பகுதி - 3 தமிழ்
ராணுவம்
- தற்கொலை
விதிமுறை
மலபார் பகுதியில் நாயர் என்றழைக்கப்படும் மற்றொரு போர்க்குடி
சாதி உள்ளது. இந்த சாதியினரின் வேலையே போர் புரிவதுதான்.
இவர்கள் எங்கே போனாலும் தங்களுடைய ஆயுதங்களுடன்தான் போவார்கள். இவர்கள் தாங்கள் சேவை செய்யும் ராஜாக்கள் மற்றும் வேறு பிரபுக்களிடமிருந்து
சம்பளம் பெறாவிட்டாலும் எல்லாரும் அவர்களுடன்தான் வாழ்வார்கள். நாயர் தொடர்பில்லாதவர்கள் நாயர் ஆக
முடியாது. அவர்கள் தாழ்ந்த சாதியினர் யாரையும் தொட மாட்டார்கள்.
பெரும்பாலும் ஏழு வயதாக இருக்கும்போதே நாயர்கள் ராணுவ பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அங்கு அவர்களுக்கு லாகவம், சாமர்த்தியத்தின் பல
தந்திரங்கள் கற்றுத் தரப்படும். அவற்றையெல்லாம் கற்றுக் கொண்ட
பின்னர் அவர்கள் மிகவும் விரும்பும் ஆயுதங்களைக் கொண்டு போரிட கற்றுத் தரப்படும்.
நாயர்கள் அனைவரும் வலிமையான போர்வீரர்கள். (1)
ஜமோரின் (சேரர்களின் ஒரு பிரிவு) பற்றி எழுதும் தோராதே பர்போஸா இவ்வாறு எழுதுகிறார். போர்த்துக்கீசியர்கள்
இந்தியக் கடலுக்குள் நுழைந்த சில ஆண்டுகளுக்குள் அவர்களால் எழுதப்பட்ட ஆவணங்களில் இவ்வாறு
குறிப்பிடப்படுகிறது. பர்போஸாவால் விவரிக்கப்பட்ட பிரபுத்துவ
ராணுவ அமைப்பு தென்னிந்தியாவின் மலபார் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக காணப்படுவதாகும்.
இதன் தெற்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் ராணுவ சாதிகள் மறவர்,
கள்ளர் மற்றும் அகமுடையார் என்று அழைக்கப்பட்டனர். இதில் கள்ளரும் மறவரும் ராஜ மரபு கொண்டவர்கள் ஆவர். போர்த்துக்கீசியர்கள்
வந்தபோது இந்த பிரபுத்துவ ராணுவ முறை யாழ்ப்பானத்தில் இருந்தது. அப்போது பாக் ஜலசந்தி மறவர் குடா என்று அழைக்கப்பட்டது.
தமிழ்நாடு பாளையம் என்றழைக்கப்படும் பல பிரபுக்களின் பகுதிகளாக
பிரிக்கப்பட்டிருந்தது. பாளையம் என்பதற்கு ‘ராணுவ முகாம்’ என்று பொருள். (2), அதன்
தலைவர் பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டார். பெரும்பாலான தமிழ்ப்
பாளையக் காரர்கள் மறவர்களாக இருந்தார்கள். இவை ஒவ்வொன்றையும்
கள்ளர், மறவர், அகப்படையார் வீரர்களைக்
கொண்ட அமைப்பு நிர்வகித்து வந்தது. “இவர்கள் போர்க்காலங்களில்
போரிடுவர். அமைதி காலங்களில் வேட்டையாடுதல், ராணுவ கலைகளை பயிற்றுவிப்பது, முரட்டுத்தமான மற்றும்
யதார்த்தமான குணங்களை வளர்த்துக் கொள்வார்கள்”. மேலும் கிராமங்களை
காவல்காத்து உதவுவார்கள் (3). “யாழ்ப்பாணத்தில் மறவர்கள் போர்க்கலையை
பதினாறு வயதிலிருந்து இருபத்து நான்கு வயதாகும் வரை கற்கத் துவங்குவார்கள்.
அதன் பின் அவர்கள் அரசர் கொடுக்கும் நிலத்தில் வாழ்ந்துகொண்டு கிராம
காவல்காரர்களாக ஆக இருக்க வேண்டும்.
அரசன் கூப்பிடும்போது ராணுவச் சேவைக்குத் திரும்ப வேண்டும்
(4)”.
