Thursday, February 18, 2021

கண்டன ஆர்ப்பாட்டம்

 கள்ளர்களை குற்றப்பரம்பரையினர் என்று சுட்டிக்காட்டிப் பேசிய தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 17.02.21 அன்று (தேனி மாவட்டம்) தேவதானப்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



Sunday, February 14, 2021

தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கம்

 கடந்த ஆறு ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பின்னர் தேவதானப்பட்டி பிரமலைக் கள்ளர் சமுதாயச் சங்கத்தை வெற்றிகரமாக பதிவு செய்துள்ளேன். பதிவுச் சான்றிதழை சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது எடுத்த படம். 








Saturday, February 13, 2021

விவசாயக் குழுவிற்காக டிராக்டர் வாங்க சென்றபோது


 கடந்த 11-02-2021 அன்று தேனியில் விவசாய கருவிகள் கண்காட்சியில் எங்கள் விவசாயக் குழுவிற்காக மாநில அரசு வழங்கும் டிராக்டரை வாங்க சென்றபோது எடுத்த படம்.

Tuesday, January 12, 2021

மண்ணின் மைந்தர்களும் நாயக்கஅரசும்

பாகம் : 1
பாண்டிய மன்னனின் மனதை ஆட்கொண்ட நகரம் என்பதனாலே, பாண்டிய மன்னன் தன்னுடைய தலைநகரமாக மதுரையை 2500 வருடங்களாக தொடர்ந்து வைத்திருந்தனர்.
அப்படிப்பட்ட பாண்டிய தேசம் பாண்டியர்களின் சகோதர யுத்தத்தால் கிபி1335 முதல் 1378ஆம் வரை இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் இருந்தது.
கிபி1378ல் கம்பண உடையார் என்கிற விஜயநகர இளவரசன், மதுரை சுல்தான் சிக்கந்தர் ஷாவை தோற்கடித்து வெளியேறுகிறார்
பின்பு கிபி1378 முதல் கிபி1422வரை சுமார் 44 ஆண்டுகள் மதுரை, ஒரு குழப்பமான சூழ்நிலையில் விஜயநகர அடைப்பைக்காரர்களான கவரை,கம்பளத்தாருக்கும் என்கிற நாயக்கர்(தளவாய்), பாண்டிய மன்னர்களும் தொடர் மோதலில் நிலையற்ற ஆட்சியில் இருந்தது.
பின்பு கிபி1422ல் பராக்கிரம பாண்டியன் மீண்டும் மதுரையில் பாண்டியர்களின் ஆட்சியை நிறுவினார். தொடர்ந்து மதுரையை 107வருடங்களாக ஆட்சி செய்தனர்.
அதன்பின்பு கிபி1529ல் மதுரை மாநகர் நாயக்கர் ஆட்சியில் கீழ் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்கள் தங்களுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்ள தென்காசிக்கு சென்று “தென்காசி பாண்டியர்” என்று கிபி 1618வரை ஆட்சி செய்தனர்.
நாயக்கர் என்பது ஒரு சாதி கிடையாது, அது ஒரு தளபதி என்பதன் பட்டமாகும். இதனை தூய தமிழில் நாயகர் என்பார்கள்.
புதுக்கோட்டை பாண்டியர் கல்வெட்டுகளில் நாயகர் என்கிற பாண்டிய அதிகாரிகளை காணலாம். மேலும் நாயகர் பட்டம் இன்றும் கள்ளர்களுக்கு வழங்கப் பெருவதை புதுக்கோட்டை,தஞ்சையில் காணலாம்.
ஆக தமிழ் நாட்டில் அது நாயகர் என்றும்,
அதே தமிழ் நாட்டில் தெலுங்கு அரசர்களின் தளபதிகளாக இருந்த கவரை,கம்பளத்தார்,தொட்டியர்,பலிஜா போன்றோர் தங்களை நாயக்கர் என்று அழைத்துக் கொண்டனர்.
கர்நாடகா,ஆந்திராவில் - நாயுடு என்றும்
ஒரிசாவில் - நாயக் என்றும்
வட இந்தியாவில் - நாய்க் என்றும் வழங்கப் பெறுகிறது.
