Thursday, February 6, 2014

பிற்படுத்தப்பட்ட மாணவர்களை துன்புறுத்தும் சாஸ்த்ரா பல்கலை கழக நிர்வாகிகள்

திருச்சி - தஞ்சாவூர் சாலையில் வல்லம் ருகே அமைந்துள்ளது சாஸ்த்ரா பல்கலை கழகம். இந்த பல்கலை கழகத்தில் பொறியியல், சட்டம், டிப்ளமோ படிப்புக்கள் கற்றுத் தரப்படுகின்றன. இந்த பல்கலை கழகம் பிராமணர்களால் நடத்தப்படுகிறது. இந்த பல்கலைக் கழக நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை பாகுபாட்டுடன் நடத்துவதாகவும், அவர்களை துன்புறுத்துவதாகவும் குற்றச் சாட்டு வைக்கப்படுகிறது.

ஒரு அரசு கல்லூரியில் சட்டம் பயில ஒரு ஆண்டிற்கு ரூ. 6000 முதல் ரூ.10000 வரை செலவாகிறது என்றால் இங்கு ஒரு செமஸ்டருக்கு ரூ. 50,000 வரை செலவாகிறது. எனவே இங்கு படிக்கும் மாணவர்கள் பணக்காரர்களும் ஓரளவு அந்தஸ்து உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இங்கு சேர்ந்து படிக்க முடியம். இந்த பல்கலை கழகத்தில் பெரும்பாலும் முக்குலத்தோர், முஸ்லீம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் கஞ்சா புகைக்கும் போது பிடிபட்டார். பல்கலை கழக நிர்வாகிகள் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் பிற்படுத்தப்பட்ட 10 மாணவர்களின் பெயர்களை கூறி அவர்கள்தான் தனக்கு கஞ்சா கொடுத்ததாக கூறியுள்ளார். உடனே பல்கலை கழக நிர்வாகம் அந்த 10 மாணவர்களையும் தற்காலிக நீக்கம் செய்தது.

அந்த மாணவர்களின் பெற்றோர் வந்து நிர்வாகிகளிடம் பேசியபோது உங்கள் பையன்களுக்கு மருத்துவச் சோதனை செய்து அறிக்கை பெற்று வாருங்கள் நாங்கள் சேர்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அந்த மருத்துவமனை போதைப் பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிகிச்சை அளிக்கும் மையமாக  இருக்கவே பெற்றோர்கள் ஆத்திரமடைந்தனர்.

இதற்கிடையில் ஒரு மாணவனின் உறவினர்கள் நிர்வாகிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். 18 ஆண்டுகளாக எங்கள் வீட்டில் வளர்ந்த பையன் ஒழுங்காக இருந்தபோது உங்கள் பல்கலைகழகத்தில் சேர்ந்த 6 மாதங்களுக்குள் எப்படி போதைப் பழகத்திற்கு அடிமையாகுவார்கள் என்று கேட்டிருக்கிறார்கள். உடனே நிர்வாகிகள் மற்ற மாணவர்களை தனித்தனியாக அழைத்து அந்த மாணவன் மட்டும்தான் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்று சொன்னால் விட்டுவிடுவதாக சொன்னதாக கூறப்படுகிறது.

அதன்பின் அவர்கள் மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சோதனை செய்தபோது அவர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய அறிகுறிகளே இல்லை என்று தெரிய வந்தது. அந்த அறிக்கையை மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு எடுத்துச் சென்றபோது வைஸ் சான்சலர் வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் வரும்வரை காத்திருக்குமாறு சொன்னதாகவும் கூறப்படுகிறது. இந்த அலைக்கழிப்பு எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாகவே இந்த பல்கலை கழகத்தில் பிராமணர் - பிராமணர் அல்லாதோர் என்ற பாகுபாட்டின் அடிப்படையில் மாணவர்கள் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மாணவர்களை மிரட்டுவதற்காகவே சட்டப்பிரிவின் தலைவராக பணிபுரிந்து வரும் ஜான்சன் என்ற பேராசிரியரை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதாக பல்கலை கழகத்தின் எழுப்பப்படும் குற்றச் சாட்டு பற்றி டீன் வைத்தி அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, மாணவர்கள் மீது அவ்வாறு எந்தவித பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று கூறினார். மேலும், தங்கள் பல்கலைக் கழகம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், இந்தக் காலத்தில் அதுபோல எந்த புகாரும் எழவில்லை என்றும், அவ்வாறு சொல்லப்பட்டால் அது ஆதாரமில்லாத புகார் என்றும் கூறினார். மேலும் ஜான்சன் என்ற பேராசிரியரே தங்கள் பல்கலை கழகத்தில் பணிபுரியவில்லை என்றும் கூறினார்.

