Saturday, December 29, 2012

சாதி ஏன் தேவை?



1.     சாதிக்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.இந்தியாவில் எல்லா மாநிலங்களிலுமே குறிப்பிட்ட சாதியினரே ஆட்சிக்கு வருகின்றனர்.

2.     சாதி இல்லை என்ற போர்வையை பயன்படுத்திய திராவிடர்கள் தமிழ் நாட்டிற்கு சம்பந்தமே இல்லாதவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வழிவகுத்தனர்

3.     அன்னிய ஆசாமிகள் அதிகாரத்தைப் பெற்றதால் ஒட்டுமொத்த தமிழர்களும் தங்கள் நலனை இழந்து நிற்கிறார்கள்.

4.     சாதி தீயது என்று பல நூற்றாண்டுப் பிரச்சாரம் நடந்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதை விட்டு வெளியேறுவதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று ஏதாவது ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளதா?

5.     சாதி அவ்வளவு தீயதா என்பதே சந்தேகம்தான். அம்பேத்கரை உருவாக்கிய மகாராஷ்டிராவால் அடுத்த தலைமுறைக்குள் ஏன் இந்த சாதி ஒழிப்பை எடுத்துச் செல்ல முடியவில்லை. மகாராஷ்டிராவில் சாதி ஒழிப்பு என்ற பேச்சே இல்லை. இத்தனைக்கும் இங்கு 40 % தலித்கள் இருக்கிறார்கள்

6.     எனவே இந்த பிரச்சாரமே பொய்யானது. தவிர்க்க வேண்டியது

7.     சாதிகளால் உள்ள தீண்டாமை போன்ற பிரச்சனைகளை அந்த சாதிகளில் உள்ளவர்களின் உதவியோடுதான் ஒழிக்க முடியும். அதற்கு கண்டிப்பாக சாதி தேவை. சாதியை ஒழிக்க முடியாத நிலையில் அவர்களை ஒதுக்கிவிட்டு அவற்றை போக்க முடியாது

8.     சாதிகளில் இருக்க விரும்புபவர்கள் அதிலேயே இருக்கட்டும் என்று சொல்லும் கருத்துச் சுதந்திரம் சாதி ஒழிப்பாளர்களிடம் இல்லை

9.     இவர்கள் தங்களது கருத்தையே திணிக்க விரும்புபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் சாதியில் இருப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கவே தயாராக இல்லை. அப்படியுள்ள அவர்களின் சர்வாதிகாரப் போக்கு எப்படி ஜனநாயக முறையாகும்

10.    இதெற்கெல்லாம் மேலாக இவர்களிடம் சாதி/ மத ஒழிப்புக்கான உருப்படியான திட்டம் இல்லை

11.    சாதி ஒழிப்பாளர்களின் அடையாள ஒழிப்பு, மக்களின் சுய தன்மையை ஒழித்து அவர்களை போராட விரும்பாத மக்களாக மாற்றிவிட்டது

12.  கிறிஸ்தவர், முகமதியர், தலித் போன்றவர் அடையாளத்துடன் செயல்படும்போது ஆதிக்க சாதியினர் தங்கள் அடையாளத்தை பயன்படுத்துவது அவர்களின் சாதி வெறியை காட்டுகிறது என்பது போன்ற தவறான கருத்துக்கள்.

13.  தன் கருத்துக்களை மக்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதை அறிந்துதான் பெரியார் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. மேலும் ஜனநாயக அரசியலமைப்பையே குறை சொல்ல ஆரம்பித்தார். இதையே இன்றைய பெரியார்வாதிகளும் செய்து வருகிறார்கள். இது தற்போதைய சமுதாயத்தில் சாதி வெறியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து தீண்டாமையை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது

14.   வெறும் பிரச்சாரத்தின் மூலமாகவே சாதி வேறுபாட்டை களைய முயல்வது ஏற்கனவே உள்ள அரசியல் சிக்கல்களோடு சமுதாயச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்

