Sunday, September 27, 2015

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 2

இம்மானுவேல் கொலை வழக்கின் தீர்ப்பு - நகல் - பாகம் 2

11. நாம் தற்போது பரமக் குடியில் 11.9.1957 இரவில் நடந்த கொலை சம்பந்தப்பட்ட சாட்சியங்களைக் கவனிப்போம்.

12. சம்பவம் நடந்த இடம், அங்கிருந்த வெளிச்சங்கள் போன்றவைகள் எல்லாம் இரண்டு வரைபடங்கள் மூலம் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த தோராய வரைபடங்கள் அரசு ஆவணங்கள் 39 மற்றும் 40 ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 3 புகைப்படங்கள் மூலமாகவும் (அரசு சான்றாவணங்கள் 41, 42, 43) நிரூபிக்கத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேரடிச் சாட்சியங்களை உற்று நோக்கும் முன்பு நான் ஒன்றை அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. நேரடி மற்றும் உடனடி சூழ்நிலை சாட்சிகளான இருவரும் ஹரிஜனப் பிரிவைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் ஒருவருக்கு மேற்பட்டவர் அவருக்கு நெருங்கிய உறவினர், அவர்களுக்குள் நெருங்கிய உறவு முறையிருந்தது. எனவே அவைகளை இங்கு விளக்கமாக விவரிக்க வேண்டியதில்லை. ஜாதிச் சண்டையை அடிப்படையாக வைத்து நடந்த இந்த கொலையில் இந்த சாட்சிகளை சந்தேகத்தோடு உற்று நோக்க வேண்டியுள்ளது. அவர்களுடைய சாட்சியத்தை மிக்க ஜாக்கிரதையோடும், பாதுகாப்போடும் உற்று நோக்க வேண்டியுள்ளது. ஒரு மெத்தனமாக அவர்கள் சாட்சியத்தை பரிசீலித்தால் உண்மையிலேயே அந்தச் சாட்சிகள் அங்கு இருந்தாலும் அவர்கள் கண்ணுற்றதை நீதியின் பால் ஏற்றுக் கொள்ள இயலாததாகிறது. அது சம்பந்தமாக எந்தவொரு முன் உதாரண வழக்குகளையும் என் முன் தாக்கல் செய்யவில்லை அல்லது அது சம்பந்தமாக நடைமுறையிலுள்ள சட்டப் பிரிவுகளையும் சுட்டிக் காட்டவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அங்கிருந்தார்களா, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் அங்கிருந்தார்களா? அவர்கள் என்ன பார்த்தார்கள்? அவர்கள் பார்க்க முடிந்ததா? இவைகள் கூட பின்னால் செய்யப்பட்ட புலன் விசாரணை இதர பரிசீலனைகள் முடியுமா? பின்னால் அது தொடர்பாக பொருத்தி வரக் கூடிய சாட்சியங்கள் ஆகியவைகளைச் சாரும். இரண்டாவது பரிசீலனை என்பது சம்பவத்தை மற்றவர்கள் பார்த்தனரா? அவர்கள் தனி மனிதர்களா? என்பவைகளை - அவர்களின் நடத்தை யோக்கியாம்சங்களை வைத்துக் கணிக்க வேண்டும். இந்த இரண்டு சோதனைகளிலும் நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தினால், அவர்களது நேரடி சாட்சியங்களை உண்மையென எடுத்துக்கொள்ளவும், நீதிக்கு உகந்ததெனக் கொள்ளவும் முடியும். மேலும் அதை வைத்துச் செயல்படவும் இயலும். இந்த வழக்கில் அவைகள்தான் நடந்துள்ளன. ஆரம்பத்திலிருந்தே இவ்வழக்கில் புலன் விசாரணை முறையாகவும் செம்மையாகவும் நடந்துள்ளன. சாட்சிகள் முறையாக கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே விசாரணை செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக மேலும் கூர்ந்து நோக்க வேண்டியது யாதெனில் அரசு தரப்பு முதல் சாட்சி சந்தானம் கொலை நடந்து முடிந்தவுடனேயே அரசு தரப்பு 30- வது சாட்சியான துணை ஆய்வாளர் துரைராஜை பரமக் குடியில் காவல் நிலையத்தில் சந்தித்து சம்பவம் பற்றி மிகத் துல்லியமாகவும், விளக்கமாகவும் புகார் கொடுத்துள்ளார். இது அரசு ஆவணம் 1 மூலம் அரசு சாட்சி 2 ஜெயராஜ், அரசு தரப்பு சாட்சி 5 சுந்தர வாத்தியார், இருந்ததையும் நிரூபிக்கிறது. பின்னர் அவர்களது சாட்சியங்களும் இதை ஒத்துரைக்கின்றன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அரசு ஆவணம் 1 முதல் தகவலறிந்த அரசு ஆவணம் 26 காவல் துறை பொது நாட்குறிப்பு மீது எதிர் தரப்பினர் குற்றச் சாட்டுக்கள் கூறியுள்ளனர். உண்மையிலேயே அவைகள் பொய்யாக தயாரிக்கப்பட்டவைகளாயின் அவைகள் நேரடி சாட்சியங்களின் சாட்சியத்தை முழுமையாகப் பாதிக்கும். அவைகள் உண்மையாக இருக்குமாயின் அரசு தரப்பு சாட்சிகள் மிக்க வலுவுடையதாயிருக்கும்.