இந்திய இராணுவத்தில் நாய்க் என்கிற பதவி இன்றும் உள்ளது.
ஆக கவரை,கம்பளத்தார்,தொட்டியர் போன்றோர் நாயக்கர் என்கிற அடையாளத்தில் நின்றனர்.
அதேபோல் அவர்களுக்கு சேவகம் செய்ய அனுப்ப கவுடா என்கிற கன்னட சேவகர்கள் “அனுப்ப” என்கிற அடைமொழியை தவிர்த்து கவுண்டர் என்று சாதிச் சான்றிதழ்கள் வாங்குகிறார்கள்.
இவர்களே இன்று அலங்கா நல்லூர் என்கிற புதிய ஜல்கிக்கட்டை உருவாக்கி, அதனை நன்கு தொழில்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் இதே நாயக்கர் ஆட்சியில் பல அன்னிய குடிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் நெசவாளர்களுக்கு பதிலாக பட்டுனூல்காரர்கள் என்கிற செளராஸ்ட்ரா வகுப்பினர் மற்றும் கன்னட தேவாங்கு ஜவுளி செட்டியார்களையும் குடியேற்றினர்.
தமிழ் ஆசாரிகளுக்கு பதிலாக விஸ்வகர்மா என்கிற தெலுங்கு கம்மாளர்களை குடியேற்றினர்.
தமிழ் பொற்கொல்லர் ஆசாரிகளுக்கு பதிலாக கோமுட்டி செட்டி,கன்னட மஞ்சப்பு செட்டிகள் குடியேற்றப்பட்டனர்.
தமிழ் வணிகர்களுக்கு பதிலாக தெலுங்கு மனை செட்டியார்கள்,ஆயிரம் வைசியர்,பாத்திர செட்டி,வளையல் செட்டி குடியேற்றினர்.
தமிழ் பண்டாரங்கள்,வேளார்கள் கோவிலை விட்டு வெளியேற்றப்பட்டு தெலுங்கு பிராமணர்கள்,விசுவ பிராமணர்கள் அமர்த்தப்பட்டனர்.
இதுபோக இதர சேவக தெலுங்கு குடிகளான முத்துராச்சா, முடிராஜூ ,முத்திரிய நாயுடு, முத்திரிய ராவ்,முத்திரிய நாயக்கர் என்பவர்களையும் குடியேற்றினர். ( தற்போது இவர்கள் தமிழ் சாதியான வலையருடன் சேர முயற்சி செய்கிறார்கள்)
மேலும்,
ஒட்டர்
சில்லவார்
தாசரி
போயர்
கம்சலா
சவளக்காரர்
ரெட்டியார்கள் (கொண்டா,காப்பு உட்பட)
காட்டு நாயக்கர் குடியேற்றப்பட்டனர்.
கள்ளர் நாடுகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வரிவசூல் செய்ய மணிக்காரர் என்கிற ஜாதியை உருவாக்குகிறார்கள்.
போர் செய்வதற்கு தமிழ் போர்குடிகளை தவிர்த்து, சத்திரிய ராஜூ, தொகட்ட வீர சத்திரியர்,உக்கிரகுல சத்திரிய நச்யக்கர் போன்றோர் குடியமர்த்தப்படுகின்றனர்.
தொழில் சேவக ஜாதிகளாக மாதாரி,சக்கிலியர்,ஆதி ஆந்திரர்,ஆதி கன்னடர்,டொம்மர்,குடியமர்த்தப் படுகின்றனர்.
இப்படியாக மதுரை மட்டும் அல்லாமல் திருச்சி,தஞ்சை என அனைத்து தலை நகரங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட குடிகளை குடியேற்றினர்.
தமிழகத்தை விஸ்வநாத நாயக்கரின் சேவகர் அரியநாத என்ற தொண்டைமண்டலமுதலியாரால் 72பாளையங்களாக பிரித்து தங்களது பிரதிநிதிகளை நியமித்தனர்.
இதனால் பல இடங்களில் மதுரை மண்ணின் மைந்தர்களான கள்ளர் நாட்டார்களின் கிளர்ச்சி ஏற்பட்டது.
நாயக்க மன்னர்கள் அவர்களை அடக்க பல இடங்களில் போர் செய்தனர். கள்ளர் நாடுகளில் இருந்து நாயக்க அரசின் மேலாண்மையை ஏற்க பல பிரதானிகளை அனுப்பினர்.
கள்ளர் நாட்டார்கள் அவர்களுடைய மேலாண்மையை ஏற்றார்களா...?
சமாதானமானார்களா...?
தோற்கடிக்கப்பட்டார்களா..?
என்பதனை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.........!
அன்புடன்
சோழபாண்டியன் சேர்வைக்காரர்
ஏழுகோட்டை நாடு