15.  எந்தவொரு முற்போக்குவாதியுமே தங்கள் கருத்து இதுதான், உங்கள் கருத்து என்ன என்று சாதி/ மதங்களில் இருப்பவர்களிடம் பேச தயாராக இல்லை

16.  தலித்களை மற்ற சாதியினர் சமமாகவே நினைக்காத நிலையில் அவர்களிடம் பெண் கட்ட வேண்டும் என்பது போன்ற பிரச்சாரங்கள் விரும்பத்தகாத விளைவுகள் நடந்தேற வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

17.  தலித்களின் தேவை என்ன சாதி ஒழிப்பா, சமூக அங்கீகாரமா என்பதை சாதி ஒழிப்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

18.  இப்படி இருக்கும்போது சாதி ஒழிப்பு என்பது ஆதிக்க சாதிகளை மட்டுமே ஒழிப்பது, மத ஒழிப்பு என்பது இந்து மதத்தை மட்டுமே ஒழிப்பது என்ற கருத்தை உருவாக்கியுள்ளதுகிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் தங்கள் அடையாளங்ளை பத்திரப்படுத்திக்கொள்ளும்போது இந்துக்கள் என்ன ஆவார்கள்? அவர்களை என்ன செய்வதாக உத்தேசம்? இதை தெளிவுபடுத்த வேண்டும்.

19.    முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பில் காட்டும் ஆர்வத்தை தீண்டாமையை ஒழிக்க காட்டுகிறார்களா என்பது சந்தேகமே.

20.  சாதி/ ஒழிப்பாளர்கள் சாதி/ மதங்களில் உள்ள நல்ல தன்மைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறார்களே, ஏன்?

21.    சாதி/ மதங்களில் உள்ளவர்கள் ஏன் அதிலிருந்து வெளியேற தயங்குகின்றனர் என்பதை கண்டுபிடிக்காத வரை அவர்களை அதிலிருந்து வெளியேற்ற முடியாது. நாங்கள் பிரச்சாரம் செய்தே அதைச் செய்வோம் என்றால், அந்த பிரச்சாரம் விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும். அதையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்அந்த விளைவுகளை சந்திக்க சாதி தேவை.

22.  கிறிஸ்தவர், இஸ்லாமியர், தலித்கள் என்றால் நாகரீகமாக இருப்பார்கள், ஆதிக்க சாதியில் இருப்பவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற சிந்தனையை பிரச்சார சாதி ஒழிப்பு ஏற்படுத்தியுள்ளது

23.  சாதி/ மத ஒழிப்புக்காக சமமான கொள்கை வகுக்கப்பட்டு பின்பற்றப்படாத வரை அதை ஏற்க முடியாது

24.  மற்றபடி வெறுமனே சாதி ஒழிப்பு பிரச்சாரம் மட்டுமே செய்தால், அதற்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு சாதி தேவை

25.  சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் ஒதுக்கீடு கொடுக்கிறேன் என்பதை ஏற்க முடியாது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை சாதி ஒழிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். என்றைக்கு சமநிலை ஏற்படுகிறதோ அன்றிலிருந்து சாதி ஒழிப்பை மேற்கொள்ளலாம். அது வரை சாதி தேவை, இருக்கும்

26.    சாதி / மத ஒழிப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சாதி/ மதங்களுக்கு மட்டும் தீங்கு இழைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

27.  சமூகவியல் அறிஞர்கள், உளவியல் அறிஞர்களின் குழுக்களின் உதவியோடு சாதி/ மத ஒழிப்புக்கான பொதுவான கொள்கையை உருவாக்க வேண்டும். நீண்டகால அடிப்படையில் திட்டங்களை தீட்ட வேண்டும்

28.  சொத்துரிமைக்கும் சாதி ஒழிப்புக்கும் சம்பந்தமில்லை. வாரிசு இல்லாத சொத்துக்களை அரசுடைமையாக்கலாம். அந்த சொத்துக்களை ஆய்வின் அடிப்படையில் சொத்து இல்லாதோருக்கு வழங்கலாம்

29.  அறிவுப்பூர்வமான, ஏற்கத் தக்க சாதி / மத ஒழிப்பு நடவடிக்கைகளை எடுக்க முன் வராதவரை சாதி/ மதம் தேவை

30.  சாதி/ ஒழிப்பு பற்றி ஒவ்வொரு கட்சியும், அரசாங்கமும் தனது கொள்கையை வெளியிட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அவற்றை ஏற்றுக் கொண்ட பின்னரே அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

12 comments:

பெருமாள் தேவன் செய்திகள் said...

