து பார்த்தபோது அது மேரியின் கையெழுத்தாகவே இருந்தது. அதாவது மேரி தனக்கே தெரியாமல், சுயநினைவற்றவராக இரவில் எழுந்து அந்த புதிரை தீர்த்து வைத்திருக்கிறார்.
இந்த நிகழ்வு மனிதன் தன் உணர்வற்ற நிலையிலும் செயல்படக் கூடியவன் என்பதை காட்டுவதாக அமைந்தது.
No comments:
Post a Comment