மத்திய அரசின் சலுகைகளை மட்டும் பெற தமிழக அரசு குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டு சீர் மரபினர் சாதிச் (DNC) சான்றிதழ் வழங்கி வந்த சாதிகளுக்கு சீர் மரபு பழங்குடியினர் (DNT) சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்னமும் ஆன்லைனில் இந்தச் சாதிச் சான்றிதழ் வழங்க வகை செய்யப்படவில்லை. எனவே வட்டாட்சியர்கள் இந்தச் சான்றிதழ் வழங்க மறுத்து அல்லது தாமதித்து வருகின்றனர். சில மாவட்டங்களில் சான்றிதழை கையால் எழுதிக் கொடுக்கிறார்கள். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்து சான்றிதழ் பெறலாம். வட்டாட்சியர் தாமதப் படுத்தினால் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தால் ஓரிரு நாட்களில் கொடுத்து விடுவார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற்று வைத்துக் கொள்வது மத்திய அரசு சலுகைகளைப் பெற உதவும். இந்த உத்தரவைத் தொடர்ந்து எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது.


No comments:
Post a Comment