திரு ரமேஷ் முருகனின் கேள்விகளும் பதில்களும்-
//தமிழகத்தில் அந்த நிலை இல்லை. இதுவரை பிராமணர், முதலியார், தெலுங்கு செட்டியார், இசை வேளார், தேவர், நாடார் ஆண்டுள்ளனர்.//


இது எப்போது, எப்படி? என்று விவரம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

// ஜாதிக்கும் அரசியலுக்கும் நேரடி பங்கு உள்ளது. அது மறுப்பதற்கில்லை. ஆனா இந்த ஜாதிதான் ஆள வேண்டும் என்ற நிலை இல்லை.//

சாதிகள் ஆள வேண்டும் என்ற நிலை இல்லை. சாதிகளின் நம்பிக்கையைப் பெற்ற பிரதிநிதிகள் ஆள வேண்டும்.

// மேலும் அரசியலுக்கு ஜாதி பற்று அவசியம் இல்லை. ஏன்னா இதுவரை ஆண்ட தலைவர்களால் அவர்கள் ஜாதிக்கென எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்கவில்லை.//

இதுவரை சாதித் தலைர்கள் வரவேயில்லை. அப்புறம் எப்படி சலுகை கிடைக்கும்?

//தமிழகத்தை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் எல்லாருமே தமிழர்களே... மொழிவாறி மாநிலம் பிறிக்கும்போது தமிழக எல்லைக்கு உட்பட்டவர்கள் தமிழர்களே. அதுல உங்களுக்கு சந்தேகம் இருக்குதா??//

தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இந்த மண்ணுக்கான மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க முடியாமல் போனது ஏன்? உதாரணம் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா.


//யார் அந்த அந்நிய ஆசாமி?//

எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா.

இவர்கள் தமிழர்களோடு ரத்த சொந்தம் இல்லாதவர்கள். விரல்விட்டு எண்ணிவிடும் நபர்களையே பின்னணியாகக் கொண்டவர்கள்.

பெருமாள் தேவன் செய்திகள் said...


//பொது மக்கள் மெல்ல மெல்ல வெளிவந்துகொண்டு இருக்கிறார்கள். பல்லாண்டுகாலமாக கடைபிடித்துவந்த வழக்கத்தை ஒட்டுமொத்தமாக ஒரே தலைமுறையில் கைவிட முடியாது.//

(உங்கள் வாக்குமூலத்தில் பின்னால் கொடுத்துள்ள தகவல் முரணாக உள்ளது.)

அப்படி இருக்கும்போது சாதியை/ மதத்தை ஒழித்துவிடுவோம் என்று பிரச்சாரம் மேற்கொள்வது பொய் பிரச்சாரமாக இருக்காதா? அதற்கு எதிர்விளைவு இருக்காதா?

// ஜாதியல் பற்று இப்போ மழுங்கிவிட்டது. ஆனால் அடையாளம் போகுமா என்பது சந்தேகமே.//

அப்போ அடையாளத்தை ஒழி/ மறை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா?


//மஹாராஷ்ட்டாவில் ஜாதி இருக்குதுனா அதுக்காக தமிழகத்திலும் ஜாதி இருக்கனுமா என்ன??//

அதேபோல வேறு எங்காவது சாதி இல்லை என்றால் தமிழகத்தில் சாதி இல்லாமல் போக வேண்டுமா?