13. சம்பவம் நடந்த போதிருந்த சாட்சிகள் பின்வருமாறு:
1. சந்தானம், 2. ஜெயராஜ், 3. கிருஷ்ணன், 4. மாணிக்கம், 5. சுந்தர வாத்தியார் மற்றும் கருப்பையா சேர்வை (அரசு தரப்பு சாட்சி - 7), இந்தக் கடைசி சாட்சி கருப்பையா சேர்வை தன்னுடைய நடத்தையால் பிறழ் சாட்சியாக கற்றறிந்த அரசு வழக்கறிஞரால் அறிவிக்கப்பட்டார். இவைகள் தவிர மிக முக்கியமான அரசு தரப்பு சாட்சி - 8 செல்லச்சாமியாவார். அவரது சாட்சியம் சம்பவத்தை தெளிவாக விளக்குகின்றது. இவர் சம்பவம் நடந்த பகுதியில் பால் நிலையம் வைத்துள்ளார். அவர் ஆயுதம் தாங்கிய எதிரிகள் கொலை நடந்த பிறகு மேற்குப் பக்கத்தில் கீழ்புறமாக போனதை கூறுகின்றார். இது அரசு சான்றாவணம் 40 வரைபடத்தில் உள்ளதை நிரூபிக்கின்றது. அவர் ஹரிஜனனோ அல்லது மறவரோ இல்லை. யார் மீதும் அக்கறை கொண்டவரும் இல்லை. அந்தப் பகுதியில் கடைகள் மற்றும் ஸ்டால்கள் வைத்துள்ள சில மக்களான அரசு தரப்பு சாட்சிகள், காமாட்சி (..சா.-9), நாராயணன் நாயர் (..சா-10), ராஜூபிள்ளை (..சா. -11), மற்றும் நடராஜன் செட்டியர் (..சா.-12) ஆகியோர்கள் மிக்க தரமான சாட்சியங்களையும், கொலை, கொலை நடந்த இடம் ஆகியவைகளை முற்றிலும் ஒத்துள்ளன.

14. அரசு தரப்பு முதல் சாட்சி சந்தானம் தான் முதுகுளத்தூரில் 10.09.1957-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு கீழ்கனிச்சேரியிலிருந்து 11-ம் தேதி மதியம் பரமக்குடி வந்தார். முதல் தகவல் அறிக்கையான பி-1-ல் அவரது செயல்பாடுகள் குறித்து விவரமாகவும், விளக்கமாகவும் காணப்படுகின்றன. அவைகள் உண்மையாகவும் உள்ளன. அவர் உசிலம்பட்டியில் ஆசிரியர் கல்வி படிக்கும் தன் தங்கைக்கு நல்ல வேலை கிடைக்க அது சம்பந்தமாக அரசு தரப்பு சாட்சி-2 ஜெயராஜை சந்திக்கவே தான் பரமக்குடி வந்ததாகக் கூறியுள்ளார். மேலும் பரமக்குடியில் தங்கி ஜி.எம்.எஸ். பள்ளியில் படிக்கும் தனது சகோதரர் கோவிந்தசாமியையும் பார்க்கும் பொருட்டு வந்ததாகவும் கூறியுள்ளார். செப்டம்பர் 11-ம் தேதி பாரதி பள்ளிக் கூடத்தில் பாரதி விழா நடந்ததாலும் அங்கு அரசு சாட்சிகள் 1 மற்றும் 2 ஆகியோர் அங்கு சென்றனர். அவர்கள் மிகவும் சீக்கிரமே சென்றதால் திரும்பி வந்துவிட்டனர். அவர்கள் ராமநாதபுரம் - மதுரை மற்றும் பள்ளிக் கூட பிரதான சாலைகள் சந்திப்பில் இறந்த இம்மானுவேலையும் (..சா.-5) சுந்தர வாத்தியாரையும் சந்தித்துப் பேசி உள்ளனர். அடுத்து அவர்கள் சிஎஸ்எம் பள்ளிக்குப் போவதை முக்கியமாகக் கருதவில்லை. அவர்கள் மீண்டும் இறந்த இம்மானுவேலையும் ..சா.-5 சுந்தர வாத்தியாரையும் சந்தித்து வளைவிற்கருகில் உள்ள பெட்ரோல் பாங்க் அருகில் பேசிக் கொண்டிருந்தனர். இந்த வளைவு அரசு தரப்பு ஆவணங்கள் 39 மற்றும் 40 தோராய வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த இளைஞர்கள் வளைவிற்கு வந்து சந்தித்து பிறகு ..சா.-1 அந்தப் பகுதியில் உள்ள நம்புனாச்சி உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டார். இதை ..சா.-12 ராமநாதனும் ஒத்துரைக்கிறார்.

அவர்கள் இருவருமே சுதந்திரமான சாட்சிகள் ஆவர். மேலும் அவரே ..சா.-1-க்கு உணவு பரிமாறியுள்ளதாகக் கூறியுள்ளார்இது அவர் கீழ்க்கோர்ட்டில் கூறிய சாட்சியமானதால் (எதிரிகள் ஆவணம்) யாருக்கும் உணவு பரிமாறுவதில்லை என்பதற்கு முரண்பாடாக உள்ளது. ..சா.-1- ஏற்கனவே பார்த்திருப்பதாலும், அவர் பெயர் தெரியாவிட்டாலும் அவருக்கு உணவு பரிமாறியதாகக் கூறியுள்ளார். மேலும் கொலை நடந்த மறுநாள் காலை 7.30 மணிக்கே தன்னை போலீசார் விசாரித்து விட்டனர் என்று கூறுகின்றார். இவரது சாட்சியம் விளக்கமாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ..சா.-2ம் பரமக்குடியில் படித்தவரே அவரும் அவரது உணவை பரமக்குடியிலேயே முடித்துவிடுவார். அதேபோல் அன்றும் தனது உணவை முடிக்கச் சென்றார். ..சா.-1 தனது உணவை முடித்துக் கொண்டு திரும்பி வளைவிற்கு அருகில் இரவு 9.15 மணிக்கு அல்லது அதன் பிறகோ வந்துவிட்டார். அவர் இறந்த இம்மானுவேல், பாதிரியார் வீட்டு முன்பு நின்றிருந்ததைப் பார்த்துள்ளார்.

15. அந்த நேரத்தில் சுமார் 10 பேர் அரிவாள்கள் மற்றும் வேல் கம்புகள் சகிதம் கிழக்குப் பக்கத்திலிருந்து ஓடி வந்து இம்மானுவேலை சூழ்ந்து கொண்டனர். இறந்த இம்மானுவேல் சில அடிகள் பாதிரியார் வீட்டிலிருந்த தட்டி மறைப்பிற்குத் தள்ளி நின்றிருந்தார். இது அரசு ஆவணங்கள் 39 மற்றும் 40-ல் காட்டப்பட்டுள்ளன. இந்த இடம் ரோட்டின் விளிம்பைத் தாண்டி உள்ளது. இதை ..சா.-1 சுமார் 30 அடிகள் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதேபோல் வளைவிற்கு எதிரிலுள்ள நாகலிங்கம் சேர்வை கடைக்கருகில் நின்று ..சா.-2-ம் சம்பவத்தைப் பார்த்தார்.