தமிழ்நாட்டில் இருந்த ராணுவ அமைப்பு பதினெட்டாம் நூற்றாண்டில்
ஐரோப்பாவில் எட்டாத கனவாகவே இருந்தது. அவை தங்களது செய்முறைகளை வளர்த்து ஒழுங்குபடுத்துவதில்
இருந்தன. புதிய ஆட்சேர்ப்பை பொறுத்தவரை அவர்கள் “விவசாயிகளை புறக்கணித்து” வந்தனர். அவருக்கு ஒரு “ராணுவ வீரரின் அடையாளத்தைக் காட்டினார்கள்”. 18-ம் நூற்றாண்டின்
ராணுவ சிந்தனையாளரான ஜே. செர்வன், தனது
‘சோல்ஜர் சிட்டிஜன்’ (1780) புத்தகத்தில் இவ்வாறு
எழுதியுள்ளார்.
அவர்
“தனது
நாடு
முழுவதையும்
பாதுகாக்கக்
கூடிய
ஒரு
ராணுவம்
இருக்க
வேண்டும்,
அதில்
ஒவ்வொரு
தனிநபரும்
எந்தவித
இடையூறும்
இல்லாமல்
ஈடுபட
வேண்டும்
என்று
கனவு
கண்டார்.
ஆனால்
அவர்
கண்டறிந்த
மரபணு
வரிசையின்படி
அது
உருவாகும்
பிரிவைப்
பொறுத்தவரை
அது
வேறுபட்ட
வழியாக
இருக்க
வேண்டும்.
ராணுவ
வாழ்க்கை
குழந்தைப்
பருவத்திலேயே
துவங்க
வேண்டும்.
அப்போது
குழந்தைகள்
ராணுவ
தளங்களில்
ஆயுதப்
பயிற்சி
பெற
வேண்டும்.
அங்கேயே
அது
நிறைவடைய
வேண்டும்.
ராணுவ
பணியை
முடிப்பவர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க
வேண்டும்.
ஆட்சேர்ப்பு
நடத்த
வேண்டும்.
வீரர்களின்
பயிற்சிகளை
மேற்பார்வையிட வேண்டும்.
இறுதியில்
எல்லைப்
பகுதியில்
ராணுவம்
போரிடும்போது
நாட்டில்
விலக
வேண்டும்.
(9)”
சிறந்த
பாளையம்
சேர்வைக்காரர்களின் ராணுவத்தைக்
கொண்டதாக
இருந்தது.
அதில் கள்ளர்,
மறவர்,
அகம்படியார்
மற்றும்
நாயர்கள்தான்
‘பழமையான
குடிமக்களாக’
(பங்கேற்பாளர்களாக)
இருந்தனர்.
ஒவ்வொரு
பாளையமும்
ஒரு
நெறிமுறையைக்
கொண்ட
ராணுவ
கலாச்சாரத்தைக் கொண்டதாக
இருந்தது.
தமிழ்நாட்டில் அதிக
பாளையங்கள்
இருந்த
கொங்குப்
பகுதியில்
ராணுவ
தற்கொலை
வழக்கம்
இருந்ததை
காண
முடிகிறது.
முன்னதாக
ஐரோப்பியர்கள் தமிழ் நாட்டின்
இருந்த
ராணுவ
அமைப்பை
ஆராய்ந்தனர்.
அப்போது
இரண்டாம்
ஃப்ரடெரிக்-ன்
வெற்றிகளுக்குப் பின்னர்
ஐரோப்பா
முழுவதும்
இருந்த
ப்ருஸியன்
காலாட்படையின் ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டன.
அவற்றில்
சில
தமிழ்
ராணுவத்தில்
இருப்பதைக்
கண்டறிந்தனர்.
18-ம்
நூற்றாண்டைச்
சேர்ந்த
ஆங்கில
ராணுவ
வரலாற்று
ஆசிரியரான
ராபர்ட்
ஓர்மி
தமிழ்நாட்டின் ராணுவ
சாதிகளை
இதுபோலவே
விவரிக்கிறார்.
அவர்
சொல்கிறார்,
“அவர்கள்
உயரமானவர்கள்,
கட்டுமஸ்தான
உடலமைப்புக்
கொண்டவர்கள்.
அவர்களின்
ஆயுதங்கள்
வேல்,
ஈட்டி,
வில்,
அம்புகள்,
ராக்கெட்கள்
மற்றும்
தீப்பந்தங்கள்.
மற்ற
ஆயுதங்கள்
இருக்கின்றனவோ இல்லையோ
அவர்கள்
தொடர்ச்சியாக
வாளும்
கேடயமும்
அணிந்திருப்பார்கள்.