// அம்பேத்கார் காலத்திருந்தே ஜாதி பெயருடன் இருப்பவர்கள் அவர்கள். ஆனா 60 வருசத்துக்கு முன்பே பெயரிலுள்ள ஜாதியை துறந்தவர்கள் நம்மவர்கள். இங்குள்ள அரசியல்நிலை வேறு அங்குள்ள அரசியல்நிலை வேறு. இரண்டுக்கும் எப்படி முடிச்சி போடுறிங்க??//

தென்னிந்தியாவை ஏன் ஒப்பிடக் கூடாது என்கிறீர்கள்? மராட்டியரும் திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்வர்கள்தான்.



//அது உங்களோட ஆசையா இருக்கலாம். யதார்த்தம் அப்படி இல்லை. இந்த தலைமுறையில் பலருக்கு ஜாதி தேவையில்லை, ஜாதியலில் பற்றும் இல்லை.//

அது என்னோட ஆசையில்லை. சாதி/ மத ஒழிப்பு என்பதுதான் ஒருசில ஆசாமிகளின் ஆசையாக இருக்கிறது. அனைவரும் ஏன் பாதிப் பேர் கூட அதை விரும்புவது இல்லை.

// இன்னும் வளர்ச்சி பெறாதா கிராமங்களில் சாதிய கொடுமை இருக்கின்றது. அதுவும் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம் மூலம் மெல்ல மெல்ல குறையும்.//

தீண்டாமை இருக்கிறது. அதை பிரச்சாரத்தால் ஒழிக்க முடியாது.

பெருமாள் தேவன் செய்திகள் said...

//அப்படி ஒரு நிலை இருந்தது உண்மைதான். இன்னும் சில இடங்களில் இருப்பதும் உண்மைதான். ஆனா இப்போ யாரும் அவ்வளவு எளிதா தீண்டாமையை கடைபிடிக்க முடியாது. அதற்கான சட்ட விழிப்புணர்வு இருப்பதால், வன்கொடுமை செய்ய பலருக்கு தயக்கம் வந்துள்ளது என்பது யதார்த்தம். அந்த சட்டத்தைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் எல்லோருக்கும் வந்தால், அது இன்னமும் குறைய வாய்ப்புள்ளது.//

தற்போது வன்கொடுமைச் சட்டமே தவறாக பயன்படுத்துவது பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. தனிமனித காழ்ப்புணர்வுகளுக்காக இந்தச் சட்டத்திற்கு பலரும் பலிகடாவாகியுள்ளனர். காலப்போக்கில் இந்தச் சட்டம் கிடப்பில் போடப்படலாம் அல்லது திருத்தப்படலாம்.


//ஜாதியில் இருப்பவங்களைப் பற்றி ஜாதி ஒழிப்பாளர்களுக்கு கவலையில்லை. நீங்க இன்னும் ஜாதி அடையாளத்தோடுதான் சுத்திக்கிட்டு இருக்கிங்க.//


இந்த குழுமத்தில் பலர் மத அடையாளத்துடனும் இருக்கிறார்கள். அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. எனது அடையாளம் பெரிதாகத் தெரிகிறது. ஹாஹாஹா

// உங்களை யாராவது ஜாதி அடையாளத்தை பயன்படுத்தக் கூடாதுன்னு நிர்பந்திக்கிறாங்களா என்ன??? அல்லது உங்களுக்கு சக இந்தியனுக்கு கிடைக்கும் எந்த உரிமையும் மறுக்கப் படுகின்றதா??//

கடந்த ஓராண்டு காலத்தில் இணையத்தில் என்றை ஓராயிரம் பேர் கேட்டிருப்பார்கள். நான் ஏதோ குற்றவாளி மாதிரி. என்னை சாதி வெறியன் என்று திட்டியவர்களுக்கு கணக்கே இல்லை.

பெருமாள் தேவன் செய்திகள் said...

இதைத்தான் போலித்தனம் என்று சொல்கிறேன். ஒன்று துணைப்பெயரை பயன்படுத்துவது சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பயன்படுத்தாதது சரியாக இருக்க வேண்டும். இரண்டும் சரியாக அல்லது கொஞ்சம் கொஞ்சம் சரியாக இருக்க முடியாது.