சம்பவம்போது தான் அருகிலுள்ள சாலமன் கடையில் சிகரெட் வாங்கச் சென்றதாகவும், 4-வது எதிரி இம்மானுவேலின் தலையில் அரிவாளால் வெட்டியதைப் பார்த்ததாகவும் கூறியுள்ளார். அவருக்கு நான்காவது எதிரியை ஏற்கனவே நன்கு தெரியும். பயத்தில் அவர் மேற்குப் பக்கமாக உள்ள இம்மானுவேலின் உறவினர் ஆசீர்வாதம் வீடு நோக்கி ஓடினார். அவர் ..சா.-32 சர்கிள் இன்ஸ்பெக்டரால் மறுநாள் காலையிலேயே விசாரிக்கப்பட்டார் .

மற்ற நேரடி சாட்சிகள் ..சா.-3 கிருஷ்ணன், ..சா.-4 மாணிக்கம் ஆவர். அவர்கள் பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள் ஆவர். அவர்களில் ..சா.-3 பரமக்குடியிலேயே தங்கி இருந்தார். ..சா-4 பக்கத்தில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் பரமக்குடியிலிருந்த உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். மேலும் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருந்தார். அவர் பொதுவாக ..சா-3 கிருஷ்ணனுடன் சேர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காரணம் - இருவருக்கும் சில பாடங்கள் பொதுவானவையாகும். அந்த இளைஞர்கள் இருவரும் இரவில் கண் விழித்துப் படிப்பதற்காக ..சா.-13 பழனியின் கடையில் டீ குடிக்கச் செல்வது இயற்கையே. தூவலைச் சேர்ந்த சில தேவர்கள் அருவாள்கள், வேல் கம்புடன் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு நோக்கி செல்வதை ..சா.-3 மற்றும் 4 பார்த்துள்ளனர். என்ன நடக்கப் போகிறது என்பதை காணும் ஆவலில் இந்த இளைஞர்கள் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். அவர்கள் அந்த கும்பல் ஏதோ அசம்பாவிதம் செய்யப் போகின்றார்கள் என யூகித்தனர். அவர்கள் பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் நின்று நடப்பதைப் பார்த்தனர். இது அரசு ஆவணங்கள் -42 மற்றும் 43 மூலம் காட்டப்பட்டுள்ளது. பாதிரியார் வீட்டு முன்பிருந்த இம்மானுவேலை கலகக் காரர்கள் சுற்றி வளைத்த்தைக் கண்டனர். முன்பே சொன்னபடி 2-வது மற்றும் 3-வது எதிரிகள் கூறியவற்றைகளையே சொல்லியுள்ளனர். அவர்கள் 2 மற்றும் 3-வது எதிரிகளின் குற்றச் செயல்களை எடுத்துக் கூறியுள்ளனர். ..சா.-3 எதிரிகளான 4, 8, 9, 10, 11 மற்றும் 12- மற்ற குற்றவாளிகளிடமிருந்து அடையாளம் காட்ட வைக்கப்பட்டார். ..சா.-4 மற்ற குற்றவாளிகளிடமிருந்து எதிரிகள் 4, 7 மற்றும் 8- அடையாளம் காட்ட வைக்கப்பட்டார்.

16. இது தவிர ..சா.-7 கருப்பையா சேர்வையின் சாட்சியத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ள இயலாது. அவர் பிறழ் சாட்சியாக அறிவிக்கப்பட்டார். காரணம் அவர் விசாரணையில் போலீசாரால் தான் சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் எதிர் தரப்பு ஆவணம் 9 அதை ருசுப் படுத்துவதாக உள்ளது. இது பற்றி பின்னால் விவரிக்கிறேன். ..சா.-8 செல்லச்சாமியின் சாட்சியம் மிகவும் மதிப்பு வாய்ந்த்தாகும். இது சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சியமாக இருந்தாலும் உடனடியாக விசாரிக்கப்பட்டதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  அந்தப் பகுதியில் அவர் பால் நிலையம் வைத்துள்ளார். அது அரசு தரப்பு ஆவணங்கள் 39 மற்றும் 40-ல் குறிக்கப்பட்டுள்ளது. அவர் எதிரிகள் 2, 3, 4, 5 மற்றும் ஐந்தாறு பேர்கள் - அருவாள்கள், வேல்கம்புகள் சகிதம் கிழக்கு நோக்கி சம்பவ இடத்திலிருந்து ஓடி வந்ததைப் பார்த்துள்ளார். அவர் எதிரிகள் 6, 7, 9, 10, 11, 12 ஆகியோரை அடையாளம் காட்ட வைக்கப்பட்டார். மேலும் 2, 3, 4, 5 எதிரிகளை ஏற்கனவே அவருக்குத் தெரியும். அவர் போலீசாரால் மறுநாள் காலையிலேயே விசாரிக்கப்பட்டார். இந்த சாட்சிகள் பற்றிய சங்கதிகளை பின்னால் ஆராய்வோம். ஆனால் நான் அவர் பற்றி ஒன்று சொல்ல வேண்டியுள்ளது. அதாவது அவர் ஒரு அகம்படியார் சாதியைச் சேர்ந்தவர். பொய் சாட்சியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

