Sunday, March 2, 2014

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்து வேட்பாளரை நிறுத்துமாறு வேண்டுதல்.


பெறுனர்:-
                            தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்,
                           பொதுச் செயலாளர்,
                            அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக),
                           எண் 226, அவ்வை சண்முகம் சாலை,
                           ராயப்பேட்டை, சென்னை - 600 014.

அனுப்புனர்:-
                            பெருமாள் தேவன்,
                            தேவர் ஆராய்ச்சி மையம்,
                            6-5-17/ 8ஏ, தடிவா நைனார் தெரு, 6வது வார்டு,
                            தேவதானப்பட்டி, பெரியகுளம் (வ), தேனி (மா) - 625602
                            மொபைல் 9047440542


பொருள் :- இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் உள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்து வேட்பாளரை நிறுத்துமாறு வேண்டுதல்.


மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,


            2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தங்களது கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

            அதேவேளையில் தங்களிடம் ஒரு வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக திரு. அன்வர் ராஜா என்ற இஸ்லாமியரை நிறுத்துவதாக அறிவித்துள்ளீர்கள். ராமநாதபுரம் தொகுதியில் இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் இருப்பது தாங்கள் அறிந்ததே. இந்துக்களின் புனித தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரத்திற்குச் செல்வது இந்துக்களின் கடமையாகும்.

            ராமேஸ்வரம் திருக்கோவில் ராமர் வழிபட்ட தலமாக உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்க தலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே ஜோதிர்லிங்கதலம் இதுவே.   

            மேலும் ராமநாதபுரம் இந்துக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. ராமநாதபுர ராஜாவான பாஸ்கர சேதுபதிதான் விவேகானந்தரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து இந்து மதத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் அறியச் செய்தவர் ஆவார்.

            எனவே இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இந்தத் தொகுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

            அதேபோல இஸ்லாமியர்கள், இத்தொகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்களின் முன்னோரின் மதமான இந்து மதத்திற்கும், இந்து மதத்தில் உள்ள தங்கள் உறவுகளுக்கும் மதிப்பளித்து இந்தத் தொகுதியை இந்துக்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். இஸ்லாமியருக்கு,  இஸ்லாமியர்  அதிகமாக வாழும் வேறு தொகுதிகளை கொடுக்கலாம். வெள்ளையருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியரின் பங்கேற்பை நினைவுறுத்தும் வகையில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சி செய்த திண்டுக்கல் போன்ற தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்கலாம். அதுவே பொருத்தமாகவும் அமையும்.


                                        நன்றி!



                                                                        இப்படிக்கு,
                                                                        தேவர் அடியேன்
                                                                        (பெருமாள் தேவன்)

2 comments:

Unknown said...

இந்துதேசம் இராமநாதபுரம்
இந்துதலம் இராமேஸ்வரம்
இந்துக்களையும் வாழவிடுங்கள்.!!!

Unknown said...

இந்துமக்களின் மனநிலையை கொஞ்சம் மதித்து வேட்பாளரை மாற்றுங்கள்.!!!

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...