பள்ளி மாணவர்களையே அடிக்கக் கூடாது என்று சட்டம் இருக்கும் இக்காலத்தில் இந்த பல்கலை கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களையும் அடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த பல்கலை கழகத்தை நடத்துபவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் பினாமி என்றும் கூறப்படுகிறது.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்களுக்கு விசேஷ யாகங்கள் நடத்தப்படுவதுண்டு. இந்த யாகங்களில் மாணவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
•••••••••••••••••••

10 comments:

Anonymous said...

நான் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவன். இப்பிரச்சனைக்கு தவறு செய்த மாணவன் மட்டுமே காரணம். அது வேறு. இதற்கும் பிற்படுத்தப்பட்ட / பார்பனிய /ஜாதிசார் விஷயங்களை பொய்யாக திணிக்க வேண்டாம் .

பெருமாள் தேவன் செய்திகள் said...

அப்படியானால் அந்த மாணவன் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதில் என்ன பிரச்சனை?

Anonymous said...

கையும் களவுமாக பிடிபட்டவன் அந்த மாணவன் மட்டுமே. மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே தவிர, நிரூபிக்கப்படவில்லை. அதனால் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கும், பார்ப்பனர்களாகிய நிர்வாகிகளை, ஜாதியின் பெயரால் பொய்யாக களங்கம் விளைவிக்க வேண்டாமே.. :/

பெருமாள் தேவன் செய்திகள் said...

இதில் நிர்வாகிகள் மீதுதான் குறை கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. ஆனால் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இதில் சாதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை.

பெருமாள் தேவன் செய்திகள் said...

இதில் நிர்வாகிகள் மீதுதான் குறை கூறப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் மீது குற்றம் சாட்டப்படவில்லை. ஆனால் நிர்வாகிகள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை துன்புறுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இதில் சாதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதுவும் கூறப்படவில்லை.

Anonymous said...

எல்லாம் சரிதான் ஐயா.. ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன்.. இந்த கல்லூரியில் நிர்வாகிகள் பிராமணர்கள் தான். இருந்தாலும் மாணவர்கள் பிராமணன் / பிராமணன் அல்லாதவன் என்றெலாம் பாகுபாடு காண்பிக்கப்படவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அவர்கள் நன்கொடை ஒரு பைசா கூட வாங்குவதில்லை. செமஸ்டருக்கு 40000 ரூபாய் என்பது மற்ற அனைத்து Deemed பல்கலைக்கழகங்களிலும் நடைமுறையே.. நீங்கள் கூறும் 10000 ரூபாய் என்பது Merit ல் அண்ணா பல்கலை.யின் கீழ்வரும் கல்லூரிகளில் மட்டுமே.. எனவே 40000 என்பது நியாயமான கட்டணம் தான்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

நீங்கள் அங்கு பணிபுரிகிறீர்களா?

Anonymous said...

நான் அந்த கல்லூரியில் பயிலும் மாணவன்.

புகழேந்தி பொறியாளர் said...

நானும் இந்தக் கல்லூரியில்தான் அண்ணா படிக்கிறேன், மாணவர்களிடம் எந்த வேறுபாடும் காட்டுவதில்லை.. நல்ல நிர்வாகம்.

பெருமாள் தேவன் செய்திகள் said...

நல்லது சந்தோஷம். நமது நோக்கம் அந்த பல்கலை கழகத்தைப் பற்றி அவதூறாக எழுதுவது கிடையாது.

அதேநேரத்தில் ஒரு மாணவன் தெரியாத்தனமாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டாலும் கூட அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது. அவனை தண்டிப்பதா? அல்லது அவனுக்கு வேறு விதமாக நடத்துவதா? என்பவை போன்றவைதான் நாம் முன் வைக்கும் கேள்விகள். மேலும் மாணவர்கள் அடிக்கப்படுவதாக கூறப்படுகிறதே? அது பற்றி உங்கள் கருத்து என்ன? அங்கு ஜான்சன் என்பவர் பணிபுரிகிறாரா இல்லையா? அதை ஏன் வைஸ் சான்சலர் மறுக்க வேண்டும்?

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...