17. அந்தப் பகுதியில் வசித்தவர்களின் சாட்சியங்கள் மிகவும் உபயோகமாகவும், சம்பவம் நடந்த இடங்கள் ஆகியவைகளைத் தெளிவாக சொல்லியுள்ளனர். இவைகளை விளக்கமாக குறிப்பிடுவோம். உதாரணத்திற்கு ..சா.-11 வெள்ளாள சாதியைச் சேர்ந்தவரும், தனது மாமா பழக்கடையில் வேலை செய்பவருமான ராஜூபிள்ளை என்பவர் சம்பவம் நடக்கும் சற்று முன் கொலை செய்யப்பட்டவரையும், ..சா.-5 சுந்தர வாத்தியாரையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். அவர் ..சா.-5 நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார். அவர் சம்பவத்தை மட்டும் கூறியுள்ளார். யார் குற்றவாளிகள் என்பதை காணவில்லை. காரணம் பயத்தால் பயந்து ஓடிவிட்டார். அவருடைய சாட்சியத்தில் ..சா.-1- தன் கடை முன்பும் நின்றிருந்ததை தான் ஓடும் முன் பார்த்ததாகக் கூறியுள்ளார். அவரை போலீசார் மறுநாள் காலை 6 மணிக்கே விசாரித்து விட்டனர். ஒரு சில சிறிய தவறுகளைத் தவிர இவரது 164 பிரிவு சங்கதிகளில் எந்த தவறும் காண இயலாது. இது அரசு சான்றாவணம் 6-ல் குறிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு வெள்ளாளர், பொய் சாட்சியம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரது சாட்சியம் ..சா.-1 மற்றும் 2 ஆகியோர் நேரடி சாட்சியங்கள் என குறிக்கவில்லை.

18. அதேபோல் நடராஜன் செட்டியார் ..சா.-12, ..சா.-1 அவருடைய நம்புனாட்சி உணவகத்தில் இரவு 9 மணிக்குப் பிறகு உணவு சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். இது மற்றவர்களின் சாட்சியத்தை ஒத்துரைக்கின்றது. அவர் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். பொய் சாட்சியமளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ..சா.-13 பழனி பிள்ளை சம்பவம் நடக்கும் முன்பு ..சா.-3 மற்றும் 4 தன் கடையில் டீ சாப்பிட்டதாக கூறியுள்ளார். ..சா.-12 மற்றும் 13 குற்றவாளிகளை பார்த்துள்ளனர். சம்பவத்தையும் கேள்விப்பட்டுள்ளனர். ..சா.-12 மற்றும் 13 குற்றவாளிகளை ரோட்டில் ஓடிக் கொண்டிருக்கும்போது பார்த்துள்ளனர். சம்பவத்தையும் கேள்விப்பட்டுள்ளனர். ..சா.-13, ..சா.-3 மற்றும் 4- பலமுறை தன் கடையில் டீ சாப்பிட்டுள்ளதால் அவர்களை மறக்க இயலாதென்றும், தன்னை மறுநாள் காலையிலேயே போலீசார் விசாரித்து விட்டதால் மற்றவர்களை ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை எனக் கூறியுள்ளார். இது உண்மையாகவும் இயற்கையாகவும் உள்ளது. ..சா.-5 சுந்தர வாத்தியாரின் சாட்சியம் மிகவும் ஒத்த சாட்சியமாக உள்ளது. இதுவல்லாமல் ..சா.-5 ஓர் ஆசிரியர் ஆவார். அவர் ஏற்றுக் கொள்ளும் வகையிலும், எளிமையாகவும், நேரடியாகவும் சாட்சியம் அளித்துள்ளார். இது சம்பவம் நடந்த அன்று அவர் அந்த பகுதியில் இருந்ததையும், இறந்த இம்மானுவேலுடன் பேசியதையும், முதல் தகவல் அறிக்கை சான்றாவணம் 1-ல் குறிக்கப்பட்டதை முழுமையாக ஒத்துள்ளது. அவரின் மனைவி இறந்த இம்மானுவேலுக்கு சொந்தமென்பதால் தவறான சாட்சியம் அளிக்க வேண்டிய அவசியமில்லை. நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவெனில் அவர் 4-வது எதிரி வெட்டியதை மட்டுமே கூறியுள்ளார். அவர் அத்துடன் நிறுத்திக் கொண்டார். மேலும் எதையும் சொல்லவில்லை. இதிலிருந்தே அவர் சாட்சியம் உண்மையென அறிய முடிகிறது. அவருக்கும் 4-வது எதிரிக்கும் இருந்த பகைமையை ஒன்றுமில்லையென ஒதுக்கிவிட வேண்டியது. இவரும் இறந்தவரும் அப்பகுதியில் வாழைப்பழமும், பாலும் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். சம்பவம் நடக்கும் சற்று முன்பு, இது தொடர்பாக, ..சா.-9 காமாட்சி மற்றும் ...-10 நாராயண நாயரின் சாட்சியங்கள் ஒத்துரைக்கின்றன. அவர்களின் சாட்சியங்களை எக்காரணம் கொண்டும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அவர்கள் ஹரிஜனங்களோ அல்லது மறவர்களோ அல்ல. சாதி சண்டைக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்களாவர்.

19. ..சா.-5 சுந்தர வாத்தியாரின் சாட்சியத்தைப் பற்றி எந்த மாறுபட்ட கருத்துமில்லை. அனால் மருத்துவ சாட்சியத்தில்தான் மாறுபடுகின்றது. ..சா.-6 அமிர்தம் கிரேஸ் இறந்த இம்மானுவேலுவின் மனைவி ..சா.-1-ன் மூலம் சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஓடிவந்தார். அவர் இம்மானுவேல் வீட்டை விட்டு வெளியேறும்போது சோறும் எலும்பு ரசமும் சாப்பிட்டதாகக் கூறியுள்ளார். இது சிறிதளவான சாப்பாடே ஆகும். அதன் பிறகு ..சா.-5 சுந்தர வாத்தியாரோடு வாழைப்பழமும், பாலும் சாப்பிட்டுள்ளார். இதை நான் முன்பே கூறியுள்ளேன். மருத்துவர் ..சா.-29 தான் பிரேத பரிசோதனை செய்த போது 6 அவுன்ஸ் அளவு பாதி செறித்த உணவு இருந்ததாகவும், இவற்றை அடையாளம் காண இயலவில்லை எனவும் கூறியுள்ளார். இவற்றை அடையாளம் காண இயலவில்லை எனவும் கூறியுள்ளார். சோற்றை அடையாளம் காண்பவருக்கு மற்ற பொருட்களை அடையாளம் காண இயலவில்லை. இது தொடர்பாக கடுமையாக குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். எதிரிகள் தரப்பில் அவர் கீழ் நீதிமன்றத்தில் சாட்சியங்களை ஆவணம் 28 ஆகவும், அரசு தரப்பில் ஆவணம் 28 ஆகவும் தாக்கல் பண்ணப்பட்டுள்ளன. குறுக்கு விசாரணையின் சாராம்சம் ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இல்லை. அடையாளம் காண முடியாத உணவுப்பொருள் வாழைப்பழமாகவும்  பாலாகவும் இருக்கலாம். ..சா.-29 அரிசிச் சோற்றை அடையாளம் காட்டியவரே, அடையாளம் காட்ட முடியாதவைகள் பாலாகவும் வாழைப்பழமாகவும் இருக்கலாம் எனக் கூறி உள்ளார். இவ்வாறாக ..சா.-5-ன் சாட்சியம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உள்ளது என ஏற்றுக் கொள்ள வேண்டும்.