போர்க்களத்தில் ஒவ்வொரு
ஆயுதமும்
ஒவ்வொரு
பிரிவில்
பயன்படுத்தப்படும்.
ஆனால்
வேல்படை
அனைத்துப்
படையிலும்
சிறந்தது ஆகும்.
அவர்களே
அனைத்துத்
தாக்குதல்களையும் முன்னடத்திச்
செல்வார்கள்.
இந்த
ஆயுதம்
பதினெட்டு
அடி
நீளமுள்ளதாக
இருக்கும்.
அவர்கள்
குதியின்
பிடறி
மயிறின்
கீழாக
கட்டி
வைத்திருப்பார்கள்.
அவர்கள்
குதிரையைத்
தாக்கும்போது,
ஒரு
சிறு
மணியை
கட்டியிருப்பார்கள்.
முன்னதாக
பயிற்சி
இல்லாமலேயே,
அவை
ஒன்றோடு
ஒன்றாக
நெருக்கமாக
நீண்ட
தூணைப்
போல
வரிசையாக
நிற்கும்.
அப்படியே
நீண்ட
உறுதியான
அடிகளால்
முன்னேறிச்
செல்லும்.
சில
சமயங்களில்
அவர்களின்
வேல்கள்
சரிவதாக
இருந்தாலும்
உயரவே
இருக்கும்.
அவை
வளையக்
கூடியதாகவும்
அதிரக்
கூடியதாகவும்
இருக்கும்.
அந்த
ஒலியே
அச்சத்தை
ஏற்படுத்துவதாக இருக்கும்.
அவர்களின்
அணுகுதல்
துப்பாக்கிப்
படைக்கு
சிறிதும்
சளைத்ததல்ல.”
(6)
பூமாராங்
- தமிழில்
வலைத்
தடி
எனப்படும் மற்றொரு
ஆயுதம்
பாளையக்காரர்களின் ராணுவத்தில்
முக்கிய
பங்காற்றியது.
கள்ளர்
மற்றும்
மறவர்கள்
இந்த
ஆயுதத்தைப்
பயன்படுத்துவதில் திறமை
பெற்றவர்களாக
இருந்தனர்.
“எதையும்
ஒரே
அடியில்
வீழ்த்தக்
கூடியவர்களாக
இருந்தனர்.
(7)” ஜப்பானில்
பகுஹான்
முறை
இருந்தது
போலவே,
பாளையம்
அமைப்பு
போர்வீரர்கள்,
விவசாயிகள்,
கலைஞர்கள்
மற்றும்
வர்த்தகர்களை
கொண்ட
ராணுவ
பிரபுக்களை
அடிப்படையாக
கொண்டு
அமைந்தது.
இவற்றில்
சாதி
அமைப்பு
முறை
கடுமையாக
அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனை அடையாளப்படுத்த வேண்டுமானால்
தமிழ்ப்
போர்வீரர்கள்
ஜப்பானின்
சாமுராய்களைப் போல
இருந்தனர்.
அவர்கள்
தங்கள்
வாட்களை
அணியாமல்
எங்கும்
செல்ல
மாட்டார்கள்.
ஏனெனில்
அந்த
அமைப்பு
அவர்களின்
ராணுவ
பலத்தால்
நிர்வகிக்கப்பட்டது.
1779-ம்
ஆண்டு
இந்த
நாட்டின் பாளையக் காரர்களுக்கு கலெக்டராக அனுப்பப்பட்ட
திரு
லூஷிங்டன்
இங்கு
கிடைத்த
பெரும்
நில
வரியை
வசூலிக்க
திட்டமிட்டார்.
அவர்
தமிழகத்தில்
இருந்த
பிரபுத்துவ
ராணுவ
அமைப்பு
மிகவும்
மோசமானதாக
விவரிக்கிறார்.
“பாளையங்களில்
காவல்
கூலிகள்
அமைதியாக
வழங்கப்படாதபோது,
சித்தரவதை,
சாட்டையால்
அடித்தல்,
கிராம
மக்கள்
அனைவரையும்
அடைத்து
வைத்தல்,
எல்லா
தொழிலுக்குமே
தடை
விதித்தல்,
கால்நடைகளை
பறிமுதல்
செய்தல்,
அங்கு
வசிப்போர்
கைது
செய்யப்படுதல் எப்போதாவது
கொலை
செய்யப்படுவதுண்டு....
நாட்டில்
அரசின்
நிலங்களில்
விவசாயம்
செய்வோர்
மீது
இதுபோன்ற
பயங்கரங்கள்
செய்யப்பட்டாலும் மீதியுள்ளோர்
ஆயுதம்
தரித்து
இருந்தாலும்
மற்றவகையில்
அமைதி
நிலவும்.
