Saturday, August 17, 2013

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

கல்லூரி மாணவருக்கு உதவி தேவை

நண்பர்களே, சொந்தங்களே,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா, தட்டான்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திரனின் மகன் பிரியதர்ஷன் (22).

இவரது தாய் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்து விட்டார். இவரது தந்தை ஒரு வருடம் முன்பாக இறந்து விட்டார்.

தற்போது இவர் தன் தம்பி பிரகதீஸ்வரன் (18), தங்கை பிரகதீஸ்வரி (13) ஆகியோருடன் வசித்து வருகிறார். இவரது தம்பி சோப்பு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இதை வைத்துதான் இவர்களின் குடும்பம் நடைபெறுகிறது. இடையிடையே இவர் வேலை செய்து வருகிறார்.

டிப்ளமோ (ஆட்டோ மொபைல்) படித்த பின்னர் இவர் இந்த ஆண்டு சிவகங்கை பாண்டியன் சரஸ்வதி யாதவா என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தார். டிப்ளமோ படித்துள்ளதால் இவர் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்தார். ஆனால் மூன்று நாட்கள்தான் கல்லூரிக்குச் செல்ல முடிந்தது. இவர் பகுதிநேர பணிகளைச் செய்து படிப்பை ஓட்டிவிடலாம் என்று நினைத்தார்.  மேலும் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த ஒருவர் தனக்கு கிடைக்கும் உதவித் தொகையை இவருக்கு கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். அந்த தைரியத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டார்.

ஆனால் தம்பியை படிக்க வைக்க முடியாத நிலையில் இவர் படிப்பது பலரது கேள்வியை எழுப்பியது. மேலும் காலையில் உணவு சமைக்க வேண்டியிருந்ததாலும் இவரால் படிப்பைத் தொடர முடியவில்லை. உதவி செய்வதாக கூறியவராலும் உதவி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் கல்லூரிக்குச் செல்லாமல் இவர் வேலை தேடி வருகிறார். இவருக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. ஆனால் அனைவரும் அவரது சான்றிதழை கேட்கிறார்கள். சான்றிதழ் கிடைத்தால் மதுரை வாடிப்பட்டி டிராக்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

ஆனால், இவர் படித்த கல்லூரியில் இவர் சான்றிதழைக் கேட்டபோது, சான்றிதழ் சரிபார்ப்பதற்காக சென்னை அண்ணா பல்கலைகழகத்திற்கு அனுப்பட்டுள்ளது, அது செப்டம்பர் முதல் வாரத்தில் கிடைத்து விடும் என்கிறார்கள். அதோடு கல்லூரியில் சேர்ந்து விலகுவதால் இந்த ஆண்டுக்கான கட்டணத்தை (ரூபாய் 20,000) செலுத்தச் சொல்கிறார்கள். பிரியதர்ஷன் இந்தத் தொகையை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்.

இவர் தனக்கு தனது சான்றிதழைப் பெற்றுத் தந்தால் பேருதவியாக இருக்கும் என்று சொல்கிறார். எனவே நண்பர்களே, தங்களால் இயன்ற உதவியைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அறிமுகமானவர்கள் இருந்தால் இவருக்கான கட்டணத்தை குறைக்க அல்லது தள்ளுபடி செய்து இவரது சான்றிதழைப் பெற்றுத் தர முயற்சி செய்யலாம்.
நன்றி.

தொடர்புக்கு பிரியதர்ஷன் - 9600768084

1 comment:

பெருமாள் தேவன் செய்திகள் said...

இந்த தகவலைக் கண்ட திரு மேகநாதன் அவர்கள் இதனை தேசிய பார்வேர்டு பிளாக்
கட்சியின் தலைவரான திரு எஸ்.ஆர். தேவருக்கு தெரிவித்தார்கள்.

அவர் கல்லூரி நிர்வாகிகளிடம் பேசி அந்த மாணவர் கட்ட வேண்டிய கட்டணத்தை
ரத்து செய்ய வேண்டிக் கொண்டார். கல்லூரி நிர்வாகத்தினரும் அதற்கு ஒப்புக்
கொண்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...