20. சம்பவம் நடந்த இடத்திலிருந்த வெளிச்சங்கள் பற்றி பின்னால் தேவையான சந்தர்ப்பத்தில் விவாதித்துக் கொள்கிறேன். எல்லா சாட்சிகளும் ஒருசேர சம்பவம் நடந்த இடத்தில் போதிய வெளிச்சம் இருந்தது என கூறியுள்ளார்கள். நிலவு வெளிச்சம் அப்போதுதான் வந்தது என்றாலும், செயற்கையான வெளிச்சம் அதிகமாகவே இருந்தது. மின்சார வெளிச்சம், குழல் விளக்குகள் மற்றும் மூன்று அல்லது நான்கு கடைகளிலும் விளக்குகள் எரிந்தன. இவைகள் விளக்கமாக அரசு தரப்பு ஆவணங்கள் 39 மற்றும் 40-ல் குறிக்கப்பட்டுள்ளன. ரோட்டிலிருந்த சக்தி வாய்ந்த மின்சார விளக்கு கம்பமிருந்தது. பெட்ரோல் பங்கிலும் மின்சார விளக்குகள் இருந்தன. பாதிரியார் வீட்டிற்கு  அருகிலிருந்த டீக்கடையிலும் மின் விளக்கு (குழல் விளக்கு) எரிந்து கொண்டிருந்தது. நல்ல வெளிச்சம் இருந்தது. பின்னால் இது பற்றி விவரிக்கின்றேன். தெரு விளக்குகள் இரவு 9.30 மணிக்கு நிறுத்தப்பட்டதால் சம்பவ சமயம் விளக்குகள் எரியவில்லை.

