என் எதிர்நிலை தம்பியே
என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்?என் அண்ணனா ஹிட்லர்?
உன்னை நீயே கேட்டுக்கொள்.
எந்த குண்டை உலகம் தடை செய்ததோ?
அந்த குண்டை என் அண்ணனா
நம் சொந்தங்களின் தலைமேல் போட்டான்?
நீ சொல்லும் ஹிட்லர் சித்ரவதை முகாம்களை அமைத்தான்.
என் அண்ணனா தாக்குதல் இல்லா பகுதி என்று
திறந்தவெளி கொலைக்களத்தை அமைத்தான்?
அந்த கொலைக்களத்தில் என்னவெல்லாம் செய்தன
ஹிட்லரின் மிருகங்கள்?
நம் சகோதரிகளின் முலைகளை மட்டுமா அறுத்தார்கள்?
நம் பெற்றோரின் முன்னாலேயே புணரவில்லையா?
நம் தம்பிகளை கண்ணைக் கட்டி
ஆடையில்லாமல் சுட்டுக் கொன்றவர்கள் யார்?
அப்போதெல்லாம் ஹிட்லர் யாரென்று தெரியாத உனக்கு
இப்போது எப்படி ஞானோதயம் வந்தது?
உலகமே சொல்கிறது அவன்தான் ஹிட்லர் என்று
நீ சொல்கிறாய் என் அண்ணன் ஹிட்லர் என்று.
அவன்தான் ஹிட்லர் என்று
சொல்ல உனக்கு துணிவில்லையா?
உன் நாக்கு குலைந்து விட்டதா?
பற்கள் கிட்டித்துக் கொண்டனவா?
அப்போது நீ எங்கே இருந்தாய் என்று சொல்?
அந்த ஹிட்லரின் முதுகை தட்டிக் கொடுத்தாளே
முசோலியின் வாரிசு,
அவளுக்கு பின்னால் இருந்தானே தமிழ் பேசியே
கழுத்தை அறுத்த நயவஞ்சக நாய்,
அவனுக்கு பின்னால் அல்லவா இருந்தாய்?
ஹிட்லர் சொன்னான் உலகே உன்னை அழிப்பேன் என்று
என் அண்ணன் சொன்னான் உலகே என் இனத்தை காப்பாற்று என்று
இப்போது சொல் என் அண்ணனா ஹிட்லர்?
ஈழத்தில் நடந்தது கேட்டு பதறிய என் அண்ணனின்
ரத்தம் துடித்தது, அது வார்த்தைகளில் கொட்டியது
என் அண்ணனின் வார்த்தைகள் செருப்பால் அடித்தது போல இருக்கிறதா?
இல்லை துப்பாக்கி தோட்டாவாக இருக்கிறதா சொல்?
இவ்வளவும் நடந்த பின்னும் பேசிக்கொண்டு மட்டும் இருக்கிறானே?
அவன் காந்தியின், வல்லளாரின் வழிவந்தவன் அல்லவா?
இப்போது சொல்
நாயிடம் இல்லை, பன்றியிடம் இல்லை,
என் தாயின் மாரில்தான் நீயும் அமுதுண்டாயா என்று?
நீ எங்கே நிற்க வேண்டும் என்று நீயே யோசி.
இந்த சொற்கள் உன்னை புண்படுத்த அல்ல
உன் வார்த்தைகளை தவிர்க்க. புரிந்துகொள்வாய்.
No comments:
Post a Comment