இதுபோன்ற
வசூல்
நடவடிக்கைகளுக்கு ஒருபோதும்
எதிர்ப்புத்
தெரிவிக்கப்படவில்லை.
(7)”
ஒரு
கடுமையான
மற்றும்
பண்டைய
ராணுவக்
கலாச்சாரம்
ராணுவ
சாதிகளால்
வளர்க்கப்பட்டு வந்த்து.
இந்தியாவின்
மற்ற
ராணுவ
பகுதிகளில்
உள்ளதைப்
போலவே,
பாரம்பரிய
ராணுவம்
சமுதாயத்தின்
பல
நிலைகளில்
ஊடுறுவி
இருந்தது.
ஆகவே,
பெரும்
கோவில்
மையங்கள்
இருந்தபோதிலும்,
தமிழ்நாட்டின் கிராமங்கள்
அனைத்திலும்
ராணுவ
கலாச்சாரத்தின் மாவீரர்கள்
வணங்கப்பட்டு
வந்தனர்.
ஜப்பானில்,
சாமுராய்கள்
க்யூபா-நோ-மிச்சி-யின் (வில்
மற்றும்
குதிரை
வழிமுறை)
பாரம்பரியத்தை வளர்த்தனர்.
தமிழ்நாட்டில்,
ராணுவ
சாதிகளின்
ஒழுக்க
நெறியாக
மறம்
இருந்தது.
தமிழ்
பிரபுத்துவ
ராணுவத்தில்,
மற்ற
நவீனத்திற்கு
முந்தைய
ராணுவத்தில்
இருந்தவை
அல்லாத
மூன்று
குணங்கள்
இருந்தன.
அவை,
(ஏ) புறத்தினை
என்றழைக்கப்படும் போர்,
போர்வீரர்களின் ராணுவ
வாழ்க்கை
மற்றும்
சடங்குகள்
போன்றவற்றின்
முறைகளின்
விரிவான
சங்கேதக்
குறிகள்.
(பி) போரை
நடத்துவதில்
மதம்
வழங்கும்
தெய்வீக
பங்கேற்பு
மற்றும்
துரோகத்தை
மறுத்தல்.
மத்தியகால
ஆய்வாளரான
நச்சினார்க்கினியர்
“துரோகம்
மற்றும்
கடவுள்
அளித்த
தெய்வீக
சக்தியின்
மூலம்
கொல்லும்”
விதிமுறைகளை
புறந்தள்ள
வேண்டும்
மற்றும்
கடவுள்களை
ஈடுபடுத்தும்
போர்
முறைகளை
மறுக்க
வேண்டும்.
இந்த
முறைகள்
தமிழ்
கூறும்
நல்லுலகம்
சார்ந்ததல்ல”
என்று
சொல்கிறார்.
(சி) போர்களை
பூக்களால்
வகைப்படுத்துதல்.
குறிப்பிட்ட
போர்
முறையில்
போர்
புரிவதை
அந்த
பூக்களை
அணிந்து
குறிப்பிடுதல்.
ராமாயண
ஆசிரியர்,
“தென்னிந்தியர் போர்களின்
போது
பூக்களை
அணிந்திருப்பர்” என்று
குறிப்பிட்டுள்ளார்.
நெறிமுறைப்படுத்தப்பட்ட தமிழ் பிரபுத்துவ
ராணுவம்
வளர்க்கப்பட்டு பின்பற்றப்பட்டது பற்றி
புறத்தினையாக
செந்தமிழ்
கவிதைகள்
மற்றும்
இலக்கணங்களில் புகழ்ந்து
கூறப்பட்டுள்ளது.
பண்டைய
இலக்கண
நூலான
தொல்காப்பியம்,
புத்த
மதத்தின்
இலக்கண
ஒப்பந்தமான
வீரசோலியம்,
சைவ
இலக்கண
விளக்கம்
(17-ம்
நூற்றாண்டு)
மற்றும்
சுவாமிநாதம்
கடந்த
[19-ம்] நூற்றாண்டின்
முற்பகுதியைப் பற்றி
குறிப்பிட்டுள்ளன.
இவற்றில்
தமிழ்
ராணுவம்
பற்றி
குறிப்பிட்டு
விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்
ராணுவ
கலாச்சாரம்
பல
காலமாக
முழுமையாக்கப்பட்டது மற்றும்
நெறிப்படுத்தப்பட்டது.
