திராவிடர்கள் தங்களுடைய கருத்துத்தான் தமிழர்களின் கருத்து என்பதை தங்கள் பிரச்சாரத்தின் மூலம் நம்ப வைத்தனர். அது தமிழர்களின் தோல்விகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
இதில் முதலில் வருவது கடவுள் மறுப்பு. இது கருத்தளவில் தோல்வி பெற்றாலும். அதுதான் சிறந்த கருத்து என்ற நிலை பெற்றது. சாதி ஒழிப்பு பட்டப் பெயர்களை பயன்படுத்துவதை தவிர்த்தல். இதனால் தமிழர் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களால் சாதியை விடவும் முடியவில்லை. சாதியில் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியவில்லை.
இதனை பயன்படுத்திய திராவிடத்தார் தமிழர் என்ற முகமூடியை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றினர். அல்லது தமிழர் அல்லாதோர் ஆட்சியை கைப்பற்றுவது பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதுவே தமிழர் அதிகாரம் பறிபோக காரணமாக அமைந்தது. இது ஈழப்படுகொலையை வேடிக்கை பார்த்தல், நதிநீர் உரிமையை விட்டுக் கொடுத்தல் போன்றவற்று காரணமாக அமைந்தது.
திராவிடர்கள் மறைமுகமாக கம்யூனிஸத்தை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் பொது உடமையே தமிழருக்கான இலக்கு என்பதை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் இவர்கள் ஜனநாயகத்தையே தூக்கி எறிகிறார்கள். இதையும் வெளிப்படையாக பேசுவதில்லை. தேர்தல் அரசியலை வெறுக்கிறார்கள். ஆனால் ஜனநாயத்திற்கு மாற்று என்னவென்று சொல்ல மறுக்கிறார்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களை தான்தோன்றித் தனமாக நிறைவேற்றவே விரும்புகிறார்களே ஒழிய மக்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில்லை.
ஏற்கனவே திராவிடத்தை நமது கருத்து என்று நம்பியது போதும். தமிழர்களே திராவிடத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.
நன்றி, படம் எடுக்க உதவிய தளம் - http://www.electionnow.tv
1 comment:
Dravidam itself doesn't belong to them and is not an original creation of this group. Sadly, it is taken from the Sanskrit literature, where they refer to the Brahmins of the South as "Dravida-desha Brahmanas" and such other references...:-(
Post a Comment