தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம் மேல்மந்தைப்
பகுதியில் கள்ளர், மறவர், ஆசாரி, செட்டியார்
போன்ற சாதியினர் வசித்து வருகின்றனர். முன்பு குறவர்களும் இந்தப்
பகுதியில் வசித்து வந்தனர். ஆனால் கடந்த 20 ஆண்டு
காலத்தில் அவர்கள் தங்கள் வீடுகளை மற்ற
சமுதாயத்தவருக்கு விற்று விட்டு சில
தெருக்கள் தள்ளியுள்ள குறவர் காலனி பகுதிக்குச்
சென்று குடியேறி விட்டர். தற்போது ஓரிரு குறவர் குடும்பங்கள்தான்
இங்கே உள்ளன.
ஆனால்
அவர்களுக்குச் சொந்தமான ஸ்ரீ மலைமாரியம்மன் கோவில்
இங்கு அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த
13-06-2017 அன்று மேல்மந்தைப் பகுதியில் உள்ள குறவர் சமுதாயத்திற்குச்
சொந்தமான ஸ்ரீ மலைமாரியம்மன் கோவில்
திருவிழா நடைபெற்றது.
12-ம்
தேதி இரவு அங்கு திருவிழாவிற்காக
வைத்த பதாகைகளில் ஆத்திரமூட்டும் வகையிலான வாசகங்கள் அச்சிடப்பட்டு வைக்கப்பட்டன. அன்று இரவு அங்கிருந்த
பெரியவர்கள் அதை தடுக்க முயன்றனர்
.
ஆனால்
குறவர் சமுதாயத்தவர் அதனை கேட்கவில்லை. இந்த
நிலையில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள்
இந்தப் பிரச்சனையை எனது கவனத்திற்கு கொண்டு
வந்தனர்.
எந்தப்
பிரச்சனை ஏற்பட்டாலும் வன்கொடுமைச் சட்டம் பாயும் என்பதால்
பிரச்சனையைக் கவனமாக கையாள முடிவு
செய்து சட்டப்படி இந்தப் பதாகைகள் குறித்து
13-ம் தேதி தேவதானப்பட்டி காவல்
நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. உடனே
காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கையால்
குறவர் சமுதாயத்தவர் பதாகைகளை கழற்றிச் சென்றனர்.
ஆனால்
இரவு 3 மணியளவில் கரகம் ஜோடித்து வந்த
அவர்கள் அதே பதாகைகளை மீண்டும்
வைத்துவிட்டனர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகளிடம் சொன்னபோது பிரச்சனையை அலட்சியப்படுத்தினர்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. உடனே இது பற்றி பார்வர்டு பிளாக் கட்சியின் தேவதானப்பட்டி நகரச் செயலாளர் மணி, நகர பொறுப்பாளர் எஸ். சுபாஷ், ரமேஷ், பொருளாளர் பிச்சை என்ற மாடசாமி, மாவட்டச் செயலாளர் தங்கராஜு, மாவட்ட பொதுச் செயலாளர் போடி இரா. காசிராஜன், மாவட்டத் தலைவர் மாயாண்டி, மாநில மகளிரணி பொறுப்பாளரும் மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளருமான லட்சுமி, மாவட்ட அமைப்புச் செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான சூரியநாராயணன், இளைஞரணி செயலாயர் முனியாண்டி ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தேன். அவர்களும் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்களில் ஈடுபட தயாரானார்கள். நிலைமை தீவிரமடைந்ததும் காவல்துறையினர் மீண்டும் பதாகைகளை அகற்ற ஏற்பாடு செய்தனர்.
இந்த நிலையில் திருவிழா முடித்து விட்டு குறவர் சமுதாயத்தவர்
பேச்சு வார்த்தைக்கு வந்தனர். அப்போது இனிவரும் வரும் காலங்களில் அதுபோன்ற
அவதூறான வாசகங்களை அச்சிடுவதில்லை என்றும் இளைஞர்களை சரியாக வழிநடத்துவது என்றும்
இருதரப்பினரிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சமுதாய ஒப்பந்தம்
நீடித்த அமைதியை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.
இந்தப்
பிரச்சனை எல்லை மீறிச் சென்று
விடாமல் கையாண்டதில் அகில இந்திய பார்வர்டு
பிளாக் கட்சிக்கு முக்கிய பங்கு வகித்தது.
இதேபோல
2015-ம் ஆண்டிலும் இதுபோன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டு
பதாகையை காவல்துறையே அகற்றியது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment