சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டி அருகேயுள்ள வலங்காகுளத்தில் வாழ்ந்து வந்தவர்
மெய்யத் தேவர் (ஆதாரம் – பிறமலைக்கள்ளர் வாழ்வும்
வரலாறும், பக்கம் - 279). இவருக்கு
பெரிய கட்டத் தேவர், சின்னக் கட்டத் தேவர் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
மூத்தவரான பெரிய கட்டத் தேவருக்கு 3 குழந்தைகள் பிறக்கின்றன.
3 குழந்தைகளில் மூத்தவரான முத்துக்கண்ணன். இவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்ச காலத்தில்
பிழைப்புத் தேடி தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டிக்கு வருகிறார்.
பெருமாள் தேவனின் முன்னோர்களும்
அவர்களது வாரிசுகளும்-
1. கட்டத் தேவர் = 1. முத்துக்கண்ணன் (மேட்டுப்பட்டி), 2. மாயாண்டி
(வலங்காகுளம்), 3. வீரணன் (மேட்டுப்பட்டி)
2. முத்துக்கண்ணன் தேவர் (செல்க்கார முத்துக்கண்ணன்)
= 1. முத்துக்கண்ணன், 2. மாயாண்டி, 3. வீரணன், 4. கருப்புச்சாமி
3. வீரணத்தேவர் = 1. வெள்ளையத்தேவர்
2. பெருமாள் தேவர், 3. கிரட்டயன் வீரணன், 4. தவசி (நாட்டுக்கொட்டை தவசி)
4. பெருமாள் தேவர் = இவருக்கு
1. பெரிய கண்ணுத் தேவர், 2. மாயக்காள், 3. பெருமாயி, 4. பழனியம்மாள், 5. கருப்பாயி,
6. பழனிச்சாமித் தேவர் என்ற 6 குழந்தைகள் பிறந்தன.
5. பெரிய கண்ணுத் தேவர் = இவருக்கு
1. அம்மவாசித் தேவர், 2. தங்கம்மாள் என்ற 2 குழந்தைகள் பிறந்தன.
6. அம்மவாசித் தேவர் = இவர் முதலில்
வீரம்மாளையும், பின்னர் ஆண்குழந்தை இல்லை என்ற காரணத்தால் வீரம்மாளின் சகோதரி ராமுத்தாயையும்
மணக்கிறார்.
இதில்
வீரம்மாளுக்கு 1. கண்ணம்மாள், 2. ஜானகி, 3. ஜெயா, 4. இந்திரா, 5. செல்வி என்ற 5 பெண்
குழந்தைகளும்,
ராமுத்தாய்க்கு
1. விஜயா, 2. வேண்டாமணி, 3. பெருமாள் தேவன், 4. வனராணி, 5. கண்ணன் தேவர், 6. மூர்த்தி
தேவர் என்ற 6 குழந்தைகளும் பிறக்கின்றன.
மூத்த
மனைவிக்கு 5 பெண்குழந்தைகளும், இளைய மனைவிக்கு 2 பெண் குழந்தைகளும் பிறந்த பின்னர்
ஆண் குழந்தை இல்லை என்று உறவினர் பலராலும் பல்வேறு ஆலயங்களில் இறைவனை வேண்டிக் கொண்ட
பிறகு பிறந்தவர்தான் பெருமாள் தேவன். அம்மவாசித் தேவர் தனது தாத்தாவின் நினைவாக இவருக்கு
பெருமாள் தேவன் என்று பெயர் சூட்டினார்.
1972-ல்
அம்மவாசித் தேவரின் வீட்டில் கால்நடை வளமும் பால் வளமும் பெருகி இருந்த காரணத்தால்
வீட்டில் அனைவரும் இவரை பாலு என்றும் பாலுச்சாமி என்றே அன்போடு அழைத்து வருகின்றனர்.
ஆனால் பள்ளியில் கொடுக்கப்பட்ட பெயர் பெருமாள் தேவன்.
இவர் 1976ம் ஆண்டு முதல் 1980 வரை தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் உள்ள அரசினர் கள்ளர்
துவக்கப்பள்ளியில் படித்தார். 1981ம் ஆண்டு முதல் 1988 வரை தேவதானப்பட்டி அரசினர் மேல்நிலைப்
பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும் காலத்தில் தேசிய சேவைத் திட்டத்தில் (என்எஸ்எஸ்)
சேர்ந்து பணியாற்றியுள்ளார். 1985 ஆண்டில் சுயமாக இந்தி கற்க ஆரம்பித்தார். பள்ளியில்
பயிலும் காலத்திலேயே ஓவியம் வரையும் திறமையை வளர்த்துக் கொண்டார்.
1990ம்
ஆண்டு முதல் 1993 வரை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அரசியல்
அறிவியல் பிரிவில் படித்து முதல் வகுப்பில் தேர்வு பெற்று பட்டம் பெற்றார்.
பள்ளியில்
படிக்கும்போது சிறந்த நினைவாற்றல் பெற்றவராக இருந்தார். ஆசிரியர் கற்பிக்கும் பாடல்களை
உடனே அப்படியே திருப்பிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்தார். இருந்தாலும் படிப்பில் நடுத்தர
மாணவராகவே இருந்து வந்தார். பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் ஆர்வம் கொண்டவராக
இருந்தார். புதிர் போடுதல், விடுகதைகள் போடுதல் மற்றும் விடுவித்தல் போன்றவற்றிலும்
ஆர்வம் மிக்கவராக இருந்து வந்தார்.