Sunday, November 22, 2020

ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்


 ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம் நேற்று 21- 11-2020 திருவரங்கம் திருச்சியில் இனிதே துவக்கப்பட்டது! இது பிறப்புவழி சாதிக்கு முந்தைய நிலையையும், திணைவழி குடிகளுக்கு பிந்தைய நிலையில் உள்ள குடிகளை, 18 குடிகளாக கொண்டு உருவாக்கம் செய்து,இது அனைத்து தமிழருக்குமான அடிப்படை அமைப்பாக செயல்படும் ஒரு மன்றம் அமைக்கப்பட்டு,அனைத்து குடிகளின் குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் உச்சநீதி குடிகளின் மன்றமாக செயல்படும், இன்னும் நிறைய விடையத்தை பற்றிய கொள்கைகள் முன்மொழியப்பட்டு தீர்மானங்களாக ஏற்கப்பட்டது....இதை ஒவ்வொன்றாக பிறகு வெளியிடுவேன்..... இதன் முழுவிபரத்தை மாநாடு போட்டு வெளியிடுவோம்......

ரெ.ரவிராசாளியார்
நிறுவனர் & தலைவர்
ஆதித்தமிழர் 18 தொல்குடிகளின் சங்கம்
உலக மக்கள் இயற்கை வாழ்வியல் கழகம்

Tuesday, November 17, 2020

பத்திரம் பிழைத்திருத்தல்

 பத்திரம் பிழைத்திருத்தல்

பற்றிய தகவல்..!
கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல்
பத்திரத்தின் 20 தகவல்கள்....
1. பத்திரத்தில் ஏற்படும் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்யவே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) என்பர்.
2. கிரயம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம் அடைமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
3. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பிழைத்திருத்தல் இருக்கிறது.
4. திசைகள், ஊர்ப் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் சாதாரணப் பிழைகள்.
5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையென்றால் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது.
6. செக்குப் பந்தியில் இன்னார் வீட்டுக்கு வடக்கே என எழுதுவதை இன்னார் வீட்டுக்கு கிழக்கே என எழுதுவது. பட்டா எண்ணைப் பத்திரத்தில் தவறாகக் குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாகக் குறிப்பிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களைத் தற்போது எழுதும்போதும் தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதிவிடுவது. கதவு எண்கள், ஊர்ப் பெயர், தன் பெயர் ஆகியவற்றைத் தவறாக எழுதுவது.
7.கிரயப் பத்திரத்தில் வரைபடம் மேப் விடுபட்டுவிடுவது , மின் இணைப்பு எண் மாற்றி எழுதிவிட்டால், தெருப்பெயர் மாறி விட்டு இருந்தால் திசைகள், எல்லைகள் தவறுதல்கள் எல்லாம், சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தி விடலாம்.
8. சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ. 100/- மொத்த செலவும், 500 க்குள் முடியும்.
9. உரிமை மாற்றம் பிழைத்திருத்தலில் 2ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என்று எழுதி விடுவது ஆனால் 2 ஏக்கர் 1 சென்ட்டுக்கு பணம் கொடுத்து இருப்பார்கள், ஆனால் இந்தப் பிழையால் பட்டா மாறுவது தடையாகி விடும். இதனைத் திருத்துவதற்கு உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
10. மேற்படி பிழைத்திருத்தல் பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு அதற்கு உண்டான அன்றைய சந்தை வால்யூவை வைத்து அதற்குண்டான கட்டணம் செலுத்தினால்தான் இந்த உரிமை மாறும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.
11. குறைவான சதுரஅடி நிலத்தை அதிக சதுரஅடியாக எழுதினால் அதனை தற்பொழுது திருத்தம் செய்யும்போது ஏற்கனவே சார்பதிவகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திரும்பிப் பெற்று கொள்ள முடியாது.
12. சொத்து விற்ற நபர் பிழைத்திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்துப் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம்.
13. விற்ற நபருக்கு, வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாம் வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம், பிழைத்திருத்தல் போடலாம். அதற்கும் வழி இல்லை என்றால் நீதிமன்றம் தான் நாட வேண்டும்.
14. சொத்தை விற்ற நபர் உயிருடன் இருக்கிறார், பிழைத்திருத்தல் போட வர மறுக்கிறார் என்றாலும், நீதிமன்றம் நாடி அதனைத் தீர்க்க வேண்டும்.
15. சர்வே எண், விஸ்தீரணம் , நீள அகல அளவுகள், என அனைத்துமே பிழையாக இருந்தால் , பிழை திருத்தம் பத்திரத்திற்குப் பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கும்.
16. சில ஆவணங்களில் ஏற்படும் சிறு சிறு தவறுகளை உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிசியல் தவறுகளை பத்திரபதிவு செய்துவிட்ட பிறகு கண்டுப் பிடித்தால் அதனை அமிலம் வைத்தோ ஒயிட்னர் போட்டோ நீங்ளே திருத்தி விடுவது முற்றிலும் தவறு.
17. மனை எண் 10 யை மனை எண் 11 என்று தவறாக டைப் ஆகி இருந்தால், தாங்கள் பத்திர பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று பேனாவில் போட்டாலும் பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில்11 என்றே இருக்கும்
18. இது போன்ற திருத்தம் சட்ட விரோத திருத்தமே இதனால் எந்தவித உரிமை மாற்றமும் வாரது. எவே நிச்சயம் பிழை திருத்தல் பத்திரம் போட வேண்டும்.
19. ஆவணங்களில் எழுதப்பட்ட ஷரத்துக்களில் சில வார்த்தைகள் அடிக்கப்பட்டு மாற்றப்பட்டு இருப்பின் அடித்தல் திருத்தல் வரி பிளவுக்கு நேராகவோ , குறுக்காகவோ இரண்டு நபர்களும் சான்று கையொப்பம் இட வேண்டும்.
20. சொத்து விபரம், சர்வே எண்ணில், வரிபிளப்பு ஏற்படுத்தி திருத்தி இருந்து அட்டேஸ்டேசன் வாங்காமல் இருந்தால் அந்த பதிவு நீதி மன்றம் செல்லாது என்றே தீர்ப்பளித்து இருக்கிறது.
நன்றி :Mr.
Murugappan Muruga

