தேனி
மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர்
ரவி. இவரது மகன் பெயர் அருண்பாண்டியன்(24).
நேற்று
முன்தினம் இரவு 8 மணியளவில் மணல் திருடுவோரை காவல் துறையினர் துரத்திச் சென்றபோது
சார்பு ஆய்வாளர் அழகு ராஜா என்பவர் அருண்பாண்டியனும் மணல் திருடுபவர்தான் என்று
தவறாக புரிந்து அவரை துரத்தியுள்ளார். இதில் அஞ்சி ஓடிய அருண் பாண்டியன் கிணற்றில்
விழுந்து இறந்து விட்டார். இரவு வெகுநேரம் ஆகியும் அருண் பாண்டியன் வீடு
திரும்பவில்லை என்பதால் உறவினர் அவரைத் தேடிப் பார்த்தனர். அப்போது அவர் கிணற்றில்
விழுந்து இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் இவர்களின் ஆத்திரம் காவல்துறை மீது
திரும்பியது.
இந்த
நிலையில் இந்தப் பிரச்சனையை மேற்கொண்டு கையாளும் பொறுப்பை சமுதாயப் பெரியவர்களும்
இறந்தவரின்தந்தையுமான ரவியும் என்னிடம் ஒப்படைத்தனர். பார்வர்டு பிளாக் கட்சியே
இந்தப் பிரச்சனையை கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இது
பற்றி பார்வர்டு பிளாக் கட்சியின் தேவதானப்பட்டி நகரச் செயலாளர் மணி, நகர
பொறுப்பாளர் எஸ். சுபாஷ், மாவட்டச் செயலாளர் தங்கராஜு, மாவட்ட பொதுச் செயலாளர்
போடி இரா. காசிராஜன் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்தேன்.
புகார்
மனுவைத் தயாரித்து சார்பு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஆகியோரிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில்
பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் சமுதாயத்தவர் காவல் நிலையம் முன்பாக
திரண்டு விட்டனர். 300 பேருக்கும் மேலானோர் திரண்டு ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது.
அனைத்து முன்னணி தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் வந்து விட்டனர்.
உள்ளூர்
காவல் நிலையத்தில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை
கொடுத்தோம். ஆத்திரத்தில் இருந்த கூட்டத்தினர் பேருந்து மறியல் செய்ய வேண்டும்
என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.
பெரியவர்களின்
உதவியுடன் அவர்களை அமைதிப்படுத்தி விட்டு, பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அலுவலகம் சென்று புகார் மனுவை அளித்தோம். நேற்று ஞாயிற்றுக் கிழமையாக இருந்தும்
கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து எங்களது புகாரை வாங்கிக் கொண்டார். சம்பந்தப்பட்ட
அதிகாரியை உடனடியாக ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி விட்டதாக சொன்னார். மேலும்
கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக
கூறினார். இறந்தவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய அவர் அரசு நிதியுதவி பெற்றுத் தரவும்
ஒத்துழைப்பதாகக் கூறினார்.
இந்தப்
பிரச்சனையில் கூட்டத்தினர் வரம்பு மீறி செயல்படாமலும் பிரச்சனையை உரிய முறையில்
அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பெருமையும் அகில இந்திய பார்வர்டு பிளாக்
கட்சிக்கே சேரும்.
இணைப்பில்
முதல் தகவல் அறிக்கையும், பத்திரிகை செய்தியின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
http://www.dailythanthi.com/News/Districts/2017/06/19003456/Fearing-the-police-was-a-worker--Fall-into-the-well.vpf
No comments:
Post a Comment