//:))
திரும்பத் திரும்ப சொல்லி சலிச்சி போச்சி. 90% மக்கள் ஜாதி அடையாளத்தோடுதான் இருக்காங்க. திருமணங்கள் அவர்களோட ஜாதியை தொடர்ந்து தாங்கிக்கிட்டு இருக்குது. ஆனா ஜாதி பற்றோ வெறியோ யாருக்கும் இல்லை.//

அப்படி இருக்கும்போது சாதி தேவை என்றுதானே அர்த்தம். அப்புறம் எதற்காக சாதி ஒழிப்பு? அப்படி இருப்பவர்கள் தங்கள் சாதி அடையாளத்தை வைத்துக்கொள்வதில் என்ன தவறு?

// அதனால் அவர்களைப் பற்றின கவலை ஜாதி ஒழிப்பாளர்களுக்கு இல்லை. எங்கெல்லாம் ஜாதியின் பெயரால் தீண்டாமை, வன்கொடுமை நடக்குதோ அவங்களைத்தான் ஜாதி ஒழிப்பாளர்கள் கண்டிக்கிறாங்க//

தீண்டாமை ஒழிப்பைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் அனைவரும் ஆதிக்க சாதிகளையும் இந்து மதத்தையும் மட்டுமே ஒழிக்க முயற்சிக்கிறார்கள். இது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.

//.தீண்டாமை நீங்க உங்களுக்கான உரிமைன்னு கருதினிங்கன்னா எதிர்தரப்பினரம் ஜனநாயகமுறைய இநீங்கள் எதிர்பார்க்க முடியாது.//

தீண்டாமையை நாங்கள் எங்கள் உரிமை என்று கருதவில்லை. எதிரெதிர் நிலைகளில் உள்ளவர்களில் பலம் வாய்ந்தவர்களே வெற்றி பெறுவார்கள்.

// பெயரில் ஜாதிய அடையாளம் துறந்ததே மற்றவர்கள் ஜாதியின் பெயரால் தரம் பிரிக்கக் கூடாது என்பதாலே. இதௌஇ புரியாதவங்களுக்கு விளக்கலாம்.. உங்களுக்கு???//

இதனால்தான் தமிழன் தன் சுய தன்மையை இழந்தான். அண்டை மாநிலங்களில் எல்லாரும் தங்கள் விருப்பப்படி தங்கள் துணைப் பெயரைப் பயன்படுத்துகிறார்கள், தலித்கள் உட்பட.

// ஒரு தலித்தை சமமாக நடத்தும் மனப்பக்குவன் உங்க ஊருல வந்துடிச்சா??? சக மனிதனை சமமாக நடத்தாதவரை ஜாதி ஒழிப்பாளர்கள் இப்படி கடுமையாகத்தான் நடந்து கொள்வார்கள்.//

அது எல்லா ஊரிலேயும் வருவது எல்லா மக்களின் கையில் இருக்கிறது. சாதி ஒழிப்பாளர்களிடம் இல்லை. அவர்கள் அந்த நிலையை உருவாக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட்களுக்கு ஏழைகள் தேவையாக இருப்பது போல சாதி ஒழிப்பாளர்களுக்கு தலித்களும் தீண்டாமையும் தேவை. அது வரை அந்த நிலை ஏற்படாது.

//ஜாதியத்தால் ஒதுக்கப் படுகிறவனுக்கு அந்த வலி தெரியலாம். உங்களுக்கு தெரியுமா இல்லையான்னு எனக்குத் தெரியல.//

சாதிவெறியை பல முறை பார்த்தவன்.

பெருமாள் தேவன் செய்திகள் said...