Sunday, November 15, 2020

ராஜேந்திர சோழன் காலத்து தஞ்சை கள்ளர் வீரன்

கிபி 1015 ஆம் ஆண்டு சோழ பேரரசை மாமன்னர் ராஜேந்திர சோழத்தேவர் ஆட்சி செய்துக் கொண்டிருந்தார். அந்த கால கட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லை வாயில் மாசிலாமணி ஈசுவரர் கோயிலுக்கு அச்சரப்பாக்கம் இசக்க நறிவாளன் என்பவர் 1200 குழி நிலத்தை தானமாக அளித்தார்.

கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை அதே பகுதியில் வாழ்ந்த நிலவுடைமையாளர்களிடம் இருந்து இசக்க நறிவாளன் விலைக்கு வாங்கியுள்ளார். நிலத்தை விலைக்கு அளித்தவர்கள்:-
"தஞ்சை வீரன் சூற்றி கள்ளன்"
'தஞ்சை வீரன் நாகன் அறியான்"
"அம்பத்துழான் சதுரன் ஒற்றி"
இம்மூவர் வசம் இருந்து 1200 குழி நிலம் பெறப்பட்டு திருமுல்லைவாயில் நாதருக்கு திருப்பணியாக கொடுக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டுகளில் வரும் "தஞ்சை வீரர்கள்" தஞ்சையில் இருந்து குடிபெயர்ந்து தொண்டை மண்டலத்தில் வாழ்ந்தாலும், தங்களது பெயர்களில் தஞ்சையையும் சேர்த்தே பயன்படுத்தி வந்துள்ளனர்.
இவர்களை வீரன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் , சோழப்படையில் பணியாற்றிய முக்கிய தளபதிகள் என அறியலாம். கள்ளன் என குறிப்பிடப்பட்டு இருப்பதன் மூலம் இவர்கள் கள்ளர் மரபினர் என்பது தெளிவாகும்
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் கள்ளர்களின் தனி படைபற்று இருந்ததை முதலாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு " காடும் நாடும் நகரங்களும் கள்ளப் பற்றும்" என குறிப்பிடுகிறது. (கல்வெட்டு எண் : 103 of 1897)
தஞ்சையில் பெரும்பான்மையாக வசிக்கும் கள்ளர் மரபினர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலவுடைமை கொண்டவர்களாகவும், படைத் தளபதிகாளவும் இருந்துள்ளதை இக்கல்வெட்டு நமக்கு உணர்த்துகிறது.
( கல்வெட்டு எண்: 684 of 1904)
தொகுப்பு: சியாம் சுந்தர் சம்பட்டியார்




நேதாஜி இளைஞரணி

  கடந்த 04.11.2024 அன்று நேதாஜி இளைஞரணியின் சார்பாக ரத்ததான நிகழ்ச்சி நடத்தியதைப் பாராட்டி தேனி மாவட்ட ஆட்சியர் சார்பில் பாராட்டுச் சான்றிதழ...