Tuesday, December 4, 2012

தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவர்

வருடம் தோறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையில் ஒரு இஸ்லாமிய பெரியவரைப் பார்க்கலாம். அவரின் பெயர் ஏ.ஓ. முகமது இப்ராஹிம். 86 வயதாகும் இவர் அருப்புக்கோட்டை நல்லூர் பள்ளிவாசல் ரோட்டில் வசிப்பவர் ஆவார். 

இவர் தேவருடன் 15 ஆண்டுகள் அரசியல் சமுதாயப்பணிகள் செய்தவர் ஆவார். இவர் பாரத தாயின் வீரத்திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற சிறு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தில் தேவர் மீசையை எடுத்ததற்கான காரணத்தை எழுதியுள்ளார். ஒருமுறை தேவரைப் பார்த்த ஒரு பெண் தேவரின் மீசை எவ்வளவு அழகாக இருகிறது என்று தேவரின் காதுபட பேசுகிறார். 

அதைக் கேட்ட தினமே தேவர் தன் தோற்றம் எந்த பெண்ணையும் கவரும்படி இருக்கக் கூடாது என்று கூறி மீசையை எடுத்து விட்டார் என்ற தகவலை இவர் பதிவு செய்திருக்கிறார். 


இவர், சாதி மத வேறுபாடு இல்லாமல் இருந்த மக்களை காங்கிரஸ் எவ்வாறு சாதி மதத்திற்குள் தள்ளியது என்று காங்கிரஸின் அரசியலை சாடுகிறார். 

இவரது பேட்டியை பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

-----------------------------------------------------------------
பசும்பொன்னில் அந்த பெரியவருடன் நான் எடுத்துகொண்ட படம்

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...