//பல திட்டங்கள் நடைமுறையில் இருக்குது. அது உங்களுக்கு உருப்படியானதாக இல்லாததாக தோணலாம். அதில் வியப்பில்லை. ஒரு 80 வருசத்துக்கு முன்னால இருந்த ஜாதிய நிலைக்கும், இப்ப இருக்கும் ஜாதிய விலைக்கும் உள்ள வித்தியாசம் கண்டிப்பா உங்க அப்பாவால உணர முடியும். நேரம் கிடைக்கும்போது அவர்கிட்ட கேட்டுப் பாருங்க, இந்த திட்டங்களால மாற்றங்கள் ஏற்பட்டிருக்கான்னு.//

என் தந்தை போன்றோர் போலிகளை ஒதுக்கி விடுங்கள் என்று சொல்கிறார்கள்.



//:))
ஜாதியில் இருந்தாத்தான் போராட முடியுமா??? எதாவது வரலாற்று உதாரணங்கள் ப்ளீஸ்..//

சாதியில் இருந்தால் அல்ல. மக்கள் சுய தன்மையுடன் இருந்தால். அதனால்தான் கன்னடர் ஒகேனகல் வரை வந்து போராட முடிகிறது.


//ஜாதி விசயத்தில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் பெருசா வித்தியாசம் இருக்குறதா தெரியல. மற்றபடி இஸ்லாத்தில் தீண்டாமை இல்லைனு நினைக்கிறேன் சரியா தெரியல.//

அடையாளம் என்பதே ஒரு வேறுபாடுதான்.

//எந்த ஒரு தலித்தும் தான் தலித்துன்னு சொல்லி ஜாதி பெருமைப் பட்டதா எனக்கு நினைவு தெரிஞ்சநாளிலிருந்து இன்னாள்வரை பார்க்கவில்லை.//

ஆனால் பாதுகாப்பு போராட்டம் என்ற பெயரில் சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா? அதேபோல மற்றவர்களும் சொல்லிக் கொள்ளலாம் அல்லவா?

// இட ஒதுக்கீடுக்காக சாதிச் சான்றிதளை பயன்படுத்துகிறார்கள். அதன் தேவை குறையும்போது அதுவும் அழிந்துபோகும்.//

இதற்குத்தான் ஒரு முடிவே கிடையாதே.


//:))
பெரியாரின் கருத்து மக்களிடத்தில் எந்தளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை அரசியல்வாதியான உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நம்புறேன்.//

அதுதான் ஒரு மூளைச் சலவை என்கிறேன்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

//மற்றபடி தீண்டாமை பின்பற்ற வேண்டும் என மக்களிடத்தில் யார் பிரச்சாரம் பண்ணுகிறார்கள் என்பதை உங்கக்கிட்ட விளக்க வேண்டிய அவசியம் இருக்காதுன்னும் நம்புறேன் :))//

இப்போது சாதி/ மத ஒழிப்பாளர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க ஆதிக்க சாதிகள் ஒன்று சேர ஆரம்பித்துள்ளனர்.

//ஜனநாய்க முறையில் மாற்றம் வேண்டும் என்றால் அது பிரச்சாரம் ஒன்றுதான் ஒரே வழி. அதைவிடுத்து வேறு முறையை கையாண்டால் அடக்குமுறை, திணிப்புன்னு பல வார்த்தைகளை நீங்க கொட்டுவிங்க.//

ஜனநாயகம் என்பது ஆட்சிக்கு வந்து குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாக இருந்து மாற்றங்களை கொண்டு வரவேண்டும். சாதி வெறியை தூண்டும் பிரச்சாரங்களை ஜனநாயக பிரச்சாரம் என்று சொல்ல முடியாது.

கவுண்டனை வெட்டுவோம் கவுண்டச்சியை (இது எல்லா சாதிக்கும் பொருந்தும்) கட்டுவோம் என்பதெல்லாம் ஜனநாயக ரீதியான பிரச்சாராமா? இல்லை இது எந்தவிதமான சாதி மோதலையும் உருவாக்காதா?




//:))
என்ன கொடுமை இது??? நீங்க தமிழ்நாட்டில்தான் இருக்கிங்களா??? //

இல்லை. அடுத்த ஆண்டுக்குத்தான் தமிழ் நாட்டுக்கு குடி பெயர்கிறேன்.