அது
தமிழ்க்
கலாச்சாரத்தில் இலக்கியங்கள்,
பதிவுகள்,
சிறு
கவிதைகள்
போன்றவற்றின்
மூலமாக
விளக்கப்பட்டு இந்தக்
கருத்து
உருவாக்கப்பட்டது.
ஆங்கிலேய
இந்திய
ராணுவத்தில்
ராணுவச்
சேர்க்கைக்கான குறிப்பேட்டில் சீக்கியர்கள்
பற்றி
ஒரு
கருத்துக்
கூறப்பட்டுள்ளது.
அதாவது,
“அரசியல்
பரவச
நேரங்களில்
ராணுவ
உற்சாகம்
தன்னைத்தானே
உறுதி
செய்துகொள்ளும்போது தேசிய
அல்லது
மத
ரீதியான
அனைத்து
சீக்கியப்
பாரம்பரியமும் ராணுவ
ரீதியானவையே.”
(9) மேஜியின்
மீட்சியில்
தப்பிய
ஜப்பானிய
பிரபுத்துவ
ராணுவத்தின்
கலாச்சாரம்
மற்றும்
வகுப்புவாரி
நலன்
ஜப்பானின்
ராணுவ
தேசியம்
மற்றும்
அது
தற்கால
ராணுவ
சக்தியாக
வளர்ச்சி
அடைந்ததில்
பகுதி
தாக்கத்தையும் வடிவமைப்பையும் ஏற்படுத்தியது.
அதுபோலவே தீவிரவாதமாகும்போது ‘உயர்ந்த தமிழர்’ குறியீடுகளான
கலாச்சாரம்
மற்றும்
கட்டமைப்புகள் மற்றும்
தமிழ்
ராணுவ
பிரபுத்துவ
வடிவம்
தமிழ்த்
தேசியத்தின்
மீது
தாக்கத்தை
ஏற்படுத்தி
அதனை
வடிவமைத்தது
என்று
சொல்லலாம்.
ஆகவே
தமிழ்
பிரபுத்துவ
ராணுவத்தின்
இரண்டு
பரிமாணங்கள்
தமிழின
மறுமலர்ச்சி
மற்றும்
ராணுவத்தை
உறுதி
செய்தன.
அவை
இங்கே
சுருக்கமான
ஆராயப்படுகின்றன.
அவை,
(ஏ) தமிழர்களின்
ராணுவ
பலத்தை
பாராட்டி
தமிழ்க்
கலாச்சாரத்தில் சொல்லப்பட்டவை.
மிகவும்
முக்கியமாக
இவற்றின்
சுருக்கமான
வடிவம்
என்னவென்றால்
தமிழ்
அரசர்கள்
வட
இந்திய
ஆரியர்களை
தோற்கடித்து
அது
இமயத்தில்
சின்னமாக
பொறிக்கப்பட்டதே.
பாண்டிய
அரசன்
நெடுஞ்செழியன் ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ’
என்று
பட்டம்
பெற்றுள்ளான்.
மூன்று
தமிழ்
மன்னர்களான
சேர,
சோழ
மற்றும்
பாண்டிய
மன்னர்கள்
பரவலாக
பல
இலக்கியம்
மற்றும்
கல்வெட்டுக்களில் இந்த
வெற்றியால்
வேறுபடுத்திக் காட்டப்படுகின்றனர்.
இந்த
விவரணைகள்
ஜப்பான்
மங்கோலியர்களுடன் செய்த
போரில்
கமிகாஸ்
படையினர்
பெற்ற
வெற்றியைப்
போல
தமிழ்த்
தேசியம்
வளருவதற்கான
முக்கியப்
பங்கை
வகுத்தன.
(பி) மூதின்
முல்லை:
ஒரு
போர்
வீரனின்
தாயாரின்
கடமை
போரின்
நெறிமுறைகளை
கற்றுக்
கொடுத்து
வீரம்
செறிந்த
போரில்
உயிர்த்
தியாகம்
செய்யத்
தூண்டுவதாகும்.
இந்த
போர்
வீரனின்
தாயாரின்
கடமை
அனைத்து
தமிழ்
ராணுவத்திலும்,
பின்னர்
தீவிரவாதத்திலும் துவக்கத்தின்
மையக்
கருத்தாக
உள்ளது.
இது
தற்போதைய
எல்டிடிஈயின்
பிரசுரத்தின்
சிறப்பம்சம்
வாய்ந்த
கருத்தாக
உள்ளது.
2.
