Saturday, September 23, 2017

காதலும் வீரமும்

பண்டைத் தமிழர் காதலையும் வீரத்தையும் போற்றினர். ஆனால் தற்போது காதல் என்ற உணர்வை படமாக காட்டி தமிழர்களைச் சுரண்டி சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வருகிறார்கள் கயவர்கள்.

காதல் வீரத்தை அடிப்படையாகக் கொண்டு வரவேண்டும். காதலைச் செய்ய துணிச்சலும், ஏற்படும் விளைவுகளை எதிர்நோக்கும் புரட்சியும் வேண்டும். ஆனால் இன்று கற்பனையால் திரையுலகில் வளர்க்கப்படும் காதலைக் கண்டு இளைஞர்களும் இளைஞர்களும் ஏமாறும், தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

திரைப்படத்தில் காட்டப்படும் காதல் பின் விளைவுகளைக் காட்டாது. அதைக் காட்டினால் பின்னர் காதல் ருசிக்காது. வீரம் சிக்கலானது. அதனால் நேரடி விளைவுகள் ஏற்படும். சினிமாவில் கற்பனை வீரமே காட்டப்படுகிறது. ஒரு தனிமனிதல் திரையுலக கதாநாயகன்களைக் கண்டு வீரத்தைக் காட்டுவாரானால் உண்மை உலகில் அவர் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும். அவர் ரவுடி ஆகிவிடுவார்.

திரைப்படத்தை பார்த்து காதல் வலையில் வீழ்பவரை விட வீரனாக துணிபவர் மிகக் குறைவு. உண்மைகளை உணர்ந்துகொண்டால் தமிழர்களுக்கு சிறப்பு

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...