//பிரச்சாரம் மட்டும்தான் பண்ண முடியும். கட்டாயமாக தாலியா கட்டி வைத்தார்கள்??? சமீபமா கட்டாயமா ஊரை எரிப்பவர்கள், படுகொலை செய்பவர்கள் ஜாதி ஆதரவாளர்களேயன்றி ஜாதி எதிர்ப்பாளர்கள் அல்ல.//

துர்பிரச்சாரம் வன்முறைகளை தூண்டும். தாலி கட்டும் வேலைகளையும் செய்து வருவதாக அந்த சாதி ஒழிப்பு போராளிகள் எத்தனையோ பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.
போலியான ஊடகங்கள் உண்மை நிலைகளை மறைக்கும் வரை பத்திரிகை செய்திதான் உண்மை என்று நாம் பேசிக்கொள்ளலாம்.




//தாழ்ந்த ஜாதியை யாருமே ஆதரிக்கவில்லை. அவர்களுக்குள்ள பாகுபாடு முரண்பாடுகளையும் சேர்த்தேதான் எதிர்கின்றனர் ஜாதி வெறுப்பளர்கள். மற்றபடி தாழ்ந்த ஜாதியனருக்கு கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கு தற்சமயம் ஜாதி அடையாளம் தேவைப்படுது.//

சாதி வெறி என்பது எல்லாச் சாதிகளிலும் இருக்கத்தான் செய்கிறது. அதை ஒழிக்க ஒரு சில சாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டும் போதாது. அனைவர் மீதும் சமமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

//இடஒதுக்க்கீடின் அவசியம் இல்லாத போது, அதுவும் அழிந்து போகும். மத ஒழிப்பாளர்களின் கருத்தில் எனக்கும் நம்பிக்கை இல்லை. பலர் இரட்டை வேடம் போடுவதால்.//

இட ஒதுக்கீடு இல்லாதபோது... ஹாஹாஹா

2000 ஆண்டுகளாக அடிமைகளாக இருந்தோம். 2000 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள்.

///தீண்டாமை மட்டுமே அவர்கள் டார்கெட். ஜாதியை ஒழிக்கனும்னு எங்கும் போய் கொடிபிடிப்பதில்லை. எங்கெல்லாம் தீண்டாமை தலைவிரித்தாடுதோ அங்கெல்லாம் போராட்டம் பண்றாங்க. நீங்க தமிழக நிகழ்வுகளை கவனிக்கிறதே இல்லையா அண்ணே??//

சாதி ஒழிப்பு மாநாடுதான் நடத்துகிறார்களே தவிர தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தப் படுவதில்லை. இவர்களுடைய நோக்கம் ஆதிக்க சாதிகளை/ இந்து மதத்தை ஒழிப்பது தீண்டாமையை ஒழிப்பது இல்லை. இல்லையென்றால் அது என்றைக்கோ ஒழிக்கப்பட்டிருக்கும்.


//அப்படி தீங்கு அடைந்த ஜாதிகள் எவை எவை அண்ணே???//

ஆதிக்க சாதிகள் என்று குறிப்பிடப்படும் அனைத்துச் சாதிகளும்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

சமுதாய சாதி இன உணர்வு எப்போது ஒருவருக்கு வருகிறது என்பதை ஒரு கணம் சிந்தித்தால் , மற்றொரு சாதியால் தன் குடும்ப
உறவுகள் பாதிப்பு அடையும்போது அதனால் உண்டாகும் அவமானத்தால் சாதி உணர்வு வருகிறது , ஆபத்து ஒருவருக்கு ஏற்படும் போது உதவிக்காக சாதி இன உறவுகள் தேவைப்படுகிறது .

