Tuesday, September 13, 2011

எதிரியை கூடவே வைத்திருக்கும் தமிழா எப்போது கண் விழிப்பாய்?



சாதி என்ற கருவியை எவன் கண்டுபிடித்தான்,
எவன் காப்புரிமை பெற்றான் என்று தெரியவில்லை.
ஆனால் அதனை கடைப்பிடித்து, 
உயிரை கொடுப்பவன் மட்டும் தமிழன்.

பகுத்தறிவு படைத்தான், கலை பல கற்றான்
நூல் பல தந்தும் கற்றும் தெளிந்த தமிழன்
சாதி என்னும் சனியனை மட்டும்
முதுகில் கட்டிக் கொண்டான். 

ஆயிரம் அறிஞன் வந்தான், பல்லாயிரம் 
கலைஞன் வந்தான், சாதனை பல படைத்தான்
ஆனால் அவனால் இந்த சாதிச் சனியனை
மட்டும் சாகடிக்க முடியவில்லை. 

தலைவனிடம் திட்டம் இல்லை, கவிஞனிடம் சட்டம் இல்லை
வீரா உன்னை வீழ்த்துவது யாரென்று பார்
உன் முதுகில் உட்கார்ந்திருக்கிறானே
சாதி என்ற எதிரி அவனை திரும்பிப் பார்.

அவனை எப்போது வீழ்த்துவாய்?
எப்போது வீரனாவாய்? 
உன் வீரம் அவனிடம் செல்லாது
உன் விவேகத்தை கூர்மையாக்கு. 

No comments:

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...