அவிப்பாலி,
தன்னை
வெற்ட்டால்,
வல்லன்
பாக்கம்,
புண்
கிழித்து
முடியும்
மறம்
மற்றும்
மறக்காஞ்சி: தனது தலைவனுக்கு
விசுவாசம்
காட்டுவதில்
இறுதியாக
மேற்கொள்ளும்
இவை
ராணுவ
தற்கொலை
மற்றும்
தற்கொலைப்
படைத்
தாக்குதலின்
வடிவம்
ஆகும்.
ராணுவ
தற்கொலையின்
இந்த
ஆறு
வடிவங்களும்
மேற்கண்ட
இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
புல்ல
வாழ்க்கை
வல்லன்
பாக்கம்
- தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டபடி போர்
வீரன்
தற்கொலைப்
படைத்
தாக்குதலுக்குச் செல்லுதல்.
மற்ற
இலக்கியங்கள்
தன்னை
வெற்ட்டால்
என்று
விவரிக்கின்றன.
இந்த
வழக்கம்
(சேர
மன்னர்களின்)
நாயர்களிடையே
இருந்த்தாக
துராதே
பர்போஸா
விவரிக்கிறார்.
இந்த
வழக்கம்
(பாண்டிய
மன்னர்களின்)
மறவர்களிடையேயும் இருந்தது.
அவர்களிலிருந்துதான் ஆபத்துதவி
மெய்பாதுகாவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (புறப்பொருள் வெண்பா
மாலை)
தன்
மன்னன்
அல்லது
தலைவன்
இறந்துவிட்டான் என்பதை
கேட்டதும்
ஒரு
போர்
வீரன்
தற்கொலை
செய்து
கொள்வது
தன்னை
வெற்ட்டால்
என்று
விவரிக்கப்படுகிறது.
புண்
கிழித்து
முடியும்
மறம்
என்பதும்
போர்க்
காயத்தை
குத்திக்
கிழித்து
தற்கொலை
செய்துகொள்வதை குறிப்பிடுவதாகும்.
வீரசோழியத்தில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு
ராணுவ
தற்கொலை அவிப்பாலி
ஆகும்.
தமிழ்க்
கல்வெட்டுக்கள் இதனை
நவக்கண்டம்
என்று
குறிப்பிடுகின்றன.
தமிழ்நாட்டின் பல
பகுதிகளில்
காணப்பட்ட
கல்வெட்டுக்கள் இந்த
வழக்கம்
பற்றி
அதிக
தகவல்களைத்
தருகின்றன.
நவக்கண்டம்
என்பது
தனது
தலைவன்
வெற்றி
பெற
வேண்டும்
என்பதற்காக
ஒரு
போர்வீரன்
தமிழ்ப்
போர்
தெய்வமான கொற்றவைக்குக் கொடுத்த
வாக்கை
நிறைவேற்ற
தனது
கழுத்தைத்
துண்டித்துக்
கொள்வதாகும்.
கலிங்கத்துப்
போரில்
குலோத்துங்க
சோழன்
மற்றும்
அவனது
தளபதி
தொண்டைமானின்
வெற்றியைப்
பாடும்
கலிங்கத்துப்
பரணி
(10) இந்த
வழக்கத்தை
விரிவாக
விவரிக்கிறது.
“போர்வீரர்கள்
தங்களது
கழுத்தைத்
துண்டித்துக்
கொண்ட
போது
மலர்ந்த
தாமரைப் பூக்களால் கொற்றவையின்
கோவில்
அலங்கரிக்கப்பட்டிருந்தது”(106). “அவர்கள் தங்கள்
கழுத்தின்
அடிப்பாகத்தை
துண்டித்துக்
கொண்டார்கள்,
துண்டிக்கப்பட்ட தலைகள்
தேவதைக்குக்
கொடுக்கப்பட்டது.
தலையில்லா
முண்டம்
தனது
வாக்குறுதியை
நிறைவேற்றியதை நினைத்து
நடனமாடியது”(113).
இரட்டைக்
காப்பியங்களான சிலப்பதிகாரமும் (5: 79-86) மணிமேகலையும்
(6:
50-51) இந்த
வழக்கத்தைப்
பற்றிச்
சொல்கின்றன.
கழுத்து
முழுவதுமாக
துண்டிக்கப்படுவதை உறுதி
செய்ய,
கழுத்தை
வெட்டுவதற்கு
முன்பாக
ஒரு
போர்வீரர்
தன்
முடியை
கீழே
வளைத்துக்
கட்டப்பட்ட
மூங்கிலிலே
கட்டிக்
கொள்வார். தமிழ்நாடு
முழுவதும்
காணப்படும்
நடுகல்கள்
இந்த
வழக்கத்தை
விவரிக்கின்றன.