21. சம்பவம் நடந்த பிறகு ..சா.-1 சந்தானத்தின் நடவடிக்கை உண்மையான புலன் விசாரணை, ஆகியவைகளை சீர் நோக்கும் முன் சந்தர்ப்பச் சூழ்நிலை சாட்சியம் மிகவும் வலுவாக உள்ளதை நோக்க வேண்டும். ..சா.-16 ரங்கசாமி ஐயங்கார், கிராம தலையாரி மற்றும் கர்ணத்தின் உதவியாளர் ஆவார். அவர் முதுகுளத்தூருக்கு அருகிலுள்ள கிராமத்தில் வேலை பார்த்து வந்தார். சில சந்தர்ப்பங்களில் தனது எஜமானர்களின் வேலைகளை அவரே செய்வார். 11.9.1957 அன்று கடன் சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை ஆய்வாளரைச் சந்திக்க முதுகுளத்தூர் சென்றார். பின்னர் அடங்கல் தஸ்தாவேஜு எடுக்கும் பொருட்டு பரமக்குடி தாலுகா அலுவலகம் சென்றார். அப்போது உதவிக்காக ..சா.-17 கஜேந்திரனை அலங்கானூரிலிருந்து கூட்டிச் சென்றார். அவரே எல்லா செலவுகளையும் செய்தார். அவரும் உதவியாளரும் முதுகுளத்தூரிலிருந்து பரமக்குடி செல்லும் கடைசிப் பேரூந்தில் சென்றார்கள். அது இரவு 8.45 மணிக்கு உடைகுளம் சென்றடைந்தது. இதை ..சா.-15 வேலு குடும்பனும் ஒத்துரைக்கிறார். அவரும் அந்த பேருந்தில் இருந்தவர் ஆவார். உடைகுளம் கிராமத்தில் எதிரிகள் 2, 6, 7, 8 மற்றும் 9 பின்னால் ..சா.-15 ஆல் அடையாளம் காட்டப்பட்டவர், அவரும் அந்த பேருந்தில் இருந்தார். ..சா.- 16 மற்றும் 17 தாலுகா அலுவலகத்தில் இறங்கிக் கொண்டனர்அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அவர்களால் சொல்ல இயலவில்லை. ஆனால் ..சா.-15 குற்றவாளிகளோடு பேருந்து நிலையம் வரை பயணம் செய்தார். அது இரவு 9.30 மணிக்கு பேருந்து நிலையம் சென்றடைந்தது. பேருந்திலிருந்து இறங்கிய குற்றவாளிகள் அங்கு நின்றிருந்த குற்றவாளிகள் 3, 10, 11 மற்றும் 12 ஆகியோரை சந்தித்தனர். அவர்கள் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு பக்கமாக கும்பலாக தொங்கு ஓட்டமாக ஓடினார்கள். இதை ..சா.-3 மற்றும் 4 ஒத்துரைக்கின்றனர். ..சா.-15 அவர்கள் அரிவாள்கள் வேல்கம்புகள் வைத்திருந்ததைப் பார்த்தார். அவர் அங்கு நின்று என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த கும்பல் மீண்டும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடி வருவதைப் பார்த்தார். இவர் சாட்சியம் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் ஒரு சிறந்த சூழ்நிலை சாட்சியாகும். குற்றவாளிகள் சம்பவத்தில் கலந்துகொண்டதும் உறுதியாகும். மேலும் இதை ..சா.-3 மற்றம் 4 கிருஷ்ணன் மற்றம் மாணிக்கத்தின் சாட்சியங்கள் ஒத்துரைக்கின்றன. அவர்கள் குற்றவாளிகளைப் பேருந்து நிலையத்திலிருந்து பின் தொடர்ந்தவர்கள் ஆவர். குற்றவாளிகள் திடீரென ஆயுதங்களை ஏந்தியது ஒன்றும் வியப்பில்லை. பல காரணங்களால் பேருந்தில் வந்த குற்றவாளிகள் ஆயுதங்களை கொண்டு வராமல் இருந்திருக்கலாம். பேருந்து நிலையத்தில நின்றிருந்த குற்றவாளிகள் ஆயுதங்களை கொடுத்திருக்கலாம். பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. ஆனால் அவர்களை எல்லாம் விசாரிக்காமல் ..சா.-15 மட்டுமே இவ்வாறு முழு பயணத்தையும் விவரிப்பதேன்? இவைகள் எல்லாம் இப்படி இருக்க இந்த கொலை முன்பே திட்டமிட்டு கச்சிதமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மற்றைய பயணிகளை விசாரிக்காமலும், இந்தக் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்காமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை. நான் மீண்டும் சொல்ல வருவது என்னவெனில், ..சா.-15 பேருந்தில் இருந்தார் என்பதை ரங்கசாமி ஐயங்காரின் சாட்சியம் (..சா.-16) உறுதிப்படுத்துகிறது. ..சா.-15 தயார் செய்யப்பட்ட சாட்சியமாகக் கூட இருக்கலாம். மேலும் அவர் ஹரிஜன இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். ஆனால் ..சா. அப்படியில்லை. அவர் பொய் சாட்சியம் அளிக்கத் தேவையில்லை. மேலும் அவருக்கு அந்த நேரத்தில் தாலுகா அலுவலகத்திலிருந்து அடங்கலோ அல்லது பசலியோ தேவையில்லை என வாதாடப்பட்டது. ஆனால் அவ்வளவும் எடுபடவில்லை. அதுவன்றி அவர் ஒரு காங்கிரஸ் தொண்டர் மற்றும் அனுதாபி. மேலும் 8-வது எதிரியின் உறவினருக்கும், அவருக்கும் உரிமையியல் பிரச்சனை இருந்தது. அதைத் தவிர அவரை எந்தக் குறையும் சொல்ல முடியாது. அதை வைத்து அவரது சாட்சியத்தை முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. அதனால் 8-வது எதிரியை குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ..சா.-16-ன் சாட்சியம் ..சா.-15 பேருந்தில் வந்ததை மட்டும் சொல்லவில்லை. 5 எதிரிகள் உடைகுளம் கிராமத்தில் பேருந்தில் ஏறி பயணம் செய்த்தையும் உறுதி செய்கின்றனர். இது ஒருபுறமிருக்க அவர் கீழ்க்கோர்ட்டில் எதிரிகள் 2 மற்றும் 6 சரியாக அடையாளம் காட்டவில்லை. இதை எதிரிகளின் தரப்பில் ஆவணம் 13 மூலம் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ..சா.-15-ன் சாட்சியம் நம்பும்படியாக இல்லை. அவர் ஏன் முதுகுளத்தூருக்குப் போனார் என்றும், சந்தைக்குப் போகும் முன் அங்கு போக வேண்டிய காரணங்களைச் சொல்லவில்லை. அவர் மனைவிக்கு குழன்தை பிறந்தது போன்ற எந்த விவரங்களும் புலன் விசாரணையில் இல்லை. மேலும் தன் மனைவி திரும்பி வந்தவுடன் குழந்தையின் பிறப்பு பாம்பூரில்தான் பதியப்பட்டது. முதுகுளத்தூரில் இல்லை என்பதால் சந்தேகமுள்ளது. இவைகள் எல்லாம் சாதாரண நிகழ்வுகள்தான். இம்மனிதன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் பொய்யாக சாட்சியம் சொல்ல வேண்டும் என உறுதிப்படுத்தவில்லை. மேலும் அவர் ஒரு சைக்கிள் திருட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் வழக்குப் பதிவில்லாமல் விடுதலை செய்யப்பட்டார் என அவரை குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் எதற்காக இந்தக் குற்றவாளி மீது பொய் சாட்சியம் சொல்ல வேண்டும்.

22. சம்பவம் நடந்தவுடனேயே ..சா.-1 உடனடியாக இறந்தவரின் வீட்டிற்கு ஓடிச் சென்று அவரது மனைவி ..சா.-6 அமிர்தம் கிரேஸிடம் தகவல் சொல்லியுள்ளார். அதன் பிறகுதான் ..சா. தனது 2 குழந்தைகளோடு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார். ..சா.-6 நேரடி சாட்சியில்லை. ..சா.-1 சொன்னதை ஒத்துரைக்கிறார். அவரிடம் இறந்த இம்மானுவேலுக்கும், அவருக்கும் சுமூகமான உறவு இல்லையென்றும் ..சா.-2-ன் சகோதரி தங்கமணியுடன் இறந்தவர் தகாத உறவு வைத்திருந்ததாகவும் கேட்கப்பட்டது. இது மறுக்கப்பட்டது. இது ஒன்றும் வழக்கைப் பாதிக்கவில்லை. அரசு தரப்பு சாட்சியத்தை நம்பினால், குறிப்பாக 2-வது எதிரி வெட்டும்போது கூறிய வார்த்தைகள்படி இது ஜாதிய பிரச்சனையே! இறந்த இம்மானுவேல் 1-வது எதிரி முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராகப் பேசியதன் விளைவு என்பது புரிகின்றது. அவர் ஹரிஜனங்களுக்கு தலைமை ஏற்பது குறித்து ஏற்பட்ட விளைவு என்பதும் தெரிகின்றது. இவைகளைத் தவிர்த்து நாம் சம்பவத்திற்குப் பிறகு நடந்த புலன் விசாரணையை ஆராய்வோம். சம்பவம் நடந்த இரவு 10.15 மணிக்கு ..சா.-1, ..சா.-30 உதவி ஆய்வாளர் முன்பாக ஆஜராகி முதல் தகவல் அறிக்கை (புகார்) ...-1- கொடுத்தார். அப்பொழுது ..சா.-1-க்கு அது கொலை என்று தெரியாது. வெட்டுப்பட்டவர் பலத்த காயமடைந்தது மட்டுமே .சா..-1-ல் உள்ளது. நான் முன்பே கூறியபடி ..சா.-1 அன்று மாலை பரமக்குடி வந்ததிலிருந்து சம்பவம் நடந்ததை கண்ணுற்ற வரைக்கும் ஆராய்ந்தால் அவர் எதிரிகள் 2 மற்றும் 3 வெட்டியதும் அவர்கள் பேசிய பேச்சுக்களும் தெளிவாகத் தெரிகின்றன. .சா..-1-ன்படி அச்சம்பவம் வெட்டப்பட்ட ஒன்றாகும். துணை ஆய்வாளர் ..சா.-30 ஏற்கனவே இம்மானுவேலை தெரிந்திருந்தாலும், குற்றத்தின் நிலைமையை உணர்ந்திருந்தாலும் அது ஜாதியப் பிரச்சனையாகிவிடும் என உணர்ந்திருந்தார். உடனடியாக அவர் வழக்கை குற்ற எண் 209/1957-ல் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 144, 148, 324 மற்றும் 326-ல் பதிவு செய்தார். அதை தனது பொது நாட்குறிப்பிலும் (.சா..-29) பதிவு செய்தார். அவர் உடனடியாக காவலர் ஒருவரை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வசம் வாய்மொழியாக தகவல் சொல்லி அனுப்பினார். சம்பவம் நடந்த இடத்திற்கு பாதுகாப்பிற்காக காவலர்களை அனுப்பி வைத்தார். பின்னர் (.சா..-1)- 2 நகல்களுடன் தயார் செய்தார். அவைகள் .சா..-31 மற்றும் 32 ஆகும். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். இரவு 10.55-க்கு சென்றார். அவர் அங்கு போகும்போது இம்மானுவேல் இறந்து கிடந்தார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ..சா.-32 ஏற்கனவே அங்கு வந்துவிட்டார்.