பிரச்சினைகள் ஏற்படும்போது தனக்கு உதவிகள் செய்ய , தன் பின்னால் என் இனம் இருக்கிறது என்பதை காட்ட சாதிகள் தேவைப்படுகிறது , ஒரு போட்டியாளர் உருவாகும்போது , அவரின் போட்டியை சமாளிக்க தன் சாதி சனங்கள் தேவைப்படுகிறது .தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் , தன் செல்வத்தையும் , சொத்தையும் காப்பாற்ற சாதியை பயன்படுத்த தன் இன சாதி தேவைப்படுகிறது.
கூட்டத்தை கூட்டி நான் இன உணர்வாளன் என்பதை மற்றவர் உணர்த்த, என் பலம் இது என்பதை எல்லோரும் அறிய சாதி இன கூட்டம் தேவைப்படுகிறது.

ஒரு தலைவர் உருவாக சாதிசனம் தேவைப்படுகிறது, இன்றைக்கு சாதி என்பது தேவைக்கு மட்டும் தான் பயன்படுகிறது , அரசியல்வாதிகள் சாதி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து சாதி சனத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் பின்னால் ஒரு பெரு கூட்டம் உள்ளது ,
சாதி என்பது தேவைக்கு மட்டும் என்பதை மாற்ற வேண்டும் .
கல்வியின் மூலம் சாதியை வளர்க்கவேண்டும்,
பொருளாதரத்தின் மூலமாக சதி இனத்தை வளர்க்க வேண்டும் ,
இந்த இனஉணர்வு எல்லா சமுதாய தலைவருக்கு இருக்கவேண்டும் .


என் தேவர் இன தலைவர்களுக்கு கண்டிப்பாக இருக்கவேண்டும்
அப்போதுதான் சமுதாயம் வளரும் , வருங்கால சந்ததிகளுக்கு நல்ல
பாதையாக இருக்கும் .....

என்றும் இன உறவுடன் பி.ஆர். கணேசத் தேவர் கோவை .

Unknown said...

பெருமாள் தேவன் உங்கள் வலை பூ படிக்க ஆரம்பித்துள்ளேன்

Senthan said...

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நிலவுடைமை சமுதாயமாக இருக்கும் நாம் வேகமாக தொழில் சார்ந்த சமுதாயமாக மாறி கொண்டிருக்கிறோம். சாதி என்பது நிலம் சார்ந்த மக்கள் இருக்கும் வரை மட்டுமே வீரியம் கொண்டதாக இருக்கும், பின்னாளில், தொழில் ரீதியிலும் இடபெயர்வுகளினாலும், தத்தம் சாதி அபிமானம் குறையும், அதோடு சேர்ந்து வரும் பொருளாதார மேம்பாடும், கல்வி(கவனிக்க: சிந்திக்க தக்க நல்ல கல்வி, இன்றைய முட்டாள்தனமான கல்வியல்ல) கொண்டு வரும் மாற்றமும் சாதி என்பது வெறும் ஒரு குறியீடாக மாறிவிடும். இன்றே பல சாதிகள் தங்கள் உட்பிரிவுகளை கடந்து ஒன்றாக தொடங்கிவிட்டன, இதற்கு அடுத்த நிலை தான் நான் மேல கூறிய நிலை. உதாரணமாக, கள்ளர், மறவர், அகமுடையோர் இன்று ஓரே இனமாக மாற பெரிதும் விரும்புகின்றனர், அவர்களுக்குள் இருந்த சிறிய வேற்றுமைகள் கூட இன்று குறைய ஆரம்பித்துவிட்டன.

Ramessh said...

அருமையான கருத்துக்கள்... அடுத்த தலைமுறை சாதி அரசியலை இப்பொழுதே பேசுகிறது... ஆனால் உங்கள் ஒருவர்/ஒரு சாரர் கருத்தை முடிவென்று ஏற்றுக்கொள்ள இயலாது.... எல்லா சாதியிலும் உள்ள அறிவுசார்ந்த பிரமுகர்கள் மாநாடு நடத்தி ஒரு முடிவை எட்டினால்... யாவருக்கும் நலம்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

http://perumalthevan.blogspot.in/

பெருமாள் தேவன் செய்திகள் said...

நமது கருத்துக்கள் யாவுமே முன் வரைவுகளே அல்லாமல் முன் முடிவுகள் அல்ல. பொது கருத்தை எட்டுவதையே இறுதியாக கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...