இதை
மக்கள்
சாவன்
கல்
என்று
அழைக்கிறார்கள்.
இவ்வாறு
தற்கொலை
செய்யும்
வீரர்கள்
கற்களில்
மட்டும்
கடவுளாக
எழுதப்பட்டு
வணங்கப்படவில்லை.
அவர்களின்
உறவினர்களுக்கு நிலங்கள்
அளிக்கப்பட்டு வரி
விலக்கும்
(11) அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு
தொல்லியல்
துறையின்
(தாரமங்கலம்)
கையேடு கொங்கு
நாடு
(கோயம்புத்தூர்,
சேலம்)
முழுவதும்,
தாரமங்கலம்
கைலாசநாதர்
கோவிலும்
நவக்கண்டம்
சிலைகள்
உள்ளதாக
குறிப்பிடுகிறது.
“இந்த
வழக்கம்
இந்த
(20-ம்)
நூற்றாண்டின்
துவக்கம்
வரை
இருந்தது
.(12)”
மதுரையில்
உள்ள
தென்கரை
மூலநாத
சாமி
கோவிலில்
உள்ள
14-ம்
நூற்றாண்டைச்
சேர்ந்த
சாவன்
கல்
ஒரு
போர்வீரன்
தன்
இடது
கையால்
முடியை
பிடித்துக்
கொண்டு
வலது
கையால்
கழுத்தை
வெட்டிக்
கொள்வதைக்
காட்டுகிறது. இதனை
காஞ்சிபுரம் முதலியார்கள் வழிபட்டனர்.
(13) காஞ்சிபுரம் முதலியார்கள் கைக்கோலர்
சாதியைச்
சேர்ந்தவர்கள் ஆவர்.
நெசவாளர்களான
இவர்கள் சோழப்
பேரரசு
காலத்தில்
ராணுவத்தில்
ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள்
ஒரு
விசேஷ
ராணுவ
அமைப்பாக
கட்டமைக்கப்பட்டனர்.
கைக்கோலர்
போர்வீரர்கள்
நவக்கண்டம்(14)
வழக்கத்தை
மேற்கொண்டனர்
என்பதற்கான
சான்றுகள்
உள்ளன.
சி.என்.அண்ணாதுரை
காஞ்சிபுரம் முதலியார் கைக்கோலர்
சாதியைச்
சேர்ந்தவர்.
ராணுவத்
தற்கொலைகளுக்கு அப்பாற்பட்டு
வடக்கிருத்தல் என்ற
முறையும்
தமிழ்
புற
இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவமானம்(15) ஏற்படும்போது ஒரு
மன்னன்
உண்ண
விரதம்
இருந்து
உயிரை
விடுதல்
ஆகும்.
தமிழாசிரியராக இருந்து
திராவிட
பிரச்சாரத்
தலைவரானவர்
சேர
மன்னன்
இரும்பெறையின் பாடலை
தமிழ்ப் புரட்சிக்கான பாடலாக மாற்றினார்.
இரும்பொறை
எதிரிகளால்
சிறை
பிடிக்கப்பட்டபோது தற்கொலை
செய்து
கொண்டவர்
ஆவார்.
அவிப்பாலி
என்பது
தனது
தலைவனுக்கான
விசுவாசத்தை
காட்டும்
இறுதி
முறையாகும்.
இது
தமிழர்களின்
மத்தியல்
ஆழமாக
பதிந்துள்ளது.
விசுவாசத்தைக் காட்ட
தமிழர்
மத்தியில்
பரவலாக
பேசப்படும்
வாக்கியம்
செஞ்சோற்றுக் கடன் (ரத்தச்
சோற்றுக்
கடன்)
ஆகும்.
புகழ்பெற்ற
தமிழ்ப்
பாடல்களில்
இது
அடிக்கடி
கேட்கக்
கூடியதாகும். இந்த
வாக்கியம்
மறவர்
மற்றும்
இதர
ராணுவ
சாதி
வீரர்கள்
தங்களது
மன்னன்
அல்லது
தலைவனுடன்
தற்கொலைத்
தாக்குதல்
போரில்
இணைந்து
சாக
அல்லது
அவன்
செத்ததும்
தற்கொலை
செய்துகொள்ள
உறுதியேற்று
பங்கேற்கும்
உணவருந்தும்
வழக்கத்தை
குறிக்கிறது.
