மதுரை விமான நிலையத்திற்கு
தேவர் பெயரைச் சூட்டக்கோரி ஐஎன்ஏ வீரர் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் மார்ச் 5ம்
தேதி பேரணி நடத்துகிறார்.
அருப்புக்கோட்டையைச்
சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் (86). இவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய
தேசிய ராணுவத்தில் பணிபுரிந்த வீரர் ஆவார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன்
15 ஆண்டுகாலம் அரசியல் சமூக பணி செய்தவர் ஆவார்.
இவர் ஒவ்வொரு ஆண்டும்
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜையில் தவறாமல் கலந்துகொள்கிறார்.
தற்போது இவர் மதுரை
விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரைச் சூட்ட முயற்சி செய்து
வருகிறார். தனது கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் 5ம் தேதி மதுரையில் பேரணி நடத்துகிறார்.
இதற்காக இவர் அனைத்துக்
கட்சித் தலைவர்களின் உதவியை நாடி வருகிறார். பார்வேர்டு பிளாக் கட்சி எம்எல்ஏ கதிரவன்
இவருக்கு உதவுவதாக தெரிவித்துள்ளார். இவர் தனது கோரிக்கை மற்றும் பேரணிக்கு ஆதரவளிக்குமாறு
வேண்டி திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் சந்தித்து
வருகிறார்.
No comments:
Post a Comment