Thursday, October 20, 2011

என்னை யாரும் ஜெயிக்க முடியாது

ஒரு குரு தனது சிஷ்யர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். பலவிஷயங்களை பேசிய அவர், என்னை யாராலும் ஜெயிக்க முடியாது என்று கூறினார்.

அதுவரை அமைதியாக கேட்டு வந்த சிஷ்யர்களில் ஒருவர், “அதெப்படிச் சொல்கிறீர்கள்? உலகில் உடல் பலம் வாய்ந்த பலசாலிகள் ஏராளமாக உள்ளனர்என்று கேட்டார்.

“உண்மைதான். இருந்தாலும் என்னை யாரும் ஜெயிக்க முடியாது. ஏனெனில், அவர்கள் என்னை தோற்கடிக்கும் முன்பாகவே நான் அவர்களிடம் சரணடைந்து தோற்று விடுவேன். அப்புறம் எப்படி அவர்களால் என்னை ஜெயிக்க முடியும்? என்று கேட்டார் அந்த குரு.

ஓஷோவின் குட்டிக் கதைகளிலிருந்து.  

நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...