பள்ளி
– கல்லூரிகளில் படிக்கும் காலத்தில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு
பரிசு பெற்றிருக்கிறார். எந்த விஷயத்தையும் தயங்காமல் நண்பர்களிடம் வாதம் செய்யும்
வழக்கம் கொண்டவராக இருந்தார். தர்க்கத்தின் மூலமாகவே தனது கருத்துக்களை ஆணித்தரமாக
எடுத்துரைத்து வந்தார்.
1981
முதலே நூலகம் செல்ல ஆரம்பித்த இவர் பல்வேறு பத்திரிகைகளை வாசித்து வந்தார். அந்த கால
கட்டங்களில் ஓவியத்தில் இருந்த ஆர்வம் காரணமாக பின்னாளில் பத்திரிகை ஓவியராக வரவேண்டும்
என்று விரும்பினார். சித்திரக் கதைகள் வாசிக்க ஆரம்பித்த இவர் பின்னர் துப்பறியும்
நாவல்கள், குடும்ப நாவல்கள் என்று வாசித்து வந்த இவருக்கு ஆன்மீகத்திலும் நாட்டம் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நாத்திகத்தில் நம்பிக்கை கொண்ட இவர் பின்னர் ஆஸ்திகராக மாறினார். பரமஹம்சர்,
விவேகானந்தர், போன்றோரின் ஆன்மீக கருத்துக்களால் கவரப்பட்ட இவர் ஓஷோவின் ஆன்மீக கருத்துக்களில்
முழு ஈடுபாடு காட்டினார்.
கல்லூரி
படிப்பு முடிந்தவுடன் ஓராண்டுகாலம் வால் பெயின்டராக இருந்து வர்த்தக நிறுவனங்களின்
விளம்பரங்களை எழுதி வந்தார். பின்னர் அந்த தொழில் சரிப்பட்டு வராத காரணத்தால் மும்பை
சென்றுவிட்டார்.
1995ம்
ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மும்பையில் உள்ள மராத்திய முரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக
பணியாற்றினார். பின்னர் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை தினபூமி பத்திரிகையில் துணை ஆசிரியர், பொறுப்பாசிரியராக இருந்து வந்தார்.
அதன்
பிறகு இன்று வரை தன்னிச்சையாக மொழிபெயர்ப்பாளராகவும், விளம்பர எழுத்தாளராகவும் இருந்து
வருகிறார். மேலும் டப்பிங் வசனங்கள், பதிவு
மேற்பார்வை, விளம்பர நிறுவனங்களில் மொழி மேற்பார்வையாளராக இருந்து வருகிறார்.
2009ம்
ஆண்டு முதல் மும்பையில் தாராவி பகுதியில் வசித்து வரும் சமூக சேவகரான திரு. எஸ்.ஏ.
சுந்தர் அவர்கள் நடத்தும் சிட்டிஸன் ஃபோரம் மகாராஷ்டிரா என்ற சமூகநல அமைப்பில் இணைந்து
சயான் கோலிவாடா பகுதி தலைவராக இருந்து சமூக சேவை செய்து வந்தார். இப்பகுதியில் ரத்ததானம்,
பான் கார்டு முகாம்கள் போன்றவற்றை நடத்தினார்.
அதேபோல
இந்த அமைப்பின் சார்பில் மும்பை சயான் மருத்துவமனையில் சுகாதார முகாம் நடத்தப்பட்டது.
இந்த அணியின் தலைவராக இருந்து இந்த முகாமை நடத்தினார். இந்த முகாம் 4 மாதங்கள் வரை
வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இந்த அமைப்பு மருத்துவமனைக்குள் நோயாளிகளால்
எடுத்துச் செல்லப்பட்ட 600 கிலோ அளவுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களும்
பிடிபட்டன. இந்த மருத்துவமனையில் எந்தவொரு சமூகநல அமைப்புகளாலும் ஒரு வாரத்திற்கும்
மேலான திட்டங்களை நடத்த இயலவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இதே
காலகட்டத்தில் மும்பையில் உள்ள நாம் தமிழர் நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட்டார். பின்னர்
இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
எஸ்ஆர்எம் பல்கலைகழகம் சிறு விண்கலம் அனுப்பியதைத் தொடர்ந்து 2012 பிப்ரவரி மாதம் ஐஜேகே
கட்சியின் நிறுவனத் தலைவர் திரு பாரிவேந்தருக்கு மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவை நடத்திய நிர்வாகிகள் குழுவில் முக்கிய பங்காற்றினார்.
2012
மார்ச் மாதம் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் குமரி மாவட்டத்தைச்
சேர்ந்த 11 மீனவர்களை தடுப்புக் காவலில் வைத்தனர். இது பற்றி தகவலறிந்ததும், தனது நண்பரும்
மும்பை நகர பாஜக செயலாளருமான திரு. ராஜா உடையாருடன் இணைந்து அந்த மீனவர்களை விடுவிக்க
உதவி செய்தார். அதேபோல தமிழர் பிரச்சனைகளுக்காக மும்பையில் தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும்
பல்வேறு நிகழ்ச்சிகள் போராட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.
எஸ்ஆர்எம்
பல்கலைகழகம் இலங்கையில் தனது பல்கலை கழகத்தை ஆரம்பித்த பின்னர் இவர் அந்த பதவியை ராஜினாமா
செய்துவிட்டார்.
2 comments:
அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எனக்கு வயதில்லை,
நீங்கள் நலமோடு வாழ எம்பெருமான் முருகக்கடவுளை வணங்கி வேண்டுகிறேன்
என்றும் உங்கள் அன்பு தம்பி
ரவிகுருஜி குரு தேவன்
இதற்கு மேலும் பல வரலாறு தொடரட்டும்
Post a Comment