23. நாம் இங்கு மற்றொரு புலன் விசாரணை அதிகாரியான ..சா.-32-ன் சாட்சியத்தைக் கோர்வையாகப் பார்ப்போம். அவர் வீட்டிலிருந்தபோது துணை ஆய்வாளர் வாய்மொழியாக, காவலர் மூலம் சொல்லி அனுப்பிய தகவலை இரவு 10.20-க்கு தெரிந்து கொண்டார். உடனடியாக ஒரு தனியார் லாரி மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவர் நேரடியாக காவல் நிலையம் செல்லாமல் சம்பவ இடம் சென்றது பற்றி அவரது நடத்தை பற்றி சந்தேகமும், விமர்சனமும் செய்யப்பட்டது. நான் அதைப் பெரிதாக கருதவில்லை. மேற்கொண்டு சம்பவ இடத்தில் பெரிய அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று சம்பவம் இடம் செல்லவே அதிகாரியின் மூளை வேலை செய்திருக்கும். அவர் சென்ற வழித்தடத்தைப் பற்றி வாதம் என் முன்னே வைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக எதிரி தரப்பு ஆவணமாக ஒரு வரைபடம் ..சா.. 32 ஆக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை மிகவும் சிரத்தையுடன் ஆராய்ந்த போது அந்த அதிகாரியின் நடத்தையில் எந்த குறைபாடும் இல்லை என்று விளங்குகின்றனது. ..சா.-32 சம்பவ இடம் சென்றதும் பல மேலிடங்களுக்கு தந்தி அனுப்பினார். அவை .சா.-38 வரிசை மற்றும் .சா. 29 ஆகும். அதன் பிறகு அங்கு வந்த துணை ஆய்வாளர் ..சா.-30 அங்கு சென்றவுடன் அங்கிருந்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ..சா-32, .சா..1- பார்த்த பிறகு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன்படி திருத்தம் செய்த்தார். உடன் பிரேத பரிசோதனையை தொடங்கியுள்ளார். உடனடியாக குற்றவாளிகள் அந்தப் பகுதியில் ஏதும் உள்ளனரா என தேடுதல் வேட்டையும் செய்துள்ளார். மேலும் ஆயுதங்கள் ஏதும் சிக்குமா எனவும் தேடியுள்ளார். அவர் குற்றவாளிகள் அந்தப் பகுதியில் இடைப்பட்டார்களா என தேடிய சங்கதி ஒரு சாரமற்ற செய்கை என்ற வாதம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ..சா.-32 சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்கள் ஏதும் சிக்குமா என தேடியதாகக் கூறியுள்ளார். பிரேத பரிசோதனையின்போது (அரசு சான்றாவணம் 26 ஆகும்) சாட்சிகள் 1, 2, 3, 4 விசாரணை செய்யப்பட்டுள்ளனர். பின்னர் பிரேதம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. சம்பவ இடத்தில் ரத்தம் படிந்த மண், ஒரு அருவாள் கைபிடி, செருப்புகள் (பொருட்கள் 7, 8, 5 முதலியன) ஆகியன கைப்பற்றப்பட்டன. பின்னர் பிரேத்த்திலிருந்த ரத்தம் தோய்ந்த ஆடைகள் (பொருட்கள் 1, 2, 3) பின்னர் பிரேதத்திலிருந்து கைப்பற்றப்பட்டன. பிரேத விசாரணை காலை 3 மணிக்கு முடிவுற்றது. ஆனால் 3.30 மணிக்கு முதுகுளத்தூர் போலீஸ் வந்தது. மறுநாள் காலை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ..சா.-32 தனது புலன் விசாரணையை மீண்டும் துவக்கினார். ..சா.-5 சுந்தர வாத்தியார் ..சா.-7 கருப்பையா சேர்வை, ..சா.-8 செல்லச்சாமி, ..சா.-9 காமாட்சி, ..சா.-10 நாராயண நாயர், ..சா.-11 ராஜூ பிள்ளை, ..சா.-12 நடராஜ் செட்டியார் மற்றும் ..சா.-13 பழனி ஆகியோர் மறுநாள் முற்பகலிலேயே விசாரிக்கப்பட்டனர். இவ்வாறாக கொலை சம்பவம் பற்றி புலன் விசாரணை முறையாகவும், ஒழுங்காகவும் தொய்வின்றி நடைபெற்றுள்ளது. குற்றம் நடந்த சில மணிநேரங்களிலேயே முறையாக விசாரணை செய்யப்பட்டு எல்லாம் முறைப்படி புலன் விசாரணை கோப்பில் வைக்கப்பட்டுள்ளது. பின்னால் 12.9.1957 அன்று போடப்பட்ட தனி உத்தரவுப்படி சிஐடி ஆய்வாளரால் வழக்கு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் ..சா.-33 ஆவார். பின்னர் அவருடைய தொடர் புலன் விசாரணை மூலம் 1-வது எதிரிக்கு மேற்படி குற்றத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது வழக்கு தனியாகவும் பிரிக்கும்படியும் தயார் செய்திருந்தார்.