“மறவர்கள்
செஞ்சோற்றை
நினைத்தே
தங்கள் உயிரை போரில்
துறப்பர்”
என்று
புறப்பொருள்
வெண்பா
மாலையில்
(பாடல்
92) அவிப்பாலி
பற்றி
சொல்கிறது.
9-ம்
நூற்றாண்டில்
தமிழ்
நாட்டிற்கு
வருகை
தந்த
இரண்டு
முஸ்லீம்
பயணிகள்
செஞ்சோற்று
சடங்கு
பற்றி
விவரித்துள்ளனர்.
“சமைக்கப்பட்ட
சோறு
அரசனின்
முன்பாக
வைக்கப்பட்டிருக்கும்.
முன்னூறு
அல்லது
நானூறு
பேர்
வரிசையாக
வந்து
அரசனின்
கையால்
சோற்றைப்
பெற்றுக்
கொள்வார்கள்.
அரசன்
அந்தச்
சோற்றை
சாப்பிட்டதும் மற்றவர்களும்
அதனை
சாப்பிடுவார்கள்.
இந்தச்
சோற்றை
சாப்பிடுவதன்
மூலம்
அவர்கள்
அனைவரும்
மன்னன்
இறக்கும்
அல்லது
கொல்லப்படும்
நாளில்
தங்களை
எரித்துக்
கொள்வார்கள்
என்று
வாக்குறுதி
அளிக்கின்றனர்.
அவர்கள்
தங்கள்
வாக்குறுதியை
அவ்வாறே
நிறைவேற்றி
வந்தனர்.
(16)”. தற்காலத்தில்
ஒரு
மறவர்
ஒரு
அந்நியரின்
வீட்டில்
உணவருந்தும்போது ஒரு
சிட்டிகை
மண்ணை
எடுத்து
உணவில்
போட்டுக்
கொண்டு
உண்ணத்
துவங்குவார்.
” (17). இந்தச்
செய்கை
அவரை
செஞ்சோற்றுக்
கடனிலிருந்து
விடுவிக்கிறது.
அடிக்குறிப்புகள்
(1) The Book of Duarte Barbosa,
1518; first published 1812 English translation by Mansel Longworth Dames, 1921
Hakluyt Society, 1866; reproduced by Asian Educational Services, New Delhi,
1989, vol.II, pp.38-40.
(2) R.P.Sethupillai, 1946: Thamilaham- Oorum Perum,
Palaniyappa Bros, Madras, p.76.
(3) Robert Caldwell, 1881: History of Tinnevely,
reproduced by Asian Educational Services, New Delhi, 1989, p.104.
(4) A. Mootootamby Pillai, 1912: Jaffna History,
Navalar Press, Jaffna, p.104.
(5) Michel Foucault, 1991: Discipline and Punish,
Penguin Books, translation Alan Sheridan, pp.135, 165.
(6) Quoted in R.Caldwell, op.cit. p.103.
(7) Thurston, op.cit. vol.III, p.71.
(8) Tholkappiyam Porulathikaram,
Naccinarkiniyar’s commentary on verse No.68 & 90.
(9) Maj.A.E.Barstow, 1928:
Sikhs, Handbook
for the Indian Army, Calcutta Central Publications Branch, p.40.
(10) Parani –
“A poem about a hero who destroyed 1000 elephants in war”, Tamil Lexicon,
vol.IV.
(11) South Indian Inscriptions,
1943: Madras, vol.XII, no.106.
(12) R.Poonkunran, 1979: Tharamangalam,
publication No.58. Tamilnadu Dept.of Archaeology, no pagination. “Kongunadu was
well known for its palayams”, R.P.Sethupillai, op.cit,
p.76.
(13) M.Chandramoorthy: ‘Kalvettu’ Quarterly
of the Tamilnadu Dept.of Archaeology, no.8, January 1975, pp.21-22.
(14) South Indian Inscriptions 1967; vol.XIX, no.3.
(15) Purananooru; [verse] 212-223.
Kopperun-Cholan who thus committed suicide was apotheosized. K.P.Aravanan
examines this practice in relation to the ‘Sallehana’ form of fasting unto
death among Jain saints: The
Other side of Tamils, 1989; Paari Nilayam, Madras. Cheraman
Peruncheralathan committed suicide thus when he accidentally received a wound
on his back in battle which was considered a great dishonour to a warrior
(Purananooru: [verse] 65).
(16) Thurston, op.cit., vol.V, p.287.
(17) Thurston, op.cit., vol.V, p.32.
http://tamilnation.co/forum/sivaram/920601lg.htm
No comments:
Post a Comment