24. இருந்த போதிலும் முதல் தகவல் அறிக்கை (.சா..) கால தாமதமாக புனைந்தமைக்கப்பட்ட ஆவணம் என்றும், மற்றும் குற்ற நிகழ்வு ஏற்பட்ட குறுகிய கால அளவிலேயே தயாரிக்கப்பட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், முன்னரே நடைபெற்ற புலனாய்வு பதிவுருவிற்கு எதிராக அமைந்துள்ளது எனவும் குறை கூறப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டப்பட்ட இத்தகைய குறைகள் மிகக் கவனமாக ஆய்வு செய்யப்பட வேண்டியவை. எனவே இவற்றை உடனே ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றேன்.

25. முன் வைக்கப்பட்ட வாதுரை என்னவெனில், சூழ்நிலைகள் இயற்கைக்கு முற்றிலும் மாறுபட்டவை என்றும், குற்ற நிகழ்வுக்கு முன்னரே, சந்தானம் (..சா.-1) அன்னாரது செயல்பாடுகளைக் குறித்து விரிவான மற்றும் திட்டவட்டமான விவரங்களைக் கூறியுள்ளார் எனவும், அல்லது சார்பு ஆய்வாளர் (..சா.-30) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னரே, இத்தகைய மு.. அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் ஆகும். சார்பு ஆய்வாளர் (..சா.-30) நேர்மையான வளைந்து கொடுக்கும் தன்மையில்லாத அலுவலராகவும், தனது கடமைப் பொறுப்பினை செவ்வனே ஆற்றுபவராகவுமே எனக்குத் தோன்றுகிறார்அறிக்கையின் முக்கியத்துவத்தை விரைவிலேயே உணர்ந்து கொண்ட காரணத்தினாலேதான், அவர் ..சா.-1-ன் முழு வாக்குமூலத்தினையும் பதிவு செய்து உள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பு அரசு வழக்கறிஞர் (திரு. எத்திராஜ்) சரியாகக் கூறியது போல, அன்னார் மு...-யை ... பிரிவு 326-ன் கீழ் உடனே பதிவு செய்ததிலிருந்து, அதன் நம்பகத்தன்மை மெய்பிக்கப்படுவதுடன், இது வெகு கால தாமதமாக, சம்பவ இடத்திற்கு சென்ற பின்னரே உருவாக்கப்பட்ட ஒன்று என்ற சாட்டுரை ஆதாரமற்றதாக ஆகிவிடுகிறது. அவ்வாறு இருந்திருந்தால், மு... மற்றும் ..சா.-1 சந்தானத்தின் சாட்சியம், பிரிவு 302 ... கீழ் வரும் வழக்காக ஒத்துரைக்கப்படும் தன்மை உடையதாகப் படைக்கப்பெற்றிருக்கும். சிறப்பு விசாரணை முடிவடைவதற்கு முன்னரே ..சா..-1-ல் எதிரி4-ன் பெயர் காணப்படவில்லை என்பது சம அளவில் முக்கியமானதாகும்.

.சா..-1-ஐப் போன்ற அறிக்கையினை பதிவு செய்திடலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்  கொண்டு பார்க்கையில் இத்தகைய முன்னுரிமையினை கட்டாயம் வழங்கிட வேண்டுமென ..சா.-30 நினைத்திருக்கக் கூடும். அவர் சம்பவ இடத்திற்கு உடனே ஒரு காவலரை அனுப்பி வைத்தார். மற்றும் தன் உயர் அதிகாரிக்கு (..சா.-32) வாய்மொழித் தகவலும் அனுப்பியுள்ளார். மற்றுமொரு குறிப்பும் இதில் கவனிக்கத் தக்கது. குற்ற நிகழ்வு ... பிரிவு 326-ன் கீழ் பதிவு செய்யப்பட்டதால், ...-1-ன் மூன்று நகல்களிலும் ..சா.-30, இரண்டாவது தாளில் அவர்தம் மேற்குறிப்பினைச் செய்துவிட்டார். மற்றும் அதனை (மு...) வழக்கப்படி சார்பு கோட்ட நடுவருக்கும் அனுப்பி வைத்துவிட்டார். (.சா..-1 (அசல்), .31, .32 (கார்பன் நகல்) இவை அனுப்பப்பட்டுவிட்டன. இந்த மூன்று நகல்களிலும் இரண்டாவது தாளில் உள்ள அடிப்பகுதி - மேலனுப்பும் மேற்குறிப்பு கிழிக்கப்பட்டுள்ளது. ஆனால்பணிந்தனுப்புகைஎனும் சொல் நன்கு தெரிகிறது. ..சா.-30 தரும் விளக்கமானது, இந்த வழக்கு கொலை வழக்கு எனத் தெரிந்துகொண்டதும், இவ்வாறு செய்ததாகவும் மற்றும் பரமக்குடி சார்பு நடுவருக்கு மட்டுமே இதில் அதிகார எல்லை உண்டு என்கிறார். இது எதைக் காட்டுகிறது எனில், இவ்வழக்கு உண்மையிலேயே கொலை வழக்கு என்று அச்சமயத்தில் அறிந்து கொள்ளாத காரணத்தால், மு... உடனேயே தயாரிக்கப்பட்டுவிட்டது என்பதை இது காட்டுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------
நன்றி - 1957 யார் காரணம்? முதுகுளத்தூர் கலவரம்
பசும்பொன் தேவர் ஆன்மீக மனிதநேய நலச் சங்கம்
14, ஆண்டவர் நகர், 2-வது தெரு,
கோடம்பாக்கம், சென்னை - 600024

--------------------------------------------